Main News
பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் நியமனம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், பதில் பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். உயர் நீதிமன்ற நீதிவான் தேவிகா லிவேரா தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிவானாக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிகழ்வும் இந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபேயகோனும் நிகழ்வில் பங்கேற்றி ருந்தார்.
விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்குமாறு கூறவில்லை
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடத்தப்படவுள்ள விசாரணை செயற்பாட்டில் வெளிநாட்டு நீதிபதிகளை பங்கெடுக்கச் செய்ய வேண்டுமென நான் எனது அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லை. மாறாக தேவையெனில் விசாரணை செயற்பாட்டில் வெளிநாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற பரிந்துரையையே முன்வைத்தேன் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த இறுதி அறிக்கையை தயாரித்த போது எனக்கு எந்தவிதமான சவாலும் இருக்கவில்லை. உண்மையைக்…
இலங்கை கடலில் விழவுள்ள மர்ம பொருள்
விண்வெளியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றின் சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் விழவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டபிள்யூ.ரி.1190.எப்’ என அழைக்கப்படும் மேற்படி சிதைவு எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி பிரபஞ்ச நேரப்படி 6.20 மணிக்கு இலங்கையின் தென் பிராந்திய கடற்கரைக்கு அப்பால் சுமார் 65 கிலோமீற்றர் தொலைவில் இந்து சமுத்திரத்தில் விழவுள்ளதாக ‘நேச்சர்’ ஆய்வேடு அறிக்கையிட்டுள்ளது. இந்த 7 அடி நீளமான சிதைவு அண்மையில் சந்திரனுக்கு விண்கலத்தை அனுப்பும் நடவடிக்கையில் பங்கேற்ற ஏவுகணையின்…
ஐ.தே.க.வுடன் இணைந்ததாலேயே சு.க.வை பாதுகாக்க முடிந்தது
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதாலேயே சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடிந்ததாகவும், இல்லாவிட்டால் அது இல்லாமல் போவதற்கான அறிகுறி காணப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பதுளையில் நேற்று திங்கட்கிழமை நெடுஞ்சாலைகள் அமைச்சுக்குரிய அலுவலகம் ஒன்றை திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் பிரதமர் ரணிலின் வாலில் தொங்கிக்கொண்டு சென்றேன் என்றும் இறைச்சியின் எலும்புகளை சாப்பிடச் சென்றேன் என்றும்…
அவன்ட்காட் ஆயுத கப்பலுக்குள் செல்லும் ஆணைக்குழு அதிகாரிகள் குழு
அவன்ட்காட் ஆயுத கப்பல் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழுவொன்று இன்று கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஐவர் அடங்கிய குழுவொன்று இன்று காலை கப்பலுக்குள் செல்லவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். இன்று காலை விசாரணை நடவடிக்கைகளுக்காக கப்பலுக்குள் செல்லும் இந்த அதிகாரிகள் குழு நாளை மாலை வரை கப்பலில் தங்கியிருந்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குறித்த காலப்பகுதியினுள் அந்த அதிகாரிகளினால் கப்பலில்…
நிலக்கீழ் மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன: சஜித்
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகைக்கான பொருட்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அரசாங்க தலைவரின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழி அவசியமென்றாலும், நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை நிர்மாணிப்பதற்கு பல கோடி செலவு செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியொன்று உள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுங்கு குழுயொன்றினை அமைத்திருந்தால் எந்த விதமான பிரச்சினையும் கிடையாது….
மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை
மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை…
மேர்வின் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தில் நடைபெற்ற காணி விற்பனையொன்று தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரான சிங்கப்பூர் சரத் என்பவரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர். ஒரு காணித்துண்டு 25 லட்சம் ரூபா வீதம் 31 காணித்துண்டுகள்…
சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவீன ஸ்மார்ட் வசதி கொண்ட சுப்பர்சோனிக் விமானம் இலங்கைக்கு
இந்தியா இலங்கைக்கு புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களையே இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் விமானப்படை தளபதி உயர்மார்சல் கஹான் புளத்சிங்க பாகிஸ்தானிற்கு அடுத்த மாதம் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் குறித்து ஆராயவுள்ள நிலையிலேயே இந்தியாவின் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பழைய விமானங்களிற்கு பதில் புதிய விமானங்களை வாங்குவதற்காகவே பாகிஸ்தானிற்கான இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தகவல்கள்…
“போர்க்குற்றத்தில் என்னை சிக்கவைக்க தீவிர முயற்சி”
என்னையும் எமது இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்சியை தக்கவைக்கவே ரணில் முயற்சிக்கின்றார். போர்க் குற்றத்தில் என்னை சிக்கவைக்கும் அதி தீவிர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் இராணுவத்தை காப்பாற்ற எந்த கூண்டிலும் ஏறத் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறை இருக்கும் போது சர்வதேச தரப்பை அழைப்பது எமது நீதிச் சேவையை அவமதிக்கும் செயலாகும். இதற்கு எனது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். போர்க்குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
