Headlines

உணவு ஒவ்வாமையால் 100 பேர் வைத்தியசாலையில்

அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (22) மாலை உட்கொண்ட உணவு இவ்வாறு ஒவ்வாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) காலை வயிற்றுவலி, மயக்கம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிமொருவர் மரணம்

அப்துல்லாஹ்: பொலிஸாரின் சமிக்ஞையை மீறி நிறுத்தாமல் சென்ற லொறிமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் செவ்வாய் அதிகாலை 2.10 மணியளவில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள மஹாஓயா – அரந்தலாவையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அம்பாறை மஹாஓயா வீதியில் நள்ளிரவில் பயணித்துக் கொண்டிருந்த லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு மங்களம பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் உத்தரவை மீறி லொறி அதிவேகத்துடன் பொலிஸ் சாவடியைக் கடந்து…

Read More

கல்வி அமைச்சர் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் சந்திப்பு

– முஹம்மது சனாஸ் – மலையக தோட்டப்புற தமிழ் மொழி மூலமான முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்.மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க ஆகியோரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து இது தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துரையாடினார். அதேவேளை,  இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்…

Read More

சிறுநீரக மாற்று, சத்திர சிகிச்சைக்கு நிதியுதவி கோரல்

கற்பிட்டி மேட்டுதெருவில் வசிக்கும் சகோதரர் N. Jamsy அன்மைக்காலமாக அவரது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்ச்கிபெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமையால், உடனடி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளனர். இவருடைய சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை அல்லாஹ்வின் துணையால் வெற்றிகரமாக செய்து முடிக்க சுமார் ரூபா. 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தேவைப்படுவதனால் அதனை அவரது குடும்பத்தினரால் மாத்திரம் ஈடுசெய்ய முடியாதுள்ளது. ஆதலால் அன்பர்கள், நண்பர்கள்,…

Read More

இலங்கையில் புது வைரஸ் பரவல் இதுவரை 9 கர்ப்பிணி தாய்மார் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கும்…

Read More

பெண்ணை காப்பாற்ற முனைந்து நால்வர் உயிரிழப்பு

ரம்புக்கனை பிரதேசத்தில் உள்ள ஊர் ஒன்றில் மலசலகூட குழிக்குள் விழுந்த பெண் ஒருவரை காப்பாற்ற முயற்சித்த மேலும் மூன்று பேர் நச்சு வாயு தாக்கபப்ட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்

அஸ்ரப் ஏ சமத் கேகாலை மாவட்டத்தில் 800 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார  சபையினால் வீடுகளைப் பெற்ற குடும்பங்களுக்கு வீட்டுரிமைப் பத்திரமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச,  அமைச்சா் கபீா் காசீம், பிரதியமைச்சா்  சம்பிக்கா பிரேமதாச ஆகியோறும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

Read More

ராஜபக்ஸ கிராமத்தில் பேய்; சூனியக்காரரை வரவழைக்க திட்டம்

தம்புட்டுகம ராஜபக்ஷ கிராமத்தில் ஆண், பெண் மற்றும் 14 வயதுடைய பெண் ஆகியோர் வெள்ளை உடையில் உலாவி வருவதாகவும் இதனால் பிரதேச மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ராஜபக்ஷ கிராமத்தின் கிராம சேவகர் அசோகா தர்மகீர்த்தி கருத்து தெரிவிக்கையில், கிராமத்தில் பல பேர், இதே போன்று வெள்ளை உடையில் மர்ம உருவங்களை கண்டு அச்சமடைந்துள்ளனர். எனவே கிராமத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சூனியக்காரர் ஒருவரை வரவழைக்க உள்ளோம். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு 50…

Read More

அஸ்பாக் அகமட் ஹாபீஸானார்

– அஸ்ரப் ஏ சமத் – அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாக கொண்ட பட்டய பொறியியலாளர் இர்சாத் அகமட்டின் மகன் அஸ்பாக் அகமட்  தெஹிவளை செயினப் பள்ளிவாசலின் மத்ரசாவில் பகுதி நேர மாணவப்பிரிவில் 3 வருடத்திற்குள்  முழுக் குர்ஆன் மனனம் செய்துள்ளார்.  இம் மாணவன் தரம் 8 லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவருக்கான பாராட்டு விழா அன்மையில் தெஹிவளையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் அஷ;ஷேக் யூசுப் முப்தி சிறப்புரையாற்றினார்.

Read More

மொஹமட் அஸ்மி கிடைத்தார்!

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி (17 வயது) என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015)ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என www.acmc.lk செய்தி வெளியிட்டு இருந்தது அறிந்ததே.. இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு இருந்த நிலையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்த அதேவேளை, சற்றுமுன் எம்மை தொடர்பு கொண்ட தகவலை வெளியிட்டவர், குறிப்பிட்ட மாணவர் கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்ம்மிடம் தெரிவித்தார். பண்டாரவளையைச் சேர்ந்த இவர் வீட்டில் அறிவிக்காமல் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு…

Read More

விபத்தில் 20 பேர் காயம்!

தலவாக்கலை – லோகி தோட்டம் பகுதியில் பவுஸர் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

ஊவா மாகாணத்தில் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்று அதன்பின் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு…

Read More