Headlines

வளவை கங்கையில் முதலையிடம் சிக்கிய பெண் மாயம்!

வளவை கங்கையில் நீராட சென்ற அம்பலந்தொட பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளது. இன்று காலை 6.45 மணியளவில் குறித்த பெண், வளவை கங்கையில் நீராட சென்ற போது இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து காணாமல் போன பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

மர்மபொருள் இன்று மாலை 6.30 க்கு விழும்

விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விண்­வெளிக்கு ஏவப்­பட்ட விண்­கலம் ஒன்றின் பாக­மான டப்­ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று முற்பகல் 11.45 மணிக்கு இலங்­கையின் தென் கடற்­ப­ரப்பின் கட­லோ­ரத்­தி­லி­ருந்து 62 மைல் தூரத்­தில்  விழும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சால் தெரிவிக்கப்பட்டது….

Read More

களவாடிய 30ஆயிரம் டின் மீன்கள் மீட்பு

ரத்தொலுகம வீடமைப்பு திட்டத்தின் அங்காடியொனறில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபா 47 இலட்சம் பெறுமதியான 30ஆயிரம் டின் மீன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த டின் மீன்கள் நீர்க்கொழும்பு – கிபுலாபிடிய பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இருந்து திருடப்பட்டவை என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ரத்தொலுகம பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

– க.கிஷாந்தன் – தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் 12. ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது…

Read More

விழப்போகும் மர்மப்பொருள்! காத்திருக்கும் விஞ்ஞானிகள்

இலங்கையின் தென்பகுதிக் கடலில் இன்று காலை விழும் என்ற எதிர்பார்க்கப்படும் மர்மப் பொருளைக் கண்காணிக்க ஐரோப்பிய விண்வெளி முகவர் அமைப்பின் விஞ்ஞானிகளும், இலங்கை விஞ்ஞானிகளும், தயார் நிலையில் உள்ளனர். WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள சுமார் 7 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று, இன்று காலை இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் இலங்கைக்குத் தெற்கே 65 கி.மீ தொலைவில் கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மர்மப் பொருள், 1969ஆம் ஆண்டு அமெரிக்கா செலுத்திய அப்பலோ 10…

Read More

சோபித்த தேரரின் இறுதி ஊர்வலத்தில் முஸ்லிம்களின் பணிஸ் தன்சல்..

மறைந்த மரியாதைக்குரிய  மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடலுக்கு இன்று இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தோருக்கு முஸ்லிம் சகோதரர்கள் தானசாலையொன்றை அமைத்து ‘பணிஸ்’ வழங்கியிருந்த நிகழ்வை சிங்கள ஊடகங்களும், இன- மத நல்லுறவுக்கு இலங்கை முஸ்லிம் உதாரணமாக வாழ்கிறார்கள் என குறிப்பிட்டு இருந்தது காணக்கூடியதாக இருந்தது. இன, மத நல்லுறவுக்கு உதாரணமாக அமைந்த இந்நிகழ்வின் படங்கள் சில..

Read More

தென் வான்பகுதி பறப்பற்ற பகுதியாக பிரகடனம்

விண்ணில் இருந்து ‘WT1190F’ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று நாளை வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

Read More

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்

– செல்வராஜர் – 80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய் தந்தை, இரு மகன்மார்கள், 3 மகள்மார்கள் உட்பட 7 பேர் கொண்ட குடும்பமொன்று வசித்து வந்துள்ளது. 80 வயதுடைய தாயின் பெயரிலே அனைத்து சொத்துகளும் இருந்துள்ளன. இந்நிலையில் இவருடைய கணவன் 28 வருடங்களுக்கு முன்னர் இறந்துள்ளார். இதன் பின்னர் தாயின்…

Read More

நாகவிஹாரையிலிருந்து கண்ணீர் வெள்ளத்துடன் பயணிக்கும் மாதுலுவாவே

இறையடி எய்திய மாதுலுவாவே சோபித்த தேரரின் தேகம், கோட்டே ஸ்ரீ நாகவிஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. பெருந்திரளான மக்களின் துயர கண்ணீருடன் அன்னாரை சுமந்த பேழை விஹாரையிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாகவிஹாரைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அன்னாரது தேகம், பாராளுமன்ற கட்டட மைதானத்தை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகின்றது.

Read More

கீழிறங்கியுள்ள நுவரெலியா – ஹட்டன் வீதி

– க.கிஷாந்தன் – நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் 2 வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது. சுமார் 5 மீற்றர் தூரமான வீதி கீழ்றங்கியுள்ளதால் இரு வழி பாதையான இதில் இந்த பகுதியில் ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் வீதி கீழ்றங்கியுள்ளதால் இந்த பாதையை…

Read More

மிதிபலகையில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார். டிசம்பர் 01 ஆம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாகவும் புகையிரதம் பயணிக்கும் வேளைகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

தேசிய அடையாள அட்டை 12 இலக்கங்களை கொண்டதாக மாற்றம்

1972ம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களும் ஆங்கில எழுத்துக்களான V மற்றும் X காணப்பட்டது. தேசிய அடையாள அட்டை தொடர்பாக தற்பொழுது அதிக அவதானம் செலுத்தப்படுவதால் அதனை புதுப்பித்து 12 இலக்கங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More