Headlines

இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா!

-சுஐப் எம்.காசிம் – இலங்கையின் சரித்திரத்தில் இனச்சுத்திகரிப்பாய் அன்று வடபுல முஸ்லிம் மக்கள் எழுபத்தை யாயிரம் பேர் இடம்பெயர்ந்தலைந்த சோகம் எண்ணக்கண் கலங்குதையா பாசிசப் புலிகள் செய்த பயங்கர கொடுமை அந்தோ சொந்தமண் வீடிழந்தோம் சொகுசான வாழ்விழந்தோம் அந்தரித்தலைந்து சொத்து நகைபணம் தொழில் இழந்தோம் தங்கிய கல்வியோடு கடைகண்ணிப் பொருள் இழந்தோம் கப்பமும் பெற்றார் எம்மைக் கைதியாய்ப் பணயம் வைத்தார் புத்தளம் குருநாகலில் அனுபுரம் கொழும்பு மண்ணில் பித்தராய் அலைந்த எம்மைப் பேணினார் முஸ்லிம் சான்றோர் பசிக்குணவளித்தார்…

Read More

கரைகிறது வாழ்க்கை (Poem)

– நிஷவ்ஸ் – கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம் புரண்டு முரண்டு உருண்டு தவழ்ந்து தாய்ப்பால் முடியும் வாய்ப்போடு முடியும் மழலையாய் வாழ்ந்த குழந்தைப் பருவம். செல்லப் பிள்ளையாய் தொல்லைகள் கொடுத்து கள்ளமாய் சீனியை அள்ளித் தின்று துள்ளித் திரியும் பிள்ளைப் பருவம் ஐந்து வயதோடு அடங்கத் தொடங்கும். வேலிக்கு வெளியேயும் வேறுலகம் உள்ளதனை காலம் காண்பிக்கும் கால்களில் துடிப்பெடுக்கும் ஏலான்னு…

Read More

துருக்கியும் கிறுக்கனும் (Poem)

-முகம்மட் நிரோஸ் – தெருக்களில் இறங்கி திரண்ட மக்கள் துருக்கியை மீட்டதன் துணிச்சலைப் புகழ்ந்து முறுக்கிறார் மீசையை முக நூலில் பலபேர் கிறுக்கர்கர்கள் சில பேர் கிண்டலும் செய்கிறார் பொறுக்குது இல்லையே போஸ்ட்களைக் கண்டால். திருக்குர் ஆனை திரும்பியும் பாராரும் சிர்க்கை பித் அத்தை செய்யும் மனிதரும் பர்ளான தொழுகையை பாழாக்குவோரும் இருக்கிற நாட்டுக்கு எதுவும் செய்யாரும் துருக்கி நாட்டுக்காய் துடிப்பதில் பயன் என்ன? புரட்சி வெல்லனும் புது ஆட்சி வரனும் பிரச்சினை தோன்றனும் பிறகு தங்களின்…

Read More

ஸாகிர் நாயக்கும் சதிகளும் (Poem)

-Mohamed Nizous – தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள் வெளுக்கும் நாள் சதியெல்லாம் வெளியில் வரும். மார்க்கம் வளர்கிறது மனிதரின் பேச்சினாலே மூர்க்கம் கொண்டெழுந்த மோடி போன்ற மாற்றார்கள் தீர்க்க முனைகின்றார் தீனின் வளர்ச்சியினை யார்க்கும் முடியுமோ இறைவழியை அழிப்பதற்கு. கலிமாவைச் சொன்ன பின்னும் காரிருளில் இருப்பவர்கள் மலிவான விலைகளுக்கு மார்க்கத்தை விற்பவர்கள் இழிவான செயல்களினை இம்மனிதர் எதிர்ப்பதினால் பழிவாங்க முனைகின்றார்…

Read More

80 களில் ஒரு சஹர் (Poem)

-நிஷவ்ஸ் – பைவ் ட்ரம்ஸ் அலாம் பதற்றமாய் அடிக்கும். உம்மாதான் எழும்பனும் உள்ளுக்குள் ஆறுதல். படுத்த பாய் எடுத்து பக்குவமாய்ச் சுற்றி விட்டு வெளியே தொங்கும் வெள்ளை டியூப் லைட்டை மெல்லப் போட்டு விட்டு மெதுவாகக் கிணற்றில் அள்ளும் நீர் சத்தம் அடுத்துக் கேட்கும். திலாந்தின் ஓசைகள் திரும்பத் திரும்ப கலந்து காற்றில் காதுகளில் விழும். ராத்தா அடுத்தெழுந்து ராவு ஆக்கிய கறி எடுத்து அடுப்பில் வைத்து அடியில் கொள்ளி போட்டு கொளுத்தும் ஓசை கூதலில் கலந்து…

Read More

அபாயா (Poem)

– நிஷவ்ஸ் – எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா என்னென்று சொல்வதடி கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள் கண்ணுக்குள் குத்துதடி அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு அள்ளுறார் நியாயமாடி பிஞ்சுக்கு கவுண் வாங்கக் காசில்லா பெற்றோரும் உள்ளாரடி நெஞ்சையும் உடம்பையும் நெருக்கி இறுக்கி உடுக்கின்ற அபாயாக்கள் இது ஹிஜாபா இல்லை நடிப்பா அடி மார்க்கத்தை மலிவாக்கிறார். (அடி..) போட்டிக்கு விலை கொடுத்து வாங்குகிறார் காட்டிக் கலர்ஸ் போட மாட்டிட்டு முழிக்கின்றார் சில கணவர் மாட்டுக்கு புரியலைன்னு கார்ட்டுக்கும் கடனுக்கும் கனக்க…

Read More

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம் சொல்லும் நாறிய கருத்தால் கோடு ஏறிய குடும்பங்கள் எத்தனை? அடுத்தவன் மனைவிக்கு ஆட்டையை போடல் உடுத்த உடுப்புடன் ஓடிப் போதல் கொடுத்து உதவி குழியைத் தோண்டல் மருமகள் வாழ்வை மாமியார் கெடுத்தல் அருமையாய் பேசி ஆம்பிளையை கவிழ்த்தல் உரிமையைப் பேசி உம்மாவைப் பிரித்தல் தரித்திர நாடகத் தாக்கங்கள் ஆயிரம் இரண்டு வரிகளில்…

Read More

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!! (கவிதை)

பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் பசியால் வாட்டி காயமும்…

Read More

அனாதை பெண்!( கவிதை)

அப்பான்னு நினைச்சேன் அசிங்கமாய் தொட்டான்….! சகோதரன்னு பழகினேன் சங்கட படுத்தினான்……! மாமான்னு பேசினேன் மட்டமாய் நடந்தான்……! உறவுகள் அனைத்தும் உறவாடவே அழைக்கின்றன…..! பாதுகாப்பை தேடி பள்ளிக்கு சென்றேன்…..! ஆசிரியனும் அரவணைத்து மறுக்காதே மதிப்பெண் குறையும் என்றான்…..! நட்பு கரமொன்று நண்பனாய் தலைகோதி தூங்கென்றான்….! மரத்த மனம் மருண்டு சுருண்டு தூங்கையில் கைபேசியில் படமெடுத்தான் அவனும் ஆண்தானே …..! கதறி அழுது கடவுளிடம் சென்றேன் ஆறுதலாய் தொட்டு தடவி ஆண்டவன் துணையென்றான் பூசாரியான்..! அலறி ஓடுகிறேன்.. எங்க போவேன்?…

Read More

இதுதான் வளைகுடா வாழ்க்கை! (கவிதை)

நீங்கள் பஞ்சு மெத்தையில் படுக்கவேண்டும் . என்பதற்காக, நான் பாலைவனத்தில் படுக்குறேன் .. நீங்கள் குளிரும் மின்காற்றில் படுக்கவேன்டும் என்பதற்காக நான் அனல் காற்றில் படுக்குறேன் . உங்களின் நினைவுகள் என் கனவுகள். என் தோல்கள் மிரத்துப் போகுறது என் பாதங்கள் பிளந்து போகிறது. என் தலைமுறை வளர வேண்டும் என்பதற்காக… வெந்நீரால் என் வயதுடன் என் முடிகூட உதிர்ந்து போகிறது. – தமீம் –

Read More

சேலை உடுத்த ஓநாய்

சேலை உடுத்த ஓநாய் ஆழக் கடலிலே ஓலமிடும் ஒலி ‘ஐநா’ உனக்கின்று கேட்கிறதா…? நாடி நரம்பெங்கும் விம்மி புடைக்குது நாமும் வெடிகுண்டை தூக்கிடவா….? காலை உடைக்கிறான் ஆளை முடிக்கிறான் மூளை எடுத்தவன் உண்ணுகிறான் வாலைப் பிடிக்கவா..? வாழ்வை முடிக்கவா..? வாளைப் பிடித்து நாம் வாழ்ந்திடவா…? பாலை வனம்போல மாறும் மனங்களால் பாழும் கிணற்றிலே தள்ளப்பட்டோம் சேலை உடுத்தந்த ஓநாய் ‘விராதி’னால் மூலை முடுக்கெங்கும் கொல்லப்பட்டோம்… ஏழை எமக்கின்று வாழவழிகொடு ஏக இறைவனே கெஞ்சுகிறோம் நாளை விடியுமா..? நாளை…

Read More

ஜனாதிபதிக்கு மனு- ரோஹிங்கியா பரிதவிப்புகள்

ஜனாதிபதி மைத்திரி அவர்களே; அவர்களே என ஆரம்பிப்பதால் இது கடிதமென்று நீங்கள் எண்ணுதல் கூடாது இது ஒரு தேசத்தின் கண்ணீர் பிரதமர் அவர்களும் கவனிக்க வேண்டுகிறேன் இதுவானது ஓர் இனத்தின் வரலாற்று சோகம் தேசபிதாக்களே நீங்கள் மனித நேயத்தை மடியில் சுமந்து வந்திருப்பதாய் அடிக்கடி நான் சந்தோசிப்பேன் ஆறாயிரம் ரூபாவிற்குள் பதவியேற்றது எனது முதல் மகிழ்ச்சியானது முதலில் நான் உங்களை நம்பவில்லை நம்பும்படியாக முந்திய நிலைவரம் இருக்கவில்லை பிறகு பிறகு நம்பிக்கை பிறந்தது தலைவர்களுக்கு குறைவாயிருக்கிற நேயமானது…

Read More