Headlines

பீ. ஜெ வந்தால் கலவரம் வெடிக்குமாம்

இந்திய மார்க்க அறிஞர் பி ஜெய்னுலாப்தீன் இலங்கை வரவுள்ள நிலையில் அவரை இலங்கைக்குள் அனுமதிக்க கூடாது என ஆசாத் சாலி வலியுருத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் கடந்த 2005ல் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் அப்போதைய பாதுகாப்பு செயலாலரும் அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று ரனிலின் அரசு அவர் நாட்டுக்குள் வந்து மார்க்க சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்துள்ளது.இலங்கைக்குள் இஸ்ரேல் நட்பு உயிர்பெற்றுள்ள நிலையில் பி ஜெய்னுலாப்தீன் இஸ்ரேல்…

Read More

மத்திய மாகாண சபையில் அமளி

மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…

Read More

தென்னாபிரிக்க நாட்டவர் கைது

தென்னாபிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. காலாவதியான கடவு சீட்டுடன் தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தங்காலை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

லங்கா சதொசவில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை

ராஜபக்ச ஆட்சியின் போது லங்கா சதொச நிறுவனத்தில் இடம்பெற்றாகக் கூறப்படும் 5000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் சதொச நிறுவனத்தின் பிரதான பதில் பொது முகாமையாளர் கே.ஆரியவன்சவிடம் வாக்குமூலம் ஒன்று பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. பாரிய ஊழல், மோசடி குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இன்று கே.ஆரியவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனம் கணனிமயப்படுத்தப்பட்டமை, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறிய சுற்றுலா விடுதி, எரிபொருள் நிரப்பு நிலைய நிர்மாணம், தலைமைச் செயலகம் நவீனமயப்படுத்தப்பட்டமை, வர்த்தக கட்டிடம் நவீனமயப்படுத்தப்பட்டமை, இறக்குமதி…

Read More

முன்னாள் கடற்படை தளபதியிடம் இன்று வாக்குமூலம் பெறப்படுகிறது

முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக்க திஸாநாயக்கவை இன்று பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ரக்னா லங்கா ஆயுதக்கப்பல் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆயுதக்கப்பல் தொடர்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சோமதிலக்க அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரிடம் வாக்குமூலங்கள்…

Read More

ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி கையெழுத்து வேட்டை

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது. கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகரிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, பாலியல் உணர்வுகளை தூண்டும்…

Read More

“திருட்டு பாஸ்போர்ட்” சபையில் விமலுக்கு கேலி

“திருட்டு பாஸ்போர்ட்”, “டபிள் பாஸ் போர்ட்” என சபையில் ஆளும் தரப்­பினர் கூச்­ச­லிட சபைக்குள் சிரித்­த­வாறு உள்நுழைந்தார் விமல் வீர­வன்ச எம்.பி.உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெறி மாண­வர்கள் பொலி­ஸாரால் தாக்­கப்பட்ட விவ­காரம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்­தது. இதன்போதே சபைக்குள் விமல் வீர­வன்ச எம்.பி வந்தார். இவரை ஆளும் தரப்­பினர் மேற்­கண்­ட­வாறு கூச்­ச­லிட்டு ஆர­வா­ரத்­துடன் வர­வேற்­றுள்­ளனர். இந்த வர­வேற்பை விமல் வீர­வன்ச சிரிப்­புடன் ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தார்.தமது இருப்­பி­டத்தில் நின்று கொண்டு…

Read More

அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி

அதியுயர்  வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலி ஜின் தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல் : பாராளுமன்றில் சர்ச்சை

கொழும்பு வோட் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் தற்போது பாராளுமன்றில் விவாதம் நடைபெறுவதாகவும் இதனால் சர்ச்சை நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More

துமிந்தவுக்கு நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய விசேட நீதிபதி குழு  அனுமதி வழங்கியுள்ளது. தனது தலையில் சத்திர சிகிச்சையொன்றை சிங்கப்பூரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால்  நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பவர் 2 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூரில்…

Read More

ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More