Headlines

காவத்தமுனை புதிய வீட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி!!!

முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் வட்டாரக் குழு மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் விடுத்த வேண்கோளுக்கு அமைவாக, அவரது நிதியொதிக்கீட்டில் காவத்தமுனை புதிய விட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தவிசாளர் ஐ.டி.அஸ்மி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் வட்டாரக் குழுத் தலைவருமான ஆதம்பாவா, கிராம சேவகர் அஸ்வர் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்களும்…

Read More

வட்டக்கண்டல் வட்டாரத்தின் ஆலய வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட, வட்டக்கண்டல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் குழந்தை யேசு ஆலய உள்ளக வீதியை கொங்கிறீட் வீதியாக புனர்நிர்மாணிக்கும் வேலைத்திட்டம், மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு தலைமையில் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்ததுடன், மாந்தை மேற்கு பிரதேச சபை வட்டக்கண்டல் வட்டார உறுப்பினர்களான நைசர், செளந்தரராசா, ஆள்காட்டிவெளி வட்டார உறுப்பினர் பா.பிரபாநந்தன் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்….

Read More

“இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை இல்லாதொழிப்பது காலத்தின் தேவையாக மாறியுள்ளது” மக்கா மாநாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் அறைகூவல்!!!

இஸ்லாத்தை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் உலக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிழையான எண்ணங்களை இல்லாதொழிப்பதற்கு இதுவே தக்க தருணம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “உலகளாவிய இஸ்லாமிய மையம்” (World Muslim league) ஏற்பாட்டில் மக்கா, அல் முகர்ரமாஹ்வில் இடம்பெற்ற, சர்வதேச இஸ்லாமிய ஒருங்கிணைப்பு மாநாட்டில் (The International Conference on Islamic Unity)அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இலங்கை சார்பில் நேற்று (13) விஷேட விருந்தினராகப்…

Read More

“சட்டம் கடமையை மிகச்சரியாக செய்துள்ளது” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் தெரிவித்தார்!!

நாட்டில் எந்தவொரு பிரஜையும் , அரசியலமைப்பை மீறமுடியாது என்பதை இன்றைய வரலாற்று முக்கியத்துவமிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிரூபித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி செயற்பட தொடங்கியதிலிருந்து,  அது பிழையென நிரூபிக்கும் வகையில், நாங்கள் நீதிமன்றத்தின் ஊடாக மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று உரிய பலன் கிடைத்துள்ளது. சட்டம் தனது கடமையை மிகச் சரியாக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; கடந்த நவம்பர்….

Read More

பேருவளை சீனாவத்தை மஸ்ஜித் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

பேருவளை பிரதேச சபை, சீனாவத்தை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில், அழுத்கம சீனாவத்தை மஸ்ஜித் வீதியை செப்பனிடும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. சீனாவத்தை மஸ்ஜித் ஒழுங்கை வீதியின் புனர்நிர்மாணப்  பணிகளை, பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதை செப்பனிடல் பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்து வீதியை மக்கள் பாவனைக்கு…

Read More

மாந்தை மேற்கு வரவு செலவு திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது!!!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சந்தியோகு (செல்லத்தம்பு) அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.(2018.12.12) 25 உறுப்பினர்களை கொண்ட மாந்தை மேற்கு பிரதேச சபையில் இன்றைய அமர்வில் பங்கு கொண்ட அணைத்து உறுப்பினர்களும் சபை தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவு திட்டத்திற்கு ஒருமித்து ஆதரவு வழங்கியமை சிறப்பம்சமாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையில் முஸ்லீம்…

Read More

புலவர் திருநாவுக்கரசின் மறைவு மன்னார் மக்களுக்கு பாரிய இழப்பாகும்.

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் சபை இணைச்செயலாளர் புலவர்  அம்பலவாணர் திருநாவுக்கரசு (சமாதான நீதவான்) மறைவு இந்துக்களுக்கு மாத்திரமன்றி அந்த மாவட்டத்தில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தமிழிலே நன்கு புலமையும், பாண்டித்தியமும் பெற்ற அமரர் திருநாவுக்கரசு சைவத்தின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தார். மன்னார் மாவட்டத்தில் இந்து, இஸ்லாமிய கிரிஸ்தவ மக்களின் இன நல்லுறவை வலுவாக்கும் வகையில் அவரது செயற்பாடுகள்…

Read More

முசலிப்பிரதேசபையின் வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்….

முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலீபத் சுபியான் அவர்களினால் (11/12.2018 ) சபையில் முன்வைக்கப்பட்ட 2019ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்… அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆளுகைக்குள் இருக்கும் முசலிப்பிரதேசபையில் , முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சுதந்திரக்கட்சி ,பொதுஜன பெரமுன, உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் முசலிப்பிரதேசபையில் தவிசாளரினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது விசேஷட அம்சமாகும்… முசலிப்பிரதேசபையின் தவிசாளர் கலிபத் சுபியான் அவர்களினால் எதிர்காலத்தில் எமது பிரதேசபையின்…

Read More

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது

தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம்பெற்ற 2019 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதம் இன்று மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்றதுடன் அதற்கான வாக்கெடுப்புகளும் இடம்பெற்றன, மன்னார் பிரதேச சபையானது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஜீவானந்தன் அவர்களினால் வரவு செலவுத்திட்டத்தின் விவாதத்திற்கு ஆதரவாக முன்மொழியப்பட்டதுடன் சிறீலங்க சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் அலியார் ஸாபிர் அவர்களினால் வழி மொழியப்பட்டு வரவு செலவுத்திட்டம் வெற்றி பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இந்த வரவு…

Read More

மைச்சர் றிஷாட்டின் பாதுகாப்பை பலப்பலப்படுத்துமாறு இறக்கமத்தில் அழுத்தம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளன. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் இப்பிரேரணையை சபையில்  சமர்ப்பித்து உரையாற்றினார், இதில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.கா கட்சி தற்போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாகவும் ,அதன் தலைவரான றிசாட் பதியுதீன் சிறந்த தலைவராக சமூகம் ஏற்று அரசியலில் பின்பற்றுகிறது. எமது முஸ்லிம்…

Read More

இராணுவத்தினர் வசமிருந்த 12 ஏக்கர் காணி விடுவிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த 12 ஏக்கர் காணிகள் நேற்று (10) கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட கல்லம்பத்தை எனும் பகுதியில் 5 ஏக்கர் காணி,…

Read More

ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கலந்துகொண்ட 12 பேரின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஓட்டமாவடி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற விஷேட சபை அமர்வில் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வரவு செலவுத் திட்டமானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து பிரதேச மக்களதும் தேவைகளை முன்னுரிமைப்படுத்தியதான, விஷேட வேலைத்திட்டங்கள் அடங்கி வரவு செலவுத்திட்டம் என்பதை ஏற்றுக் கொண்டு, பிரதேச சபையின்…

Read More