Headlines

ஜனவரி மாதத்திற்குள் வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படும்

மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அடுத்த ஜன­வரி மாதத்­திற்குள் வீடுகள் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­படும். இது தொடர்பில் நில­விய அனைத்து குறை­பா­டு­களும் நிவர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­ஸ­ன­ யாப்பா தெரி­வித்தார். அர­சியல் மாற்­றத்தின் கார­ணத்­தி­னா­லேயே இவ்­வி­ட­யத்தில் கால­தா­மதம் ஏற்­பட்­ட­தா­கவும் அமைச்சர் சபையில் தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கண்டி மாவட்ட ஐக்­கிய தேசிய கட்சி எம்.பி. வேலு­கு­மா­ரினால் மீரி­ய­பெத்தை மற்றும் மலை­யக மண்­ச­ரி­வுகள் தொடர்­பாக முன்­வைத்த சபை ஒத்தி வைப்பு பிரே­ர­ணைக்கு பதி­ல­ளித்து சபையில் உரை­யாற்றும் போதே…

Read More

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இன்று,  வெள்ளிக்கிழமை (6) ஜும்மா தொளிகைக்கும் பின், மருதானை பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி பலஸ்தீன  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாத சட்டவிரோத இஸ்ரேலுக்கு எதிராக  ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகல முஸ்லிம்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Read More

PJ வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை

1437-01-22 2015-11-05 தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது. கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும்  சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த…

Read More

சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) மாலை காலஞ்சென்ற சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு கொழும்பு சுலைமான் டெரஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Read More

மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது…

Read More

திட்டமிட்டபடி பீ.ஜே. வருவார் – SLTJ அறிவிப்பு

தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. ஜெய்னுப் ஆப்தீன் திட்டமிட்டபடி இலங்கை வருவார் SLTJ அறிவித்துள்ளது. இதுபற்றி ஜமாத்தின் துணைச்செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில், பீ.ஜே. இலங்கை வருவதற்கான அத்தனை சட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவர் நிச்சயம் இலங்கை வருவார். குறிப்பிட்டபடி நிகழ்வுகளில் பங்கேற்பார். அதில் எத்தகைய மாற்றமும் கிடையாது. கடந்த காலங்களில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்போதும் அப்படித்தான். நாம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுபவர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே…

Read More

பொலன்னறுவையில் ஊடகப் பயிற்சி பாடநெறி

பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடாகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஊடகப் பயிற்சிபாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப் பயிற்சியை பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து நடத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒற்றை நாள் பயிற்சி முகாம் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும்…

Read More

அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்

அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….

Read More

சோமா எதிரிசிங்க காலமானார்

இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகி மற்றும்முன்னணி பெண் வர்த்தகர் சோமா எதிரிசிங்க காலமனார். 939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கவும்: அமைச்சர் றிஷாத்

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத்  பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும், காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம்…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று விசாரணை!

உயர்தர தேசிய தொழில்நுட்ப கணக்காய்வாளர் டிப்ளோமா மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த முறைப்பாட்டின் மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விசாரணை நேற்று முன்தினம் காலை எடுக்கப்படவிருந்த போதிலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் சிலர் விசேட கடமையொன்றுக்கு செல்லவேண்டியிருந்ததால், வேறொரு தினத்துக்கு அந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று…

Read More

1 கோடி ரூபா கோரும் கொட்டதெனியாவ மாணவன்

கொட்டதெனியாவ சிறுமி சேயா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவன் சுரஞ்சன் பிரதீப் செனவிரட்ன, தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று (04) தாக்கல் செய்து குறித்த மனுவில், பொலிஸார், தன்மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தன்னை கைது செய்து, கொடுமைப்படுத்தியதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ரூபா ஒரு கோடியினை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியுள்ளார். குறித்த மனு, வழக்கறிஞர் தீஷ்ய வேரகொடவின் ஊடாக உச்சநீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்மனுவின் பிரதிவாதிகளாக, கொட்டதெனியாவ…

Read More