Headlines

பணிப்­பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு

மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு தொழி­லுக்கு செல்லும் பணிப்­பெண்­களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது. வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக செல்லும் பெண்­க­ளுக்கு வழங்­கப்­படும் பயிற்­சியின் ஆரோக்­கி­யத்­தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்­பாக ஆராய்ந்து இந்த தீர்­மா­னத்தை எடுத்­த­தாக பணி­ய­கத்தின் ஊட­கப்­பேச்­சாளர் உபுல் தேஷப்­பி­ரிய தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கூறு­கையில், இது­வரை காலமும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்­காக…

Read More

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்

வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர். இன்று (13) காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி 80 பெண்களே இவ்வாறு வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர…

Read More

சவூதி வாகன ஓட்டுநர் கவனத்திற்கு

சவூதியில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில் ” சவூதியில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களின் (licence) ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பவும் அந்த நபர்கள் அனைவருமே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கபடுவார்கள். வாகனம் ஓட்ட கத்துகிட்டு திரும்பவும் ஓட்டுநர் உரிமமத்திற்கு விண்ணபிக்க வேண்டும்” – என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகம் இளையதலைமுறை. எனவே, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும்தெரிவித்தார்.

Read More

துபாயில் பெரும் தீ விபத்து. இரு 5 மாடி கட்டிடங்கள் சாம்பல் (வீடியோ & படங்கள்)

துபாயின் தேரா பகுதியில் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில்…

Read More

பெப்சி வடிவில் மது: சவூதியில் சம்பவம்

நேற்று(12\11\15)  துபாயிலிருந்து சவூதி அரேபியா வந்த லாரியில் 48,000 பெப்சி கேன்கள் வந்தது, முதலில் பெப்சி என்று நினைத்த சுங்க துறை அதிகாரிகள் அதை உற்று பார்க்கும்போது தான் தெரிந்தது போலியான பெப்சி கவர்கள் என்று. பிரித்து பார்த்தபோது அனைத்தும் மது கேன்கள். மேலும் விரிவான செய்திக்கு saudigazette.com.sa

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

வளைகுடா நாடுகளில் மேலும் வெப்பநிலை உயரும்

வளைகுடா நாடுகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது ஒரு அமெரிக்க ஆய்வு. உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது. மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை…

Read More

சவூதி  தொழிலாளர்களுக்கான புதிய  சட்டம்!

சவூதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவூதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 1. தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 2. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract paper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 3. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால்…

Read More

உலகின் முதன்முறையாக துபாயில் 5G இன்டெர்நெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முதல் 5G நெட்வொர்க் சேவை தொடங்கப்பட உள்ளதாக எடிசலாட் ( Etisalat ) குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மத் ஜூல்ஃபர் தெரிவித்தார். எக்ஸ்போ 2020 தொடங்கும் நேரத்தில் இந்த 5G நெட்வொர்க் சேவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் 5G நெட்வொர்க் சேவையில் அமீரகம் உலகின் முன்னோடியாக திகழ வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெகு விரைவில் 5G நெட்வொர்க் சேவையை பயன்படுத்த அமீரக மக்கள்…

Read More

கண்ணீரை சிந்தவைக்கும் நேர்மை – சவூதி அரேபியாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்..!

சவூதி அரேபியாவைச் சார்ந்த ஒருவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிட்ட பிறகு அந்த நிறுவனம் தவறுதலாக இவரின் வங்கி கணக்கிர்கு ஓரு இலட்சம் சவுதி ரியால்களை அனுப்பிவிட்டது (சுமார் 37 லட்சம் இலங்கை  ரூபாய்) தனது கணக்கில் ஒரு இலட்சம் ரியால் வந்ததை கண்ட அந்த மனிதர் அது தமக்கு உரியதல்ல என்பதை உறுதி படுத்தியதும் அந்த பணத்தை வங்கி கணக்கிலிருந்து விடுவித்து உரிய நிறுவனத்தை தேடி சென்று ஒப்படைத்தார்…

Read More

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!! (கவிதை)

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் பசியால் வாட்டி காயமும்…

Read More