Headlines

வேதாந்தி சேகு இஸ்ஸத்தீன் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைகின்றார்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், வடக்கு  கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிரேஷ்ட சட்டத்தரணி வேதாந்தி சேகு இஸ்ஸத்தீனை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் (06) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. மு.காவின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி, மற்றும் மு.காவின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்துகொண்டு…

Read More

பேருவளை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதியமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தர்காநகரில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற கூட்டத்தில். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட அளுத்கம வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சமீரை ஆதரித்து சீனவத்தையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதியமைச்சர், வெலிபிட்டி வட்டார வேட்பாளர் ஹஷீப் மரைக்காரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்….

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் விருது வழங்கும் நிகழ்வு நேற்று மாலை (05) நாரஹேன்பிட்டியில் உள்ள அரச வர்த்தகக் கூடுத்தாபனத்தின் மெகா காட்சியறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் மற்றும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்  உயரதிகாரிகள், ஊழியர்கள்  உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.      

Read More

‘சமூகத்தின் விடிவுக்காக குரல் கொடுக்கும் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்’ வி.சி இஸ்மாயில்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களை நேசிக்கின்ற, முஸ்லிம் சமூகத்தின் விடிவுப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கின்ற ஒரு கட்சியாகும் என லக்ஸல நிறுவனத்தின் தலைவரும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபைக்கு வறிப்பத்தாஞ்சேனை வடக்கு வட்டாரத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும், பிரதம வேட்பாளர் எஸ்.ஏ.அன்வரை ஆதரித்து வறிப்பத்தாஞ்சேனையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

‘சமூக சிந்தனையுடனும் தூரநோக்குடனுமே மக்கள் காங்கிரஸ் செயலாற்றுகின்றது’ மன்னாரில் அமைச்சர் ரிஷாட்!

–ஊடகப்பிரிவு– முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரும்புக்கோட்டைக்குள்ளே வெளியேறுவதற்கு பேரினக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், முன்னோடி முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், சிறிய கட்சிகளின் தலைவர்களும் அஞ்சிக்கொண்டிருந்த போதும், சமூகத்தின்பால் கொண்டிருந்த அன்பினால் உயிரையும் துச்சமெனக் கருதாது, முதன்முதலாக வெளியேறிய சிறிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் நேற்று இடமபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் சிறிய…

Read More

‘நாட்டின் ஆகக்கூடிய கிளைகளைக்கொண்ட வலையமைப்பாக சதொச நிறுவனம் சாதனை படைக்கின்றது’ அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- ‘தூர சிந்தனையுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக இந்த வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கும் அரசின் இலக்கு நிறைவுபெற்ற பின்னர், சதொச கிளைகள் திறந்துவைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக, சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம’ என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கைத்தொழில்…

Read More

‘யாழ் முஸ்லிம்களின் அவலநிலையை துணிச்சலுடன் அமைச்சர் ரிஷாட் வெளிப்படுத்தியமை மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றது’ யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் அறிக்கை!

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள  யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா நிகழ்வில் வெளிப்படையாகவும், துணிகரமாகவும் பேசியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன ஆறுதலை தந்துள்ளதாக, புத்தளம் வாழ் வெளியேற்றப்பட்ட யாழ் – கிளிநொச்சி சிவில் சமூக ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைப்பின் தலைவர் மௌலவி அப்துல் மலிக், செயலாளர் ஹசன் பைரூஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, பலவந்தமாக…

Read More

வவுனியா தெற்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  வவுனியா தெற்கு பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு  இன்று (04) வவுனியாவில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட  பிரதேச வாசிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.      

Read More

மக்கள் காங்கிரஸின் பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபை தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் கடந்த திங்கட்கிழமை (01) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெற்றன. அந்தவகையில், பாத்தாஹேவாஹெட்ட பிரதேச சபையின் முதன்மை வேட்பாளரும், முன்னாள் தவிசாளருமான சுபஹானை ஆதரித்து கரகஸ்கட பிரதேசத்தில் கூட்டம் நடைபெற்றது. இதேவேளை, கரகஸ்கட வட்டாரத்தின் வேட்பாளரான அக்ரம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தின்போது, மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது….

Read More

“சதொச நிறுவனத்தில் ஊழியர்களை பங்காளராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவோம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் உறுதி!

-அமைச்சரின் ஊடகப்பிரிவு- அரசாங்கத்துக்கு சொந்தமான சதொச நிறுவனத்தின் ஒரு பகுதியில் சதொச ஊழியர்களையும், பங்காளராக்கி நிறுவனத்தை மேலும் முன்னேற்ற உத்தேசித்துள்ளோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் இன்று மாலை (04) சதொச நிறுவனக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். சதொச நிறுவனத்தை நாம் பொறுப்பேற்ற போது, 1.5 பில்லியன் மாத வருமானமே இருந்தது. தற்போது,…

Read More

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது… அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள், தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பளார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு, அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம்…

Read More

‘தேர்தல் காலங்களில் மட்டும் வீர வசனம் பேசி வாக்குகளை வசீகரிப்பவர்களை இனங்கண்டு கொள்ளுங்கள்’ யாழில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- தேர்தல் காலங்களில் மட்டும் வந்து மக்களை ஏமாற்றி பழைய பல்லவியை பாடி ஏமாற்றும் அரசியல் கட்சிகள் குறித்து, வாக்காளர்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மானிப்பாயில் இன்று (03) இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது,…

Read More