Main News
நாடு திரும்பும் மைத்திரியை வரவேற்க, விமான நிலையத்தில் ஏற்பாடு..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பவுள்ளார். நாடு திரும்பும் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளை விமான நிலையத்தில் வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி, இன்று நாடு திரும்புகிறார். ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று மாலை 4.00 மணிக்கு நாடு திரும்பவுள்ளனர். அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் கடந்த 23ம் திகதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருந்தனர். 29ம் திகதி அமர்வுகள் ஆரம்பமாகியதுடன்…
இலங்கையின் 5 வெளிநாட்டு வங்கிகள், விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றன
இலங்கையின் நிதிச்சந்தைக்குள் மேலும் ஐந்து வங்கிகள் விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி இதனை உறுதிசெய்துள்ளது. இலங்கையில் செயற்படுவதற்காக ஐந்து வெளிநாட்டு வங்கிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அண்மைக்கால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை கருத்திற் கொண்டே இந்த வங்கிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இவற்றுன் சீனா வங்கி மற்றும் ஜப்பானிய வங்கி என்பனவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது : சம்பந்தன்
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க…
சிகரட்டின் விலையை 45 ரூபாவாக அதிகரிக்க திட்டம்
நாட்டின் சிகரட் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்குடன் சிகரட்டின் வரி அறவீட்டு முறைமையில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கமைய அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் மூலமாக சிகரட் விலையை 45 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களின் பிரகாரம் இதுவரை காலப்பகுதியில் 15 வயதுக்குட்பட்டவர்களில் 70 ஆயிரம் பேர் சிகரெட்டிற்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில்…
மைத்திரியின் நல்லிணக்க முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு
இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தல் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் போன்றன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் அவை வரவேற்கப்பட வேண்டியவை எனவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்து கலந்துரையாடியபோதே அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரச தலைவர்களுக்கு…
வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்துக்கு ‘செக்’ வைத்த அமைச்சர்
வௌிநாட்டுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாத, வௌிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாது என, வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். வௌிநாட்டுப் பணியாளர்களின் உறவினர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காத சில வௌிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பற்றி முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண பயம் வந்துவிட்டது…..
எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் படுகொலை உள்ளிட்ட கடந்த சில நாட்களாக இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டிவிட்டன. இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு…
முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம்; அமைச்சர் ஹலீம் தீவிர முயற்சி
பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்களுக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ.ஹலீம் முன்னெடுத்து வருகின்றார் என அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாம் மார்க்கத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகைகளுக்காக தினமும் நேரம் தவறாமல் தியாக மனப்பாங்குடன் அதான் (பாங்கு) சொல்வதுடன் பள்ளிவாசல்களின் பரிபாலன விடயங்களிலும் முன்னின்று உழைக்கின்ற முஅத்தின்மார்களின் நலன்கள்…
சந்திரிகா மீதான தற்கொலைத் தாக்குதல் ; 300 ஆண்டுகள் கடூழிய சிறை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச்செய்தார். கொழும்பு மாநகர சபைத்திடலில் வைத்து, 1999ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்;டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 190 குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, இவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உதயன்…
இலங்கை தொடர்பான விவாதம் இன்று
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைத் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையும், அதற்கான இலங்கை அரசாங்கத்தின் பதிலும் இன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் உத்தியோகப்பூர்வமாக பேரவையில் சமர்ப்பிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த அறிக்கை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்த விவாதத்தின் ஒரு கட்டமாக, கடந்த 24ஆம் திகதி அமெரிக்கா…
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் மாதம் – பிரதமர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நிறைவு செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற தேசிய முகாமைத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். எதிர்வரும் 2 வருடங்களுக்கு நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியகட்சியும், சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளன. இதன்மூலம் கட்சிகளுக்கு இடையிலான பேதம் களையப்படுகிறது. எனினும், இதன் அர்த்தம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளுராட்சி மன்ற…
எனது செயலை கடந்த ஆட்சியின் ஊழல்களுடன் ஒப்பிட வேண்டாம்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சென்றுள்ள குழுவில் ஜனாதிபதியின் மகனும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தன. எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, தன்னுடைய பேஸ்புக்கில் விளக்கமளித்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு தன்னுடைய தாய்க்கு அழைப்பிதழ் வந்தது. ஆனால் அவரால், இதில் பங்கேற்க முடியாமல் போனது, எனவே அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது….
