Main News
இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு ஜப்பான் விருப்பம்
இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு ஜப்பான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஜப்பான் நாடும் அந்த நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் வர்த்தக சமூகத்தினர் இன்று அமைச்சரை அமைச்சில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகவும் உயர் நிலையில் இருப்பதாகவும், இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு ஜப்பான் நாட்டின் சந்தை…
விமலிடம் கட்டுநாயக்கவில் விசாரணை
ஐரோப்பிய நாட்டுக்கு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டுள்ளது.
“டெஸ்மன் சில்வா அறிக்கை என்று எதுவும் கிடையாது”
டெஸ்மன் சில்வா அறிக்கை என்று எதுவும் கிடையாது. அவர் மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் ஆலோசகராக மாத்திரமே பணியாற்றியுள்ளார். இருந்தும் அவரது இரண்டு கடிதங்கள் திருடப்பட்டிருப்பதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் இல்லாத ஒன்றை உருவாக்கி ஊடகங்களில் செய்தி வெளியீடு நீடிக்குமானால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் ஐ.நா. அறிக்கை மற்றும் அமெரிக்காவின்…
ஜோக்கர்களை அனுப்பவேண்டாம்: மஹிந்தவே சபையில் பதிலளிக்க வேண்டும்
-ஜே.ஜீ.ஸ்டீபன்-/ -ப.பன்னீர்செல்வம்- உடலாகம, அறிக்கை முதல் அமெரிக்காவின் தீர்மானம் வரையிலான அனைத்துக் கொடுக்கல் வாங்கல்கள் ஆவணப்பரிமாற்றங்கள், உடன்படிக்கைகள் ஆகிய அனைத்து செயற்பாட்டு ரீதியான விடயங்களுடனும் முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக் ஷவே நேரடித் தொடர்புடையவர். எனவே சமகாலத்தில் எழுந்துள்ள இப்பிரச்சினைக்கு அவரே பாராளுமன்றத்தில் பிரசன்னமாகி பதிலளிக்க வேண்டுமே தவிர ஜோக்கர்களை ஏவிவிட்டு பதிலளிக்க முற்படக்கூடாது என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐ.நா.அறிக்கை…
ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி, நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி 60 பௌத்த பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். ஜனாதிபதியுடன் உயர்மட்ட மதத் தலைவர்கள் சிலரும் தாய்லாந்துக்கு விஜயம்…
இன, மத துவேச கருத்துக்களுக்கு இனி இடமில்லை!
இன, மத ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலான சட்டதிருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் இன, மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பதட்ட நிலைமை மற்றும் இன மோதல்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் அரசாங்கம் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை; ஜனாதிபதி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார். ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் மற்றும்…
ஐ.நா. தீர்மானத்தை எதிர்த்தவர்களும் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பு
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் சர்வகட்சிகளினதும் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை, அரசுக்கும், ஜ.நா. தீர்மானத்துக்கும் எதிர்பைத் தெரிவித்து வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரும் இதில் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும். அதில், தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, வாசுதேச நாணயக்கார தலைமையிலான இடசாரி முன்னணி, திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக்…
முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம்
மத்திய கொழும்பு பிரேமதாஸ வைத்தியசாலையின் ஒரு பகுதியை மாளிகாவத்தையிலுள்ள சிறுநீரக சிகிச்சை பிரிவோடு இணைப்பது குறித்து தீர்மானித்துள்ள யோசனையிணை மீளாய்வு செய்யுமாறு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சி பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறைந்த வருமானம் பெறும் மத்திய கொழும்பு மக்களின் சுகாதார நலன்களை கருத்திற் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரமதாஸவினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலையின் ஊடாக…
ஜனாஸா நிகழ்வில், பங்கேற்ற மஹிந்த
குருநாகல், தெலியாகொன்ன கிராமத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமாயிருந்த முஹம்மத் முபாரக் என்பவருடைய ஜனாஸாவில் மஹிந்த ராஜபக்ச குருநாகல் மாநகர சபை உறுப்பினரும், குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தாருடன் கலந்து கொண்டார்.
முஸ்லிம் மக்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதில்லை – அமைச்சர் றிஷாத்
முஸ்லிம் மக்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுவதில்லை என அமைச்சர் றிஷாத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். போர் காரணமாக மூன்று தசாப்த காலமாக பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியேற்றுவது குறித்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேசுகின்றது. எனினும், இரண்டு மணித்தியாலங்களில் ஒரே மொழி பேசும் முஸ்லிம் மக்கள் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று வாசிப்பு
கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நாடாளுமன்ற நிகழ்ச்சித் திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் யோசனைக்கு அமைய திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு, ஒக்டோபர் 23ஆம் திகதி (இன்று) இடம்பெறவுள்ளது. அதனையடுத்து, வரவு – செலவுத் திட்ட உரை (ஒதுக்கீட்டுச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு) நவம்பர் மாதம் 20ஆம் திகதியும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இதற்காக 12 நாட்கள்…
