Headlines

பாராளுமன்ற வீதியினை மறிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு தடை!

பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் அதனை தடை செய்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றின் ஊடாகவே இத்தடையுத்தரவு காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து , இன்று முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கே இவ்வாறு காவல்துறையினர் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை இன்று ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை ஆர்ப்பாட்டப் பேரணி…

Read More

2016 ஜனவரிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்க உறுதி

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 2016 ஜனவரி இறுதிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மீரியாபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாதவண்ணம் நிலத்தை செப்பனிடுதல், மூலப்பொருட்களின் விநியோகம், போன்ற பல காரணிகள் இதற்கு…

Read More

தேவை­யற்­ற ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர் : லக் ஷ்மன் கிரி­யெல்ல

உயர் தேசிய கணக்­கீடு டிப்­ளோமா பாட­நெறி தொடர்­பான அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளித்த நிலை­யி­லேயே மாண­வர்கள் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர். இது தேவை­யற்­ற­தாகும் எனத் தெரி­வித்­துள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல. இது தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­கள் விரைவில் வெளி­யி­டப்­ப­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாண­வர்­களின் அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. கடந்த 29 ஆம்…

Read More

மலையகத்தில் கடும் மழை

– க.கிஷாந்தன் – மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும்…

Read More

ஜனக பண்டார இன்று நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். மாத்தளை திம்புல்கமுவ பிரதேசத்தில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித படுகொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்பய்பட்டிருந்தார். கடந்த மாதம் 20ம் திகதி சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். சந்தேக நபரை மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு…

Read More

“வீடுகளை உடனடியாக கட்டித் தா” : மீரியபெத்தை மக்கள் ஆர்ப்பாட்டம்

பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை. மக்கள்தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும்…

Read More

சேயா செதவ்மி படுகொலை : சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தத் தடை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹ_வளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை, வெலிக்கடை, மிரிஹான, கிரிபத்கொடை, தலங்கம மற்றும் வத்தளை ஆகிய நகரங்களில் விதிக்கு முரணான வகையில் வாகனத்தை செலுத்துதல், அனுமதியற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்தல் மற்றும் முச்சந்திகளில் வாகனங்களை முந்திச் செல்லுதல் என்பன இன்று முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…

Read More

விமானமொன்று மத்தளையில் தரையிறக்கம்

குவைத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.230 ரக விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடும் மூடுபனி காரணமாகவே குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

கராத்தே வீரரின் கொலை முக்கியஸ்தரும் கைது

கராத்தே வீரரும் இரவு களியாட்டகத்தின் உரிமையாளருமான வசந்த சொய்ஸா அநுராதபுரத்தில் வைத்து அண்மையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முக்கிய சந்தேகநபரான எஸ்எப் லொக்கா என்ற இரான் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்எப் லொக்காவின் சகோதரர் உட்பட்ட 20பேர் வரை வசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைலெவல் வீதி ஊடான விஜேராம சந்தி வரையான பிரதேசத்தில் வாகனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

Read More

கொண்டாயாவுக்கு ஆதரவாக செயற்படும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கொட்டதெனியாவ பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளான கொண்டயா சார்பில் செயற்படும் சட்டத்தரணிகளுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். கொட்டதெனியாவ சிறுமி சேயா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை ஆதாரபூர்வமான குற்றவாளியாக சித்தரித்திருந்த பொலிசார் , அவரை சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியிருந்தனர். எனினும் மரபணு பரிசோதனையின் ஊடாக அவர் நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அநியாயம் இழைக்கப்பட்ட கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவுக்கு ஆதரவாக உதுல் பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவொன்று…

Read More