Main News
விரலிக்காய்களை, சாப்பிட முற்பட்ட 3 மாணவர்களை தாக்கிய நபர்
(க.கிஷாந்தன்) மரத்திலிருந்து விழுந்த விரலிக்காய்களை பொறுக்கி சாப்பிட முற்பட்ட மூன்று மாணவர்களை தாக்கிய நபர் ஒருவரை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் பாடசாலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வீடு ஒன்று முன்பாக இருந்த மரத்தில் இருந்து விழுந்து கிடந்த விரலிக்காய்களை சாப்பிடுவதற்காக அவற்றை பொறுக்கியபோது குறித்த வீட்டில் இருந்த உரிமையாளர்…
இந்தோனேஷியாவில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு..!
இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- ஜூன் 10 ம் திகதி கிடைத்த அறிவித்த லுக்கிணங்க இந்தோனேஷிய தீவொன்றில் 54 பேர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் இலங்கையர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் அகதிகளாகத் தஞ்சமடைந்தவர்களாவர். ஐ. நா. வின் தஞ்சமடைந்தோருக்கான அடையாள…
‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ வாசகம் பொலிசாரால் அகற்றல் – மாத்தளையில் கொடூரச் சம்பவம்
மாத்தளை கொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று நேற்று மாத்தளை நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முச்சக்கர வண்டியில் வந்த போது மாத்தளை பழைய போலிஸ் நிலைய கட்டிடத்தில் இயங்கி வரும் போலிஸ் பிரிவை சேர்ந்த சில காவல் துறையினர் குறித்த குடும்பத்தினர் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த “லா இலாஹ இல்லால்லாஹ் ” என்ற ஸ்டிக்கரை பலாத்காரமாக அகற்றி உள்ளனர். அத்துடன் அங்கு சிவில் உடையில் இருந்த உத்தியோகத்தர் ‘இது அராபிய நாடு அல்ல…
மஹிந்தவை முஸ்லிம்கள் மன்னித்துவிட்டனர்: அஸ்வர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் முஸ்லிம்கள் அவரை மன்னித்துவிட்டார்கள். பொதுத்தேர்லில் அவர் தரப்பில் போட்டியிடுவதற்கு பல முஸ்லிம்கள் முன்வந்திருக்கின்றமை இதனை உறுதிசெய்கிறது என முன்னாள் முஸ்லிம் சமயவிவகார அமைச்சர் எ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக் ஷ தனது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு…
மஹிந்தவின் சிறப்புரிமைகளை உடன் வாபஸ் பெறவேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைச் சலுகைகளை வாபஸ் பெற வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரை வலியுறுத் தும் ஐ.தே.க., முடிந்தால் குருணாகலில் மஹிந்த போட்டியிட்டு வெற்றி பெற்றுக்காட்டட்டும் என்றும் சவால் விடுத்தது. பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே ஐ.தே.க.வின் பேச்சாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தனக்கு 58 இலட்சம் மக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறும் மஹிந்த…
ராஜிவ் காந்தியை தாக்கியவர்தான், பொதுபல சேனாவின் தலைமை வேட்பாளர்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி கம்பஹா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பி.ஜே.பி) சார்பிலேயே இவர் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேவேளை, BJP கட்சியின் தேசிய அமைப்பாளர் வண.விதாரந்தெனிய நந்த தேரர், கொழும்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.
இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் நடத்தப்படும் பேச்சுப் போட்டி
அஸ்ரப் ஏ. சமத் இலங்கை- சீன நட்புறவுச் சங்கத்தினால் சீனா -உலகத்தின் கவனத்தை ஈத்த” பட்டுப பாதை வா்த்தக வட்டாரத்தை மற்றும் 21ஆம் நுாற்றாண்டு கடற் பட்டுப்பாதையை ஒன்றாய் கட்டி எழுப்புவதற்கான திட்டம்” என்ற தலைப்பில் இலங்கையில் உள்ள பாடாசலை மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்களுக்கிடையே மும் மொழிகளிலும் பேச்சுப் போட்டி ஒன்றை ஒழுங்கு படுத்தியுள்ளது. மேற்படி விடயமாக இலங்கை – சீன நட்புரவுச் சங்கத்தின் ஊடக மாநாடு கொழும்பு ஹட்டன் நஷனல் வங்கியின் தலைமையக மாநாட்டு மண்டபத்தில்…
அனைவரும் கைகோர்க்க வேண்டும் – ஜனாதிபதி
பொறாமை, கோபம், குரோதம் என்பவற்றை ஒதுக்கிவிட்டு நட்புறவுடனும் கூட்டொருமைப்பாட்டுடனும் நாட்டை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.vk
விக்ரமபாகு வைத்தியசாலையில்..!
நவசம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 6 ஆம் திகதி முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மீண்டும் ஹஜ் சர்ச்சை: கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை
ஹஜ் குழுவினால் நேற்று உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முகவர்களுக்கிடையிலான கோட்டா மீள்பகிர்வு பட்டியலிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் வழங்கிய ஹஜ் வழிகாட்டல்கள்(Guide Lines SCFR 500/2012) மீண்டும் மீறப்பட்டுள்ளமையினால் கோட்டா பகிர்வினை ஏற்றுக் கொள்ள முடியாதென பெரும்பாலான ஹஜ் முகவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கையருக்கான ஹஜ் கேள்விக்குறியாகியுள்ளது. ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஒரு சுயாதீனக் குழுவினால் நடாத்தப்பட்டாலும்…
ஓகஸ்ட் 5, 6ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு
ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
சிங்களவன் அநாதையாகியுள்ளான்; கண்டுபிடித்த ஞானசாரர்
சிங்களவன் பிறந்த மண்ணில் அநாதையாகியுள்ளான் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இப்போதேனும் நாம் அவர்களை எழுப்ப வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். அதிகார மோகம் காரணமாக ஆட்சியாளர் அதற்கு இடமளித்துள்ளார். றிஷாத் பதியூதின் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர் இந்த அரசாங்கத்திலும் அமைச்சர். காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மஹிந்தவின் வாக்குகளை உடைக்க நாம் வரவில்லை. நாம் யாருடைய வாக்குகளையும் சிதறடிக்க முயற்சிக்கவில்லை. அரசியல்வாதிகளினால் நாட்டுக்கு உரிய சேவை…
