Headlines

ஜனாதிபதி செயலகத்தினுள் CSN அலுவலகம் கண்டுபிடிப்பு

கொழும்பு, கோட்­டையில் அமைந்­துள்ள ஜனா­தி­பதி செய­ல­கத்­தினுள் சீ.எஸ்.என் தொலைக்­காட்சி நிறு­வ­னத்தின் அலு­வ­லகம் ஒன்றும் இயங்கி வந்­துள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் காலத்தில் இந்த அலு­வ­லகம் ஜனா­தி­பதி சர்­வ­தேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்­கி­வந்­துள்­ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர்களான நாமல் ராஜ­பக்ஷ, யோஷித்த ராஜ­பக்ஷ, மற்றும் சில யுவ­திகள் மட்­டுமே இங்கு வந்­து­போ­யுள்­ளனர். எனினும் ஜனா­தி­பதி ஊடகப் பிரி­வுடன் எந்த வகை­யிலும் தொடர்­பு­ப­டாத நிலையில் இயங்கி வந்த இந்த அலு­வ­ல­கத்தின் மூலம் நடை­பெற்ற…

Read More

பிரபாகரனுக்கு அஞ்சியே பதுங்குகுழி அமைத்தோம்: மஹிந்த

ஜனா­தி­பதி மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை நிலக்கீழ் சொகு­சு­மா­ளி­கை­யல்ல அது பிரபா­கரனின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும். விடு­தலைப் புலிகள் பல­ம­டைந்­தி­ருந்த காலத்தில் எம்மை பாது­காக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அன்­றைய கால­கட்­டத்தில் முக்­கியபாது­காப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும் நாம் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லேயே மேற்­கொள் வோம். ஜனா­தி­பதி மாளிகை தாக்­கப்­பட்டால் இந்த பதுங்­கு­கு­ழி­யி­லி­ருந்து செயற்­படும் நோக்­கத்­திற்­கா­கவே இதனை உரு­வாக்­கினோம் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசியக் கட்­சியில் இணைவார்…

Read More

சிறுவர் பாதுகாப்புக்கு விசேட ஜனாதிபதி செயலணி

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நாடுதழுவிய ரீதியில் செயற்படக் கூடியதான விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிட்டம்புவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, வடக்கின் வித்யாவும் தெற்கின் சேயாவும் அநியாயமாக சிதைக்கப்பட்டதை விட ஒரு சில ஊடகங்கள் அவர்களை மோசமாக சிதைத்துள்ளன. ஊடகங்கள் போன்றே குறித்த மரணங்களின் போது ஒருசிலர் தங்கள் மொபைல் போனில் போட்டோக்களை எடுத்து…

Read More

தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போகிவிட்டது -சஜித் பிரேமதாச

– அஸ்ரப் ஏ சமத் – கடந்த கால ஆட்சியில் இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வில்லை கடந்த ஆட்சியாளா்களது ஆட்சி மற்றும் சர்வதிகாரம், களவு, முறைகேடுகளை சரியான சத்தியமாக எழுதுவதற்கும் தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போகிவிட்டது. அவ்வாற ஊடகவியலளா்கள் தாக்கப்பட்டனா், லசந்த விக்கிரமரத்தின கொலை செய்யப்பட்டாா், ஊடகவியலாளா் எக்கிலியகொட கடத்தப்பட்டு காணாமல் போனாா். சில ஊடக தொழிற்சங்க உறுப்பிணா்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனா். இவற்றை செய்தவா்கள், இவற்றுக்கு கட்டளை வழங்கியவா்கள் எல்லாம் இந்த நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படல்…

Read More

றிஷாதின் ஆதங்கமும் சம்மந்தனின் மழுப்பலும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அகதி என்ற அவல முத்திரை குத்தப்பட்ட சமுகமாகவும் உள்நாட்டுக்குள்ளேயே 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சமுகமாகவும் இந்த உலகில் இருக்கும் ஒரே ஒரு சமுகமென்றால் அது இலங்கையில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மாத்திரமே. வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்காக அஷ்ரப் தொட்டு இன்று றிஷாத் பதியுதீன் வரை அயராது உழைத்து வருவதை இந்த நாடே அறியும். அதிலும் றிஷாதின் அரசியல் பிரவேசம்…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் செயற்பட இடமளிக்க வேண்டாம் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம். காசிம்- எந்தவிதமான குற்றமுமிழைக்காமல் துரத்தப்பட்ட வடபுல அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். வடபுல முஸ்லிம்கள் தமது பரம்பரைப் பூமியிலிருந்து விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னுமே அகதி முகாம்களில் அல்லல்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அரசும் உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. சர்வதேசமோ, ஜெனீவாவோ, ஐ.நாவோ இந்த மக்கள்…

Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு, இலங்கையிலிருந்து 30 மாணவர்கள் தெரிவு

இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின், முயற்சியின் பிரதிபலனாக இம்முறை இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு நாடெங்கிலும் இருந்து கீழ்காணும் 30 ஷரீஆத் துறை மாணவர்கள் புலமைப்பரிசிலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 01. பதுர்தீன் முஹம்மத் பய்ரூஸ்-கதுருவல 16. நிஸார்தீன் முஹம்மத் இர்பான் 02.. முஹம்மத் முனாஸ் முஆத்-மாவனெல்ல 17. அமீர் முஹம்மத் அய்யாஷ் 03. ஸபீன் முஹம்மத் பஸ்மில் 18. அப்துல் குத்தூஸ் இர்பான்-குரின்ஜாகேனி 04. ஸரீப் முஹம்மத்…

Read More

கொண்டயாவை பிணையில் எடுக்க தாயார் கையெழுத்து!

கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை பிணையில் எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், அவரது தாயார் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய சிறுமி சேயாவின் கொலையின், சந்தேக நபர் கொண்டயா சில நாட்களுக்கு முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் பிணைக்கு கையெழுத்திட யாரும் முன்வராத நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று கொண்டாயாவின் தாயார் பிணைக்கு கையெழுத்திட்டுள்ளார். இக்கொலை,தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ள, உண்மை குற்றவாளியான இவரது சகோதரர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமல் வீரவன்ச சற்றுமுன் கைது – BREAKING NEWS

– நமது நிருபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ச சற்றுமுன் கைது செய்யப் பட்டதாக பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய பிரதமர் ரணில் நடவடிக்கை

இளவரசன் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் வரலாற்று அடையாளங்கள் இருப்பதால், இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிதுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெரணியகலவை ஆலோசராக நியமித்து இது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் பௌத்த…

Read More

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு மள் நியமனம்

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி பின்னர் இடை நிறுத்தப்பட்டிருந்த ஊழியரகளுக்கான மீள் நியமனக் கடிதங்கள் வியாழக்கிழமை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சில் வைத்து இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அமைச்சின் செயலாளர் தென்னகோன்,கணிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ்,கூட்டுத்தாபண முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ஹில்மி ஆகியோரையும் கலந்து கொண்ட ஊழியர்களையும் படங்களில் காணலாம்

Read More