Headlines

போக்குவரத்து அமைச்சுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். டீ.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள போக்குவரத்து அமைச்சு, பத்தரமுல்லைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில், அதனை கண்டிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ரயில் போக்குவரத்து சேவையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தற்போதைய கட்டிடத்திற்கு வாடகை மற்றும் வரி செலுத்தப்படுவதில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இடமாற்றம் செய்யப்படவுள்ள பத்தரமுல்லை கட்டிடத்திற்கு வருடாந்தம் 50 இலட்சம் வாடகை செலுத்த வேண்டியுள்ளதாகவும்…

Read More

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

Read More

கண்டி பஸ் வீடொன்றின் மேல் விழுந்து 22 பேர் காயம்

– றிஸ்மி கலகெதர – கண்டியில் இருந்து வட்டபுலுவ நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வட்டபுலுவ “யக்கா வங்குவ” எனும் திருப்பத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயனித்த 22 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு ஏழு மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. “யக்கா வங்குவ” திருப்பத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மேல் விழுந்தது. வீட்டில் இருந்தவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. அதேவேளை, பஸ்ஸில் பயனித்த 22 பேர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Read More

இரத்தினபுரி மாவட்டத்துக்கு எயிட்ஸ் பரவும் அபாயம்

இரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. எனவே, தோட்டத் தொழி­லா­ளர்கள் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்­பு­ணர்­வு­களைப் பெற்றுக் கொள்­வது கட்­டா­ய­மா­கு­மென இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்­திய கலா­நிதி காஞ்­சன உப­சேன கூறினார். இரத்­தி­ன­புரி பொது வைத்­தி­ய­சா­லையில் அண்­மையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது இதனைத் தெரி­வித்தார். இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தி­லி­ருந்து பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் வெளி­நாட்டு பயணம் மேற்­கொள்­கின்­றனர். குறிப்­பாக பணிப்­பெண்­க­ளாக வியா­பார நோக்­கத்­துக்கு மத்­திய…

Read More

சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

பிரபல வர்த்தகர் மொஹமட் சியாமின் தந்தைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். சியாம் படுகொலை தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின் பின்னர் சியாமின் தந்தை ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நீதிமன்றின் தீர்ப்பினை அவமரியாதை செய்யும் வகையில் சியாமின் தந்தை கருத்து வெளியிட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக…

Read More

டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி

டெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார். கடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு…

Read More

மனுக்குலத்தின் தாயகம் இலங்கை; நுால் வெளியீடு

– அஸ்ரப் ஏ சமத் – சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள். மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை அவா்கள் பாதம் பட்ட இடம் இதனை நாம் சஹீட்…

Read More

கொண்டையாவுக்கு ஐந்து கோடி ரூபா நட்டஈடு வேண்டுமாம்!

ஐந்து கோடி ரூபா நட்டஈடு கோரி கொண்டயா எனப்படும் துனேஸ் பிரியசாந்த உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த நஷ் ஈடு பொலிஸ் உத்தியோகத்தர்களிடமே கோரப்பட்டுள்ளது. மினுவன்கொட கொட்டாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சேயா செவ்தம்னி என்ற ஐந்து வயது சிறுமி கொலையுடன் எவ்வித தொடர்பையும் பேணாத தம்மை சில நாட்கள் தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் நட்டஈடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப்…

Read More

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தள்ளது. இதற்கமைய கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, முல்லேரியா , கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை (28) காலை 11 மணியிலிருந்து 18 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

களுத்துறை அரபுக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு விழா

– களுத்துறை  செய்தியாளர் – மக்கா, ஹரத்தில் மறைந்த மர்ஹூம் சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் ஞாபகார்த்தமாக நடைபெற்ற 66 நாடுகளிலிருந்து 224 மாணவர்கள் பங்கு கொண்ட உலகளாவிய ரீதியில் நடைபெற்ற கிராத் போட்டியில் 4ஆம் இடத்தைப் பெற்ற களுத்துறை ஹில்ரியா அரபுக் கல்லூரியின் 17 வயது மாணவர் அல்-ஹாபிழ் முஹம்மத் நஸ்லின் நவாஸ் இற்கு கடந்த 20/11 அன்று களுத்துறை ஹிலிர் ஜும்மா பள்ளிவாயலில் ஜும்மா தொழுகையின் பின் பாராட்டு விழா இடம்பெற்றது. மக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கையிலிருந்து 3 பேர் தெரிவு…

Read More

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நடைபயணம் தொடர்கிறது

இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தி விற்பனை செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள நடைபயணம் நிட்டம்புவ நகரிலிருந்து இன்று தொடர்கின்றது. இந்த நடைபயணம் கண்டியில் ஆரம்பமாகியதோடு, தொடர்ச்சியாக 5 நாட்களாக கொழும்பு நோக்கி  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் அனுமதி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதிதிரட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும், மாலபே SAITM என்ற பட்டத்தை விற்பனை செய்யக்கூடாது போன்ற 6 கோரிக்கைகள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு இந்த நடைபயணம்…

Read More

அநுராதபுரம் கராத்தே வீரர் கொலை! 35 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

அநுராதபுரம் நகரில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 பேர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வசந்த சொய்சா என்ற என்ற களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் உட்பட 35 பேருக்கு எதிராக காவற்துறையினர் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளனர். அநுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலங்சூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே காவற்துறையினர்…

Read More