Headlines

20 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் குயில்வத்த பகுதியில் லொரி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். ரொசாலை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொரியின் சுக்கான் திடீரென இயங்காத நிலையில் சாரதி கட்டுபாட்டை இழந்து லொரி பாதையை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துகுள்ளானதில் சாரதி உட்பட மேலுமொருவராக இரண்டு பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும், காயங்களுக்குள்ளான இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த…

Read More

கைவிலங்குடன் தப்பி சென்றவர் மடக்கிப்பிடிப்பு

பொலிஸாரின் பாதுகாப்பிலிருந்து கைவிலங்குடன் தப்பிச் சென்ற கைதி ஒருவரை கலஹா நகரில் வைத்து கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கம்பளை பொலிஸார் கட்டுகஸ்தோட்டை வத்துவல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவரை கைது செய்து கைவிலங்கிட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர் திடீரென தலைமறைவாகியுள்ளார். இது குறித்து சகல பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் கைவிலங்குடன் வாகனம் ஒன்றினை கலஹா நகரின் ஊடாக செலுத்திச் சென்ற…

Read More

முஸ்லிம் மாணிக்க வியாபாரி மடகஸ்காரில் கொலை

இலங்கை – காலி பிரதேசத்தில் வசித்து வந்தவரும் தெல்தோட்டையை பிறப்பிடமாகக் கொண்ட பிரபல மாணிக்க வியாபாரியான நயிம் ஹாஜியார் (வயது-56) மடகஸ்காரில் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணிக்க வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு மடகஸ்கார் சென்ற போது இவர் தங்கியிருந்த அறையில் வைத்தே இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தன்னுடன் கொண்டு சென்ற பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் இவரது ஜனாசா நேற்று மடகஸ்காரில் நல்லடக்கம்…

Read More

பொலிஸ் கெப் புகையிரதத்தில் மோதி விபத்து

அம்பலங்கொட – கெபு ஹெல பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பற்ற புகையிரத கடவையை, கடக்க முற்பட்ட பொலிஸ் கெப் ரக வாகனம், புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது வாகனத்தின் இயந்திரம் செயல் இழந்துள்ளது. பிறகு அதில் இருந்த பொலிஸார் இறங்கியுள்ளனர். பின்னரே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்றும் நாளையும் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று மாலை நான்கு மணி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதி, பண்டாரநாயக்க சுற்றுவட்டம், பேஸ்லைன் வீதி, ஒருகொடவத்தை ,…

Read More

கொலன்னாவை நகர சபை தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொலன்னாவை நகர சபை தலைவர் பத்ம உதய சாந்தவை கொழும்பு மேலதிக நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார். மீதொட்டமுல்ல குப்பைமலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஏ.ஸ்.பி. யின் மனைவியின் காருடன் மோதிய பொலிஸாரின் மோட்டார் சைக்கிள்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பிரதி பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி செலுத்தி வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளான  சம்பவம் நேற்று கொழும்பு பிலிப் குணவர்தன பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் திலங்க சுமதிபாலவுக்கு ஆதரவு வழங்குவதற்காக காரில் சென்ற பொலிஸ் அத்தியட்சகரின் மனைவியின் வாகனத்திலேயே, 100கிலோ மீற்றர் வேகத்தில் வந்த பொலிஸ் அதிகாரிகளின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. குறித்தப் பெண் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பதற்காக சினமன்…

Read More

இரண்டு மணி நேரத்தில் பொலிஸ் அறிக்கை

நாடளாவிய ரீதியில் எந்த பொலிஸ் பிரிவில் வசிப்பவரும் தொழில் நிமித்தம் வெளி நாடுசெல்லும் நோக்கில் பொலிஸ் அறிக்கைகளுக்கு வாரக்கணக்கில் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாடொன்றுக்கு தொழிலுக்கு செல்லும்போது பொலிஸ் அறிக்கை கோரப்படும் அப்போது யாழில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வந்து கைவிரல் ரேகைகளை…

Read More

650,000 குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகள்

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை குற்ற விசா­ர­ணைக்கு பயன்­ப­டுத்­த­வென நாட­ளா­விய ரீதியில் விரிவு படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் பதிவுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். கைவிரல் ரேகை ஒத்துப் பார்க்கும் சேவையை நாட­ளா­விய ரீதியில் விஸ்­த­ரிக்கும், குற்ற விசா­ர­ணையின் போது கைது நட­வ­டிக்­கை­களை இல­கு­ப­டுத்தும் வித­மா­கவும் இரு வேறு நட­வ­டிக்­கை­களின்…

Read More

தெல்தெனியவில் டெங்கு அபாயம்

கடந்த சில­வா­ரங்­க­ளாக மழை பெய்து ஓய்ந்­த­தை­ய­டுத்து கண்டி, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக தெல்­தெ­னிய பொது சுகா­தார அதி­கா­ரிகள் அலு­வ­லகம் தெரி­விக்­கின்­றது. இதே­வேளை இரு டெங்கு நோயா­ளர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­லு­வ­லக சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­த­துடன் இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இது இவ்­வா­றி­ருக்க பொது சுகா­தார அதி­கா­ரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்­றா­டல்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர்.டெங்கு நுளம்­புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்­றா­டலை…

Read More

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை,  கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த…

Read More