Headlines

வைத்தியசாலையில் பணியில் இருந்த மருத்துவர் மரணம்!

சிலாபம் வைத்தியசாலையில் சேவையாற்றி வந்த பெண் மருத்துவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்று அதே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கல்கிஸ்சை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான நக்ஷலா ரஷ்டீன் என்ற இளம் பெண் மருத்துவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது பெற்றோர் சவூதி அரேபியாவில் வசித்து வருகின்றனர். இந்த மருத்துவர் சிலாபம் வைத்தியசாலையின் 8வது பிரிவில் கடமையில் ஈடுபட்டிருந்த போது நேற்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென சுகவீனமுற்றுள்ளார். இதனையடுத்து ஏனைய மருத்துவர்கள்…

Read More

வெள்ளவத்தையில் தீ!

வெள்ளவத்தை – இராமகிருஷ்ண மிஷன் சந்தியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தீ பரவியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கடிதங்களை விநியோகிக்காத மதுரங்குளி தபால்காரர் கைது

மக்களுக்கு விநியோகிப்பதற்குரிய ஒரு தொகை கடிதங்களை உரியவர்களுக்கு விநியோகிக்காது பௌத்த விகாரை ஒன்றின் அலுமாரியில் மறைத்திருந்த தபால்காரர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.  மதுரங்குளி தபால் நிலையத்தில் பணியாற்றும் மதுரங்குளி மஹகும்புக்கடவல பிரதேசத்சைத் சேர்ந்த தபால்காரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். நேற்று   திங்கட்கிழமை குறித்த சந்தேக நபராக தபால்காரர் மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒரு தொகை கடிதங்களை எடுத்துக் கொண்டு வெளியேறிய பின்னர் அவற்றை பௌத்த விகாரை ஒன்றின் புத்தக அலுமாரியில் மறைத்து…

Read More

பெண் ஒருவரை தாக்கி கட்டிவைத்து விட்டு நகைகள் கொள்ளை

ஏறாவூரில் இளம் குடும்பப் பெண் ஒருவரை கட்டிவைத்து விட்டு வீட்டில் இருந்த பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் மிச்நகர் பகுதியைச் சேர்ந்த இப் பெண்ணின் கணவனான கே.எம்.எம்.லாபிர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை செய்துள்ளார். இவரின் மனைவியான முகம்மது இஸ்மாயில் சித்தி பரினா (38 வயது)  என்பவரே தாக்குதலுக்கு இலக்கானவராவர். இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் நேற்று  பிற்பகல் 4.00 மணியளவில் வீட்டில் இருக்கும் போது மோட்டார் சைக்கிள் ஒன்றில்…

Read More

24 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் பயணித்த 4 படகுகளும் கைப்பற்றப்படடுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

தனியார் வங்கியில் கொள்ளை : தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ளை நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் கைக்குண்டை காட்டி ஊழியர்களை மிரட்டி 8 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்தி கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதுடன் பின்னர் குறித்த ஊழியர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என பொலிஸ் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. சீருடை மற்றும் புத்­தகப் பை ஆகி­ய­ன மாண­வியின் பாட்­டி­யினால் மாண­வியின் வீட்டில் ஒப்­ப­டைக்­கு­மாறு கொடுத்து அனுப்­ பப்பட்­டது என விசா­ர­ணை­களில் உறு­தி­யா­ன தைத் தொடர்ந்து கைதான 23 வய­து­டைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப்…

Read More

சுத்தமான குடிநீரை கோரி ஆர்ப்பாட்டம், பொலிஸார் தடியடி பிரயோகம்

திஸ்ஸ – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் பல்லேமல சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். பந்தகிரிய பிரதேசவாசிகளே ஆர்ப்பாட்ட த்தை மேற்கொண்டுள்ளனர். சுத்தமான குடிநீரை கோரி இவர்கள் ஆர்ப்பாட்ட த்தை முன்னெடுத்துள்ளனர்.

Read More

பத்தரமுல்லையில் சடலம் மீட்பு

பத்தரமுல்லை – தலஹென சந்தியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

புதிய போக்குவரத்து ஒழுங்கு : கடும் வாகன நெரிசல்

கொழும்பின் சில வீதிகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து ஒழுங்கு முறைகள் காரணமாக பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய பத்தரமுல்லை, பாராளுமன்ற சுற்றுவட்டம், வெலிக்கடை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் தொடர்பில் 1929 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும்

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. கடந்த வெள்ளிக்­கி­ழமை குறித்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு 1290 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவற்றில் 1202 முறை ப்­பா­டுகள் தேவை­யற்­றவை என்றும் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. அவற்றில் சிறு­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள், சர்­வ­தேச பாட­சா­லை­களின் கட்­டணப்…

Read More

டெங்கு காய்ச்சல்; அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

டெங்கு நுளம்புகள் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் காய்ச்சல் குறித்து பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டு­மென சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரி­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்கை ஒன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது. மழைக்கு பிந்­திய காலம் என்­பதால், டெங்கு நோய் தற்­போது வேக­மாக பரவ ஆரம்­பித்­துள்­ள­மை­யினால் பொது மக்கள் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். குறிப்­பாக மேல் மாகா­ணத்தின் கொழும்பு மற்றும் கம்­பஹா மாவட்­டங்­களில் இந்த நோய்…

Read More