Headlines

கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்று வீடு திருப்பாமையினால் பெற்றோர் அவரை தேடிய போது பாடசாலைக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மேலும் குறித்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான். பொலிஸார் சம்பவம்…

Read More

புளத்சிங்கள தொகுதியின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைது

களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது….

Read More

களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 21 கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சிறுவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த வீதி பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தீர்மானித்துள்ளதாக சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

Read More

2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணைத் திகதிகள் வௌியீடு!

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை முறைகள் மற்றும் திகதிகள் கல்வியமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன. அவ்வகையில் அனைத்து தமிழ் , சிங்கள பாடசாலைகளுக்கும் முதல் தவணைக்காக பாடசாலைகள் ஜனவரி 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதியுடன் முடிவடையும். முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதல் தவணை ஜனவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியளவில் முதல் தவணைக்காக பாடசாலை மூடப்படும். அதனையடுத்து அனைத்து சிங்கள தமிழ் பாடசாலைகளுக்கான…

Read More

காம்புடன் காணப்படும் கோழிமுட்டை!

– வத்துகாமம் நிருபர் – அவி­சா­வளைப் பகு­தியில் உள்ள  கோழி வளர்ப்பு நிலையம் ஒன்றில் கோழி ஒன்று இட்ட முட்­டையில் காம்பு  காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவி­சா­வளை, வில­உட துன்­போ­வில என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு­வ­ரது கோழிப் பண்­ணையில் உள்ள ஒரு கோழியே இவ்­வாறு காம்­புடன்  கொண்ட முட்­டையை இட்­டுள்­ளது.

Read More

கொட்டாவி விட்டவருக்கு 8 மாத சிறைத்தண்டனை!

நீதவான் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இமேஷா வசந்த என்பருக்கே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். மேலும், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேக நபராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

தபால் திணைக்களப் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

தபால் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட மேலதிக செயலாளருடனேயே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தபால் தொழிற்சங்க சம்மேளன ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்களத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி கடந்த 13ம் திகதி ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இன்று இடம்பெறும் கலந்துரையாடல்களின் பின்னர்…

Read More

மத்தல விமானநிலையத்தில் ஒருவர் கைது

– K.Kapila – இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயன்ற நபரை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 6 கோடியே 60 இலட்சத்து 76 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மத்தல விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

12 மணி நேர நீர்வெட்டு

– எம்.ஆர்.எம்.வஸீம் – அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்கை கார­ண­மாக நாளை 17ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 8மணி முதல் இரவு 8மணி வரை­யான 12மணி நேர நீர் விநி­யோகம் தடைப்­படும் என தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்­புச்­சபை அறி­வித்­துள்­ளது. மொரட்­டுவை மாந­கர சபை பிர­தேசம்,இரத்­ம­லானை,சொய்­சா­புர,பாணந்­துறை, நல்­லூ­ருவ, கிரி­பே­ரிய, கெஸல்­வத்தை,ரை­கம,பண்­டா­ர­கம,வெல்­மில்ல,குபுக, ஹொரணை மற்றும் மொரன்­து­டுவ ஆகிய பிர­தே­சங்­களும் பிலி­யந்­தலை கெஸ்­பேவ நகர சபை பிர­தேசம், பொல்­கஸ்­ஓ­விட்ட,சிய­ப­லா­கொட,வேதர, றிலா­வல,அம்­ப­லன்­கொட,ஹெர­லி­யா­வல,பால­கம,திய­கட மற்றும் ததாயன்ன ஆகிய பிரதேசங்களிலேயே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

Read More

சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை   எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external)ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Read More