ஏறாவூர் மருந்தகத்தில் கொள்ளை; இரு இளைஞர்கள் கைது
ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள மருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மருந்தகத்தினுள் கூரை வழியாக நுழைந்த மர்ம நபர்கள், 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 21 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை என்பவற்றை திருடிச் சென்றதாக முறையிடப்பட்டது. இக் கொள்ளைச் சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்றிருந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின்…
