Main News
அவன்ட் கார்ட் பற்றிய உண்மைகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை!– அனுரகுமார
அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றிய உண்மைகளை சில ஊடகங்கள் வெளியிடுவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அவன்ட் கார்ட் பற்றி நான் வெளியிடும் உண்மைகளை சில ஊடகங்களும் இணைய ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அவன்ட் கார்ட் நிறுவனம் சில ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் பணம் வழங்கியுள்ளது. நிறுவனம் பற்றி நான் வெளியிட்ட கருத்து சில பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டதுடன், சில ஊடகங்களில் மிகச் சிறிய செய்தியாகவேனும் வெளியாகவில்லை. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்க…
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றே தீருவோம்
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த ஆதரவு அணியினர் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக நாடு முழுவதும் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறப்போவதாகவும் மஹிந்த அணியினர் சூளுரைத்துள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் அமெரிக்கப் பிரேரணைக்கு எதிராக பாரிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில்…
மஹிந்தவிற்கு வழங்கபட்ட பட்டங்கள் பறிக்கப்படுமா..?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டங்களை வழங்கியிருந்தது. 2009ம் ஆண்டு மே…
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பாம்பு
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நூலகத்துக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் பொது மின்தூக்கிக்கும் இடையிலுள்ள பூஞ்சாடி ஒன்றுக்குள் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. அதிரடிப்படையினர் வழமையாக மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையின் போது இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்துக்குள் பாம்புகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு தடவையில் மூன்றாம் மாடியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இருந்து பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.
வர்த்தகர் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பர் 27ம் திகதி
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. முஹமட் சியாமை படுகொலை செய்தல், கொலை செய்ய சூழ்ச்சித் திட்டம் தீட்டியமை உள்ளிட்ட பத்து குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது…
அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு நாளை
வெற்றிடமாக காணப்பட்ட சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை(13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்று பெற்றுகொள்வதற்காக பிள்ளையான குற்றப் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டார். அதற்கமைய நேற்று மாலை 05 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய நிலையில் முதற்கட்ட வாக்குமூலம் பெற்றுகொண்டதன் பின்னர் அவர்…
சேயா செதெவ்மி கொலை – 10 பேரிடம் வாக்குமூலம்
சேயா சதெவ்மி என்ற சிறுமியின் கொலை தொடர்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்ட கொட்டதெனியாவை பகுதியைச் சேர்ந்த சிலர் இன்று திவுலுபிட்டிய காவற்துறை நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி விடுவிக்கப்பட்ட 17 வயதான மாணவர் மற்றும் குடும்பஸ்த்தர் ஆகிய இரண்டு பேரும், காவற்துறையினருக்கு எதிராக முறைபாட்டை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேர் வரையில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை…
கொரியாவில் மீன்பிடித் தொழில் புரிய விருப்பமா?
15வது கொரிய மொழி பரீட்சையின் மீன்பிடி பிரிவில் வேலை வாய்ப்பு தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 19ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 21ம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்காலை, காலி, மாத்தறை, சீதுவ மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி மத்திய நிலையங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். இதேவேளை 18 வயது முதல் 39 வயது வரையானவர்கள் மற்றும் மீன்பிடித்துறையில்…
கடந்த காலத்தில் உலகின் புற்றுநோயாளி என சர்வதேசம் இலங்கையை அடையாளப்படுத்தியது – சஜித்
அரசாங்கம் எந்த காரணத்தை அடிப்படையாக கொண்டும் நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை காட்டிக்கொடுக்காது என்பதுடன் கலப்பு நீதிமன்றம் ஒன்று நாட்டிற்குள் ஏற்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம உடுவில பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே மக்கள் ஆணை வழங்கினர். அந்த மக்கள் ஆணையின் மூலம் நாங்கள் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளோம். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எதிராக செயற்பட்ட…
வெளிநாட்டு வங்கி கணக்குகளை கூறி தங்களை அவமதிக்க முயற்சி!- நாமல்
வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக கூறி தன்னையும் தனது குடும்பத்தையும் அவமதிப்பதற்கு முயற்சியொன்றியை குறிப்பிட்ட சிலர் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை அரசியல் முக்கியஸ்தர் ஒருவரின் மகனால் டுபாயில் வங்கி கண்க்கில் வைப்பு செய்யப்பட்ட 650 அமெரிக்க டொலர் கணக்கினை தடை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் செயற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமையவே டுபாய் நீதிமன்றம் இந் நடவடிக்கையை மேற்கொள்கின்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இதற்கிடையில் வெளிநாட்டு வங்கிகளில் கணக்குகள் உள்ளதாக…
பிரதமராகும் கனவில் விமல் வீரவன்ச குழப்பங்களை விளைவிக்கின்றார்: அஜித் பெரேரா
பிரதமராகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குழப்பங்களை விளைவித்து வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச எல்லாக் காலங்களிலும் யாருடைய தோளிலேனும் ஏறியே அரசியல் செய்து வருகின்றார். பிரதமராகும் கனவு அவருக்கும் இருக்கும். அதற்கு தேவையான முயற்சிகளில் ஒன்றாகவே தற்போது நாடாளுமன்றில் குழப்பங்களை விளைவித்து வருவதனை கருத வேண்டும். ஜே.வி.பியில் இருந்த காலத்தில் ஜே.வி.பி லேபளில் பிரபல்யம் அடைந்து பின்னர் கட்சியை காலல் உதைத்து…
