Headlines

என்னைப்பற்றி பொய்பிரசாரம் செய்துவரும் ஹக்கீம் என் சவாலை ஏற்க தயாரா?

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்வாரா என தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தரும் வேட்பாளருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சவால் விடுத்தார். அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்ட வேட்பாளராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உப வேந்தர்…

Read More

தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் ….

– எம்.எப்.எம்.பஸீர் – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஓய்­வு­பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இதற்­கான தீர்­மா­னத்தை ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கொண்­டுள்ளார். இத­ன­டிப்­ப­டையில், சிசிர மெண்டிஸ் இன்று 28ஆம் திகதி தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலை­வ­ராக கட­மை­களை பொறு­பேற்க உள்ளார். சிசிர மெண்டிஸ், ஓய்­வு­பெறும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரி வின் பணிப்­பா­ள­ரா­கவும் குற்றப் புல­னா ய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப்…

Read More

ஐ.ம.சு.கூ .வின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஞ்ஞாபனத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மு.கா. சாய்ந்தமருது போராளிகள் றிஷாத் பதியுதீனுடன் இணைவு

– எம்.எம்.ஜபீர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாணவர் காங்கிரஸ் அமைப்பாளரும் சாய்ந்தமருது மத்திய குழுவின் உப செயலாளருமான, இளைஞர் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையுடன் நெருக்கமான போரளியுமான வீ.எம்.ஆஷிக் தலைமையிலான குழுவினருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 14ஆம் பிரிவு செயலாளரும் மத்தியகுழு உறுப்பினருமான இஷட்.சக்கீ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாந்தமருது 14ஆம் பிரிவு பெருளாளரும் மத்தியகுழு உறுப்பினருமான எஸ்.எம்.சிரான் ஆகியோர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியில் இணைந்து அதன்…

Read More

றிஷாத் மீதான கல்லெறிக்கு அம்பாறையெங்கும் கடும் கண்டனம்

–  ஏ.எச்.எம் பூமுதீன் – அட்டாளைச் சேனையில் இடம்பெற்ற அ.இ.ம.கா வின் கூட்டத்தின் போது அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதல் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஹக்கீம் தரப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் அம்பாறை மாவட்டத்தில் மு.கா. பாரிய வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் மக்கள் கருத்து வெளிப்படுத்துகின்றனர். அ.இ.ம.கா.வின் அம்பாறை வருகை மு.கா.வுக்கு பாரிய சவாலையும் சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read More

அப்துல் கலாமின் மறைவுக்கு றிஷாத் பதியுதீன் அனுதாபம்

சர்வதேச ரீதியில் புகழ் பூத்த அறிஞராக ஆய்வாளராக,ஆராய்ச்சியாளராக மிளிர்ந்து மக்கள் மனங்களில் இடம் பிடித்த முன்னாள் இந்தியாவின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் மறைவு குறித்து தாம் கவலையடைந்துள்ளதாக அன்னாரின்ன வாழ்வுக்கு பிரார்த்திப்பதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் றிஷாத்  பதியுதீன் வெளியிட்டுள்ள தமது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னளாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமிழ் பேசும் உலகுக்கு ஒரு உதாரண புருஷராக திகழ்ந்தவர்.தமது எழுத்துத் துறை முறை…

Read More

முஸ்லிம்கள் தன்மானத்தோடு வாழ அ.இ.ம.கா. வழிவகுக்கும்

– .எம்.எம்.ஏ.காதர் –  முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதைப் போல மக்களை அநாதைகளாக்குவதற்காக அல்ல.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மருதமுனையில் கடந்த சனிக்கிழமை(25-07-2015)மாலை கிளை அலுவலகத்தைத் திறந்த வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார். மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில்…

Read More

மாநகர சபை உறுப்பினர் றஹ்மான் அ.இ. ம.கா.வில் இணைவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் எந்த வித நிபந்தனைகளும் இன்றி உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசித் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று (27-07-2015)நல்லிரவு 12.30 மணிக்கு றஹ்மானின் இல்லத்திற்கு வருகை தந்த போதே றஹ்மான் இணைந்து கொண்டார்.அமைச்சர் றிஷாட் பதியுதீன்; இஸட்.ஏ.எச்.றஹ்மானுக்கு மாலை அணிவித்து வரவேற்று கட்சியில் இணைத்துக் கொண்டார். இவருடன் முன்னூற்றுக்கும் மேற்பட்ட அவரது…

Read More

பரசூட் மூலம் குருநாகல் சென்ற மகிந்த ராஜபக்ச

ஊடகத்துறை அமைச்சர் ஜயந்த கருணாதிலக, மகிந்த ராஜபக்ச தொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். தமக்கு 2 வருட கால ஜனாதிபதி பதவிக்காலம் எஞ்சியிருந்த போதே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச மக்களால் நிராகரிக்கப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்போது, தமது மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் போட்டியிடாது பரசூட் மூலம் குருநாகல் சென்று தனது வாக்கைக்கூட தனக்காக பயன்படுத்த முடியாத கவலைக்குரியவராக மாறியுள்ளார் என்றும் ஜயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.

Read More

ராஜித சேனாரத்னவுக்கு சர்வதேச விருது

உலக சுகாதார அமைப் பின் 2015 ஆம் ஆண்டுக் கான புகையிலை எதிர்ப்பு தின சர்வதேச விருதினை சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன வென்றெடுத்துள்ளார். ஆண்டுதோறும் உலக சுகாதார அமைப்பு அதன் 6 வலயங்களை உள்ளடக்கியதாக புகைத்தல் மற்றும் புகையிலைக்கு எதிராகச் செயற்படுவோரைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகின்றது. இந்த விருதுக்கு ‘உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் விருது’ என பெயரிடப்பட்டுள்ளது. இம்முறை தென் கிழக்காசியாவுக்கான விருதை டாக்டர் ராஜித…

Read More

மஹிந்தவின் கூட்டத்தில் புதிய தேசிய கோடி

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள மொழி முன்னணி ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் சிறுபான்மையினரை பிரநிதிதித்துவம் செய்யும் நிறங்களை அகற்றிய கொடிகளை ஏந்தி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச பங்குபெறும் அரசியல் கூட்டத்தில் இந்த கொடிகள் பறக்கவிட்டபட்டற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படும்…

Read More

தாஜூதீனின் படுகொலை செய்யப்பட்டார் – நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத்துறை

இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து அல்ல. கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர். மரணத்துக்கு முன்னர் தாஜூதீனின் கழுத்துக்கு கீழ் பகுதியில் கடுமையான சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் தென்படுகின்றன. அத்துடன் அவரின் பற்கள் உடைக்கப்பட்டிருந்தன. விலாஎலும்பு மற்றும் தொடை எலும்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தன என்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர். இதேவேளை தாஜூதீனின் கொலை தொடர்பான இறுதி மரணப ரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்றும்…

Read More