Main News
எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் -ரணில்
அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட கூட்டம் தெஹிவளை சந்தியில் முன்னாள் அமைச்சா் சுனித்திரா ரணிசிங்க, ரத்மலானை ஜ.தே.கட்சி வேட்பாளா் ஊடகவியலாளா் உபுல் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது இங்கு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் தற்பொழுது ஜ.தே.கட்சி மட்டும் இம்முறை வாக்கு கேட்கவில்லை. ஜ.தே.முன்னணி என்ற அமைப்பில் பாட்டலி சம்பிக்க, எம்.டி.எஸ் குணவா்த்தன, அர்ஜூன ரணதுங்க ராஜித்த சேனாரத்தின முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், திகாம்பரம். மனோகனேசன் மற்றும் 167 சமுக அமைப்புக்கள்…
கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்
கடவுச்சீட்டு வழங்கும் போது உயிரளவியல் தவல்களை பெற்றுக் கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற் கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்
லிட்ரோ நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வௌியிட்டிருந்த பொறுப்பற்ற அறிக்கையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக ஒரு பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி லிட்ரோ நிறுவனத்தினால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆதாரமற்ற அறிக்கை காரணமாக லிட்ரோ நிறுவனம் மற்றும் அதன் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட தனக்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்றுத் தலைவர் சலில முணசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 22 ம் திகதி அல்லது…
ரணிலே அடுத்த பிரதமர் ஆய்வில் தகவல் – 62.3 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு மற்றும் அவர்களின் மனப்பாங்கு தொடர்பில் முக்கிய கேள்விகளை கொண்டு நாடளாவிய ரீதியில் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் இலங்கையின் அடுத்த பிரதமராகுவதற்கு…
மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது: தேர்தல்கள் திணைக்களம்
உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் திணைக்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட்சியின் ஆதரவாளர்களும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பரீட்சை தாள்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்;கள் தமது…
எனக்கு தபால் மூலம் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்
– அஸ்ஜத் – எதிர்வரும் 17 ஆம் திகதி இடம் பெறும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் முதன்மைய வேட்பாளராக இலக்கம் 1 இல் போட்டியிடும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு இன்று அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குகளை அளித்தமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் தபால் வாக்குகளை பாவித்த வன்னி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அதிகாரிகளுக்கும் தனது நன்றியினை தெரிவித்த அவர் நீங்கள் உங்களது மனசாட்சிக்கு அமைய எவ்வித…
புதிய பொருளாதார திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளோம் -ஹா்ச
– அஸ்ரப் ஏ சமத் – இந்த நாட்டின் 40 இலட்ச சாதாரண குடும்பங்களும் தங்கள் பொருளாதாரத்தினை வெற்றி கொள்வதற்காக புதிய பொருளாதார செயற்திட்டத்தினை அறிமுகப்படுத்துள்ள உள்ளதாக பிரதியமைச்சா் காலநிதி ஹா்ச டி சில்வா தெரிவித்தாா். அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில் – அறிவை அடிப்படையாகக் கொண்ட போட்டிமிக்க சமுக சந்தைப் பொருளாதார முறை ஒன்றின் மூலம் உலக சந்தையை வென்று சூழலினையும் பாதுகாத்துக் கொள்வதுடன் அரசியல் சமுக. மற்றும் பொருளாதார சமத்துவத்தினைக் கொண்ட நல்லாட்சி ஒன்றினை…
மூதுார் மக்கள் மு.கா.வுக்கு அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பைப் போன்றது
மூதுார் மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அளிக்கின்ற வாக்கு கடலுக்குள் போடும் உப்பை போன்றது,இதற்கு அல்லாஹ்விடத்தில் பதில் கூற நேரிடும் என்று அ.இ.மா.கட்சியின் தேசிய தலைவர் றிசாத் தெரிவிப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு தமது உயிரையும்,உதிரத்தையும் தியாகம் செய்த மூதுார் மக்களுக்கு அந்த கட்சி எதையும் செய்யவில்லை,இம்மக்கள் அபிவிருத்தியின்றி அல்லலுறுகின்றனர் என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த தேர்தலிலும் நீங்கள் அவர்களுக்கு வாக்களிப்பீர்கள் என்றால் அதன்…
குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் பொதுபலசேனா ஈடுபட்டு வருகின்றது – முஜிபுர் ரஹ்மான்
அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் பொது பல சேனா அமைப்பினரை தொடர்ச்சியாக கண்கானிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தி, குறிப்பாக முஸ்லிம்களையும் அல் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ள பொதுபல சேனா அமைப்பின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த ரன்முத்து குமாரணசிங்க என்ற வேட்பாளர் அது…
ISIS இஸ்லாத்திற்கு எதிரானது – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) அறிவிப்பு
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS இயக்கத்தில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் இணைந்து மரணித்த செய்தி வெளியாகியுள்ள இச்சந்தர்பத்தில், இலங்கை முஸ்லிம்களும், இஸ்லாமிய மார்க்கமும் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என்ற தோரனையில் இனவாதிகள் பேசியும், எழுதியும் வருகின்றார்கள். இன்று உலகில், தீவிரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம், பயங்கரவாதத்தின் மறுபெயர் இஸ்லாம் என்றளவுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் பெயர் களங்கடிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் வெட்டுக்குத்து, வெடிகுண்டு என்பது போல் அதன் தோற்றம் கறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாம் என்றால் கலவரம், முஸ்லிம் என்றால் கலகக்காரன்…
“இஸ்லாமிய நோக்கில் நம்பிக்கைத் துரோகம்” – என்.எம். அமீன்
– முகம்மட் பஹாத் – எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுக்கும் விஷேட அறிக்கை… ஜனநாயக நாடான எமது நாட்டில் பல்வேறுபட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. தாம் விரும்பும் வேட்பாளளர்களைத் தெரிவு செய்வது அவரவர் உரிமையாகும். ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளவும் கூடாது. வாக்களிப்பது ஓரு ஜனநாயக உரிமை மட்டுமன்றி, இஸ்லாமிய நோக்கில் அது…
பொதுபலசேனா உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு
பொது ஜன பெரமுனவின் (பொதுபலசேனா) உறுப்பினருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டது. இனவாதக் கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்புவதை தடுக்குமுகமாக இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது ஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்ட வேட்பாளர் சுசந்த குமாரசிங்கவுக்கு எதிராக சட்டத்தரணி சிராஸ் நூர்த்தீன் தலைமையிலான ஆர்.ஆர்.ரி சட்டத்தரணிகள் அமைப்பு இம்முறைப்பாட்டை செய்துள்ளது.
