Headlines

காத்தான்குடி இறைச்சிக்கடை உரிமையாளர்கள் ஹர்த்தால்

– ஜவ்பர்கான் – காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தமது கடைகளை மூடி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தினமென்பதால் பிரதேசத்து முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மாட்டிறைச்சியை உணவாக உண்பது வழமையாகும். இவர்களின் இந்த பகிஸ்கரிப்பினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள பொதுச் சந்தை மற்றும் புதிய காத்தான்குடி சந்தை, புதிய காத்தான்குடி சந்தை உட்பட காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள 28 மாட்டு இறைச்சிக்கடைகளும்…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக ஜெமீல் நியமனம்

– எம்.வை.அமீர் – கிழக்குமாகாணசபையின் முன்னாள் குழுக்களின் தலைவரும், தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிஷாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை

– அஸ்ரப் ஏ சமத் – சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது. குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின்…

Read More

பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: மட்டக்களப்பில் சம்பவம்

பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

– எம்.எம்.ஜபீர் – அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும்…

Read More

திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து  இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால்  கண்டன பேரணி நடத்தப்பட்டது. திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த  குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர். பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து…

Read More

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Read More

நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள்

– ஜவ்பர்கான் – எந்தவொரு பெற்றாரும் தமது பிள்ளைகளுக்கு நஞ்சூட்ட விரும்பமாட்டார்கள். ஆனால் மறைமுகமாக பெற்றோர்கள் நஞ்சுகலந்த, இராசாயன பசளையுடன் தயாரிக்கப்பட்ட நஞ்சு மரக்கறிகளை உண்ணக் கொடுக்கின்றார்கள். இதனால் பலர் நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா தெரிவித்தார். காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் நடைபெற்ற நகர்ப்புற வீட்டுத்தோட்ட வயல் விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். காத்தான்குடி விவசாய போதனாசிரியை குந்தகை ரவிசங்கரின்…

Read More

காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அவதிப்படும் மக்கள்

– ஹைதர் அலி – மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள காரமுனை கிராமத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மியான்குள வீதியில் கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய இரு பிரதேச சபைகளினாலும் நாளாந்தம் கொட்டப்படுகின்ற குப்பைகள் காரணமாக வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றது. இவ்வீதியால் விவசாயிகள், மீன் பிடியாளர்கள், பன்ணை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரால் இரவு பகலாக பயன்படுத்தக்கூடிய  வீதியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரதேசத்தில் ஒழுங்கற்ற முறையில்…

Read More

றிஷாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி மு.கா அம்மக்களை ஏமாற்றி விட்டது. பொதுத்தேர்தலின்போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம்…

Read More

உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு உறுகாமம் குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் கடந்த 5 தினங்களாக மழை பெய்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உறுகாமம் குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 3 அங்குலம் நீர்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் குறிப்பிட்டார். இந்த குளத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் இந்த குளத்தினை அண்டியுள்ள முந்தனையாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் இதே நேரம்…

Read More

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – பொலன்னறுவை பாதை (photo)

மட்டக்களப்பு -பொலன்னறுவை பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நேற்று மாலை குறித்த பாதையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக பொலன்னறுவை- மட்டக்களப்பு எல்லைக்கிராமப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு பாதையின் நாமல்கம மற்றும் பிள்ளையாரடி பகுதிகளில் இரண்டு அடிக்கும் மேலாக வெள்ளநீர் பாய்ந்தோடுகின்றது. இதன் காரணமாக வெலிக்கந்தை வரையான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதற்கிடையே வெலிக்கந்த பகுதியில் உள்ள சியம்பலாகஸ்வெவ…

Read More