Headlines

கல்வி அதிகாரிகள் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது – அமீரலி

– அபூ செய்னப் – கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகள் எமது மாவட்டத்தில் அதிகம்  காணப்படுகிறார்கள்.   இதனை நினைக்கும் போது மிகுந்த கவலையாக இருக்கிறது இவ்வாறான அதிகாரிகளின் மோசமான பக்கச் சார்பான நடவடிக்கைகளினால் எதிர்கால கல்விப்பரம்பரையினரான நமது மாணவ செல்வங்கள் மிகப் பிழையான முன்னுதாரணங்களை கற்றுக்கொளவார்கள் இது தொடர்பில் இனியும் பாராமுகமாக இருக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி மிகுந்த விசனத்துடன் கவலை தெரிவித்தார்.  …

Read More

மட்டுவில் தொடரும் யானைகளின் அட்டகாசம்!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் நேற்று அதிகாலையில் காட்டுயானை புகுந்து கைவரிசையினை மீண்டும் காட்டியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, நேற்று (16) அதிகாலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது அரிசி ஆலையினை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. யானைகளின் தாக்குதல்கள் இப்பிரதேசத்தில் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதனை அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More

மரக்கறிகளின் விலை மலைபோல் உயர்வு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக மரக்கறிகள் உட்பட உணவுப் பொருட்களின் விலைகள் மலையளவு அதிகரித்துள்ளன. 150 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ பச்சை மிளகாய் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையான உள்ளுர் மரக்கறிகள் 600 முதல் 700 வரை விற்பனையாகிறது. தம்புள்ள மற்றும் நுவரெலியா போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்படும் மரக்கறிகளின் விலையும் கிலோ ஒன்றிற்கு 200 முதல் 300 வரை…

Read More

கிழக்கு முதலமைச்சரின் அநாகரிகங்களுக்கு முடிவுகட்டவுள்ளோம் – அமீர் அலி

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்து கொண்டு இந்த நல்லாட்சிக் காலத்தில் குறுநில மன்னர்போல் அராஜக ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கெதிராக நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணை கொண்டு வரத் தயாராகிறோம் என கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் அல் அஷ்ஹர் வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற ஆற்றலுள்ள மாணவர்களைக் கௌரவிக்கும் வருடாந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு…

Read More

அமீரலியின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த அரசாங்க அதிபர்

– அபூ செய்னப் – கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வந்த முறையற்ற விதத்தில் ஆற்றுமண் அகழ்வு மற்றும் கிரவல் அகழ்வினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் தேவையான மண்ணை பெற்றுக் கொள்வதில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அபிவிருத்தி குழுக்களும் பெரும்பாலும் அதிக தொகை பணத்தை முகவர்களுக்கு கொடுத்தே தமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்தது இதற்கான அடிப்படைக்காரணம் அனுமதிப்பத்திரங்கள் வைத்திருக்கும் மணல் அகழும் முகவர்கள் அதிக…

Read More

சோபித தேரருக்கு காத்தான்குடியில் முஸ்லிம்களால் அஞ்சலி

– ஜவ்பர்கான் – மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மக்களால் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சங்கைக்குரிய சோபித தேரர் ஞாபகார்த் உரை சிங்களத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

Read More

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய நேரில் செல்வேன் : ஜனாதிபதி

உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும். இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும்…

Read More

காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

– பி.எம்.எம்.ஏ.காதர் – கிழக்கில் காட்டு யானை அச்சுறுத்தலை நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டு,அம்பாறை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது காட்டு யானைகளின் தாக்கத்தினால் பலர் உயிர் இழந்துள்ளனர் இது விடயத்தில் அவசரமாக நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து கிழக்கு மாகாண மக்களை காப்பாற்ற ஆவன செய்ய வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் வனவளத்துறை அமைச்சர் யவிக்ரம பெரேராவிடம் எழுத்து மூலமான…

Read More

மாடுகளை பிடிக்கும் நடவடிக்கையில் காத்தான்குடி பொலிஸார்

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்க காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காத்தான்குடி நகர சபை, ஆரையம்பதி பிரதேச சபை ஆகிய எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கட்டாக்காலி மாடுகளை பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மேற்படி நகர சபை, பிரதேச சபை…

Read More

தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!

– எம்.எஸ்.எம்.நூர்தீன் – கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது. இந்த…

Read More

அக்கரைப்பற்று, ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு 7 மணியளவில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார். அக்கரைப்பற்று -11 ஆம் பரிவு (முறாவோடை) அல்-பாத்திமியா வித்தியாலய வடக்கு வீதியில் வெட்டப்பட்டிருந்த குழியில் இருந்து குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று 14 ,காதிரியா கடற்கரை வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆதம் லெப்பை ஜஹறுல்லாஹ் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

Read More

மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது தடை

– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரகாரம் மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கியில் சிறுவர்களை வைத்து கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.துஷார திலங்க ஜெயலால் தெரிவித்தார். சிறுவர்களை விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் குறித்த சட்டம் இலங்கை பொலிஸ் மோட்டார் வாகனச் சட்டத்தின் 158 இன் முதலாவது சட்டம் எனவும் இதனை மீறும் மோட்டார் சைக்கிள் உரிமையாளருக்கு முதலாவது தடவை…

Read More