உணவு ஒவ்வாமையால் 100 பேர் வைத்தியசாலையில்
அவிசாவளை ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (22) மாலை உட்கொண்ட உணவு இவ்வாறு ஒவ்வாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (23) காலை வயிற்றுவலி, மயக்கம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்ட நூறுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
