Main News
றிஷாத் வரனும்..! இல்லன்டா திறக்க விடவே மாட்டோம்!
ஏ.எச்.சித்தீக் காரியப்பர் 11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் தாரபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தை திறந்து வைப்பதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தலைமையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்த போது, அங்கு ஒன்று கூடிய அக்கிராம முஸ்லிம் பெண்கள் குறித்த நிலையத்தை திறக்க எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே,…
மஹிந்த குடும்பத்தின் காலை உணவுச் செலவு 94 இலட்சம்
மஹிந்த ராஜபக்ச குடும்பமும் சுற்றமும் ஒருநாள் காலை உணவிற்காக 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச குடும்பமும் நண்பர்களும் ஒருவேளை காலை உணவிற்காக மட்டும் 94 இலட்ச ரூபாவினை செலவிட்டுள்ளனர். அலரி மாளிகைக்கு உணவு வழங்கிய ஹில்டன் ஹோட்டல் 94 இலட்ச ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது. 2013ம் ஆண்டு…
சந்திரிக்கா பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்கவில்லை!- ஜனாதிபதி
சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுநிகழ்வு இதுவாகும். மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமைக்கு எதிராக சந்திரிகா கடும் விமர்சனத்தை வெளியிட்டார் என்ற செய்திக்கு மத்தியிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மேலும் உரையாற்றிய ஜனாதிபதி…
குற்றவாளிகளுக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம்!- அஸ்கிரி பீடாதிபதிகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது நேர்மையான நாட்டுக்கு சேவையாற்றக் கூடியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்குமாறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும அரசியல் கட்சித் தலைவர்களிடம் இரண்டு பீடாதிபதிகளும் கோரியுள்ளனர். குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மக்களிடம் கோரியுள்ளனர்.
திருமண பந்தத்தில் இணைந்த ஹிருணிகா
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார். இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிப்புரியும் ஒருவரையே ஹிருணிகா திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தககது.vk
அமைச்சர் றிஷாதுக்கு ஒரு திறந்த மடல் …
அஸ்ஸலாமு அழைக்கும் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் இடம்பெற்ற ஆண்டாக இவ்வாண்டை குறிப்பிடலாம் அதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்று சொல்லிகொள்ளுவதில் பெருமை கொள்கிறேன் 1990ல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான வட மாகாண முஸ்லிம்களில் நீங்களும் ஒருவர் என்றவகையில் தான் படிக்கும் காலத்திலேயே தான் சார்ந்த மக்களுக்குத் தன்னாலியன்ற சேவைகளைச் செய்து வந்து அரசியலில் நுளைக்கபட்டவர் என்றவகையில் அம்மக்களின் அனைத்துவித அபிவிருத்தி ஆகட்டும் கல்வியாகட்டும் மீளகுடியமர்தலாகட்டும் உங்களின் பங்களிப்பு அளப்பரியது அதனாலேயே…
மக்காவை படம் பிடித்த துபாய் செயற்கைகோள்
2013-ம் ஆண்டு துபாய்சாட்-2 செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. உயர்தரமான படங்களை பிடிக்கும் வகையில் இந்த செயற்கைகோள் ஏற்படுத்தப்பட்டது. இது அமீரகத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். இதனை அமீரகம் மற்றும் கொரியாவைச் சேர்ந்த என்ஜீனியர்கள் இணைந்து உருவாக்கினர். இந்த செயற்கைகோள் தயாரிப்பில் அமீரக என்ஜீனியர்களின் பங்கு மகத்தான ஒன்று. உலக முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் துபாயைச் சேர்ந்த செயற்கைகோள் மெக்காவை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை முகம்மது பின் ராஷித் விண்வெளி…
உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்!
உடல் முழுமையாக ஊனமுற்ற நிலையிலும் திருகுர்ஆனின் தொடர்ப்பில் இருக்கும் இளைஞன்! உடல் ஊனமுற்ற நிலையிலும் திருமறை குர்ஆனை ஓதி கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் படத்தை தான் பார்க்கின்றீர்கள் அவரது தோற்றத்தை உற்று நோக்குங்கள் அந்த நிலையிலும் அவர் படைத்தவனையும் அவனது வேதத்தையும் மறக்காமல் மதிக்கும் செயல் உண்மையிலேயே அவரது உயர்ந்த இறையச்சத்திர்கு சான்றாக நிர்கிறது ஆரோக்கியம் பெற்றவர்களே சிந்தியுங்கள் வேகமாக திருமறையை நோக்கி திரும்புங்கள் கிருபையுள்ள ரஹ்மானே யா அல்லாஹ் நாங்கள் உயிருடன் இருக்கும் காலம் வரை…
நோன்பாளிகளின் கனிவான கவனத்திற்க்கு!
“மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்” “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்” நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி…
மஹிந்தவும், திருடர்களும் வெற்றி பெற்றால் புதிய அரசாங்கம் அமையாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அடிப்படைவாதிகளும் திருடர்களும் புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவானால் தேசிய அரசாங்கம் அமைக்கும் எமது திட்டம் ஒரு போதும் சாத்தியமாகாது. தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றியிட்டினாலும் எதிர்கட்சி ஆசனத்திலேயே அவர் அமர்வார் என நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஹிந்தவிற்கு வேட்புமனு வழங்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்னும் தீரமானம் எடுக்கவில்லை. இவ்வாறான சதிதிட்டங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு போதும்…
தேர்தலில் களமிறங்கமாட்டேன், அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியையும் இராஜினாமா செய்வதாகவும் இதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவம் தெரிவித்துள்ளார்.vk
நான்கு கட்சிகளின் பெயர் சின்னங்களில் மாற்றம்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவத ற்காக நான்கு கட்சிகள் தமது பெயர் மற்றும் சின்னங்களில் மாற்றங்களைச் செய்திருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. இதற்கமைய அகில இலங்கை தமிழர் மகாசபை தமது தோடம்பழ சின்னத்தை கப்பல் சின்னமாக மாற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் கட்சி மீன் சின்னத்தை கையடக்க தொலைபேசி சின்னமாக மாற்றியுள்ளது. ஜாதிக்க ஹெல உருமய கட்சி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என தனது கட்சியின் பெயரை மாற்றி யுள்ளது. அத்துடன் கட்சியின் சங்கு சின்னமும் ‘வைரம்’மாக மாற்றப்பட்டுள்ளது….
