Headlines

வேலை நிறுத்த எச்சரிக்கை : தபால் தொழிற்சங்கங்கள்

தமது தொழில் தொடர்பான பிரச்சனைகளுக்கு வாக்குறுதி அளித்ததன் படி தீர்வுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லையென தபால் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவிக்கின்றன. குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அதிகாரிகள் பெற்றுக்கொண்ட கால அவகாசம் எதிர் வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சின்தக பண்டார தெரிவித்தார்.

Read More

திருமலை மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யுவுள்ள இப்தார் நிகழ்வுகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Read More

அரநாயக்கவில் மீட்கப்பட்ட உடற்பாகங்களால் சிக்கல்

அரநாயக்கவில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்னும் கேகாலை பெரிய வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உடற்பாகங்கள் வைத்தியசாலையில் பிரதே அறையில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உடற்பாகங்கள் பிரேத அறையில் குளிரூட்டப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவன்ன கூறுகின்றார். இதன்காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலும் கடையடைப்பு

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமை, 27ஆம் திகதி முதல் கண்டி நகரத்திலுள்ள சகல கடைகளிலும் கறுப்பு நிற கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளனர். அத்துடன், 29ஆம் திகதி சகல கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

நாட்டிலுள்ள அனைவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மின்சாரம்

நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுசெய்யப்படும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

Read More

சூடான் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி!

சூடானில் உயர்கல்வி கற்க விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், மருந்தகவியல், பல்மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், நிர்வாகம், கணக்கியல், பொருளியல், உயிரியல், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய கற்கைநெறிகள், இஸ்லாமிய சட்டம் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை பின்பற்ற முடியும். 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தங்களது சுயவிபரக்கோவையை 0112333563 என்ற தொலை நகலுக்கோ அல்லது overseashigherstudies@gmail.com என்ற ஈமெயிலுக்கோ உடன் அனுப்பிவைக்கவும். இந்த கற்கைநெறிகளுக்கான செலவு,…

Read More

நாட்டில் 50,000 ஹெரொயின் பாவனையாளர்கள்

இலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

Read More

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து : ஒருவர் பலி

மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் குறித்த கட்டிடமும் சேதமடைந்துள்ளது. குறித்த நபர் குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக்கொண்டிருக்கும் போது, குளிர்சாதன பெட்டியின் காற்று அழுத்தி வெடித்ததன் காரணமாகவே தீ பரவியுள்ளது. இதன்பின்னர், காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

அங்கொட மனநல வைத்தியசாலையின் நோயாளியை காணவில்லை

அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் மர்மான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் பணியாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துகொள்ள முடியாமல் தனது மகன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சந்தேக்கின்றனர். ஹிக்கடுவை – களுபே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய லக்ஷித பன்துல விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டமையால் கடந்த 13 ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில்…

Read More

இந்திய பிரஜையின் சடலம் மீட்பு

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர் இந்தியமீனவராக இருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

Read More

ஏழு இந்தியர்களும் தொடர்ந்தும் காவலில்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஏழு இந்தியப் பிரஜைகளையும் தொடர்ந்தும் காவலில் வைக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் வௌிநாட்டவர்களுக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைகள் 1075 தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் 650 குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகளை நிறைவு…

Read More

பத்ர் யுத்தமும் பதுறுக் காக்காவும்

பதுறுக் காக்கா பாயில் சாய்ந்து பத்ர் யுத்தத்தின் பயானைக் கேட்பார். படைகளைப் பற்றி பயானில் சொல்ல கடைகளின் விளம்பரம் இடையில் குறுக்கிடும். சீலை விளம்பரம் சென்று முடிய ஏழை சஹாபிகளின் இன்னல் தொடரும். அல்லாஹ்வுக் ‘கஞ்சி’ அவர்களின் யுத்தம்… அப் பயான் தொடர- பள்ளிக் ‘கஞ்சி’ பச்ச இஞ்சி கூட பதுறுக் காக்கா மெதுவாய்க் கூறுவார். பதுறு மெளலூதின் பாடல் வரிகள் புதிய மெட்டில் போகும் பயானில். பதுறுக் காக்கா பக்குவமாய் எழுந்து அடக்கத்துடனே ஆமீன் சொல்வார்….

Read More