Headlines

மனிதனின் கருவறை இரகசியங்கள் (படங்கள் இணைப்பு)

ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேனர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்ப்பணித்து குழந்தை கருவுறல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் கருவறை புகைப்படம் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் புகைப்படங்கள்

Read More

‘வடக்கு முஸ்லிம்கள்: வாக்களிப்பதற்கு மட்டும்தானா?’ (கட்டுரை)

ரஸீன் ரஸ்மின் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்துவரும் வாரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனவே, நல்லாட்சியை நோக்கி செல்லும் இந்த புதிய அரசு ஆட்சியமைக்கும் காலத்தில் வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் வன்னி முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்தாலும் அடுத்த புதிய அரசாங்கத்திலாவது தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வன்னி முஸ்லிம்களும் பொதுத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வுன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும்…

Read More

Facebook, WhatsApp, Viber, Twitter, Telegram களும் புனித ரமழான் நோன்பும்..!

Ash Sheikh M Z M Shafeek ( Bahji, Mazaahiri) அன்பார்ந்த நண்பர்களே, அருமைச் சகோதரர்களே ! ரமழானை மிகவும் நெருங்கி வந்திருக்கும் நாம் எமது Facebook, WhatsApp, Viber, Twitter, Telegram … உள்ளிட்ட சமூக இணையத் தளங்களுக்கு முழுக்குப் போட வேண்டிய அல்லது அந்த அனைத்து வகையான இணையத் தளங்களுக்குமாக ஒரு நாளில் மொத்தம் ஒரு மணி நேரமோ ஒன்றரை மணி நேரமோ மட்டும் ஒதுக்கி அதனையும் பொழுது போக்குக்காகவோ அரட்டைக்காகவோ இன்றி…

Read More

எதிர்ப்ப‌வர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் (கட்டுரை)

இஸ்ஸதீன் றிழ்வான் வடக்கு முஸ்ளிம்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியான போதுதான் சில மீடியாககளும் இனவாதிகளும் வில்பத்து விடயத்தை தூசுதட்டி பேசுபொருளாக்கினர். இப்போது சர்வதேச சமூகம் மரிச்சிக்கட்டிக்கும் வடக்கு மக்களுக்கும் குரல்கொடுக்கும் அளவு விடயம் வீரியமடைந்திருக்கிறது. இலங்கை அரசு வடக்கு மீள்குடியேற்றத்தை ஆமை வேகத்தில் நகர்த்தி, கவனித்துவந்தபோது இந்த வில்பத்தை பாதுகப்போம் என்ற தொனி உயர்ந்திருப்பது எமக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். காரணம் வடக்கு மீள்குடியேற்றத்தை உத்தியோகபூர்வமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க மைத்திரி அரசு ஒரு அமைச்சர்…

Read More

தளம்பல் அரசியல் தொடர்ந்தால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக் குறியாகுமா………..?

இஸ்ஸதீன் றிழ்வான் இனவாதமும் சர்வதிகாரமும் குடும்பவாதமும் இணைந்த இலங்கை அரசியல் மைத்திரி என்ற மாந்திரத்தால்முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் சாத்வீகமும் கொண்ட ஒரு ஆரம்பத்தை எதிர்பார்த்தோம்,எதிர்பார்க்கின்றோம். சிறிய  பெரிய கட்சிகளின் கோர்ப்பாய் இன்றைய அரசாங்கள் நகர்கிறது, முடிவுகள் எடுப்பதில் பாரியசர்ச்சைகளும் சுமைகளும் சேர்ந்தே சுழலுகிறது. கூட்டிணைந்திருக்கின்ற கட்சிகளையும் பிரதிநிதிகளையும் திருப்திப்படுத்தவேண்டி இருப்பதால்தீர்மானங்களை எடுப்பதில் பாரிய சவாலைஇந்த அரசு முகங்கொடுக்கின்றது. இதற்கு நல்ல உதாரணமாக மரிச்சிக்கட்டி வில்பத்து விவகாரம் அமைந்திருக்கின்றது. மரிச்சிக்கட்டியில் முறையற்ற எந்த குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை ஆளும்…

Read More

மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி ஊடகங்களில் சொல்லப்டாத சில உண்மைகள்

மியன்மார் முஸ்லிம்கள் சுமார் 800 முதல் 1000 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் . அவர்கள் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தற்போதும்முள்ளது . ஆனால் அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதென்பது உண்மைதான் அதற்காக ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மார் இனவாத அரசுடன் போராடவில்லை ஆனால் மியன்மார் அரசியல் இனவாதிகள் அவர்களின் உயிரைக் கொன்று வருவருகிறார்கள் . அன்மையில் நாங்கள் face book இல் நாம் பார்த்து பரிமாரிய மியன்மார் ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொடுமைப்படுத்துவது போன்ற photos கள் அனைத்தும்…

Read More

அராஜக நாடுகளுக்கு – அல்லாஹ்வின் தீர்ப்பு தாமதமா..?

– முஹம்மது மஸாஹிம் – பற்றியெறிகிறது மியன்மார், பதறுகின்றது இதயம், பிரார்த்திக்கின்றன கைகள், இன்னும் பார்த்துக் கொண்டா இருக்கின்றான் படைத்தவன்..? எங்கே அவனை நம்பி கலிமாச் சொன்ன மக்களைக் காப்பாற்ற, இன்னும் அவன் அழிவை ஆரம்பிக்கவில்லை..? கண்ணெதிரே இவர்களுக்கு காட்டவேண்டுமல்லவா..? இன்று அதிகமான மக்களின் உள்ளத்திலுள்ள கேள்விதான் இது. ஆம்.. எம்மைப் படைத்த இறைவனை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். அவனது சூப்பர் படைகளுக்கு முன்னாள், உங்கள் உலக கூட்டுப்படைகள் தூசிப் படைகளே.. உங்களிடம் தரைப்படை உள்ளதா..?…

Read More

அசின் விராதுவை பின்தொடரும் ஞானசார பிக்கு

இஸ்ஸதீன் றிழ்வான் மின்மார் நாட்டின் 969 என்ற இனவாத அமைப்பின் தலைவர் அசின் விராதுவை இலங்கையின் இனவாத அமைப்பான பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் அச்சொட்டாக பின்பற்றுவதை அவரின் நடத்தைகள் படம்பிடித்துக்காட்டுகின்றன. பெளத்த மதத்தையும் மக்களையும் பாதுகாக்கவென அமைக்கப்பட்ட பொதுபலசேன என்ற அமைப்பு இதுவரைக்கும் பெளத்தர்களூக்கோ அல்லது பெள மதத்திற்கோ இதுவரையும் எதனையும் செய்யவில்லை. இலைங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவ மக்களுக்கெதிரான சதிகளே தொடர்கின்றன, அதன் வெளிப்பாடே அளுத்கம நகரை தீ…

Read More

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு குற்றச்சாட்டுடன் வலுவடைந்த ரோஹிங்கியா தாக்குதல்களும்.. இலங்கை முஸ்லிம்கள் சந்தித்து வரும் இனவாத தாக்குதல்களும்

-தில்ஷான் மொஹம்மத்- சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2012/05/28) மியன்மாரில் ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பின்னர் பெருன்பான்மை பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட பெரும் இனக்கலவரம் உலக செய்திகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. மியன்மார் அரசு ஆதரவுடன் கூடிய ஓர் திட்டமிடப்பட்ட கடுமையான வன்முறை ரோஹிங்கியா மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு, பல கிராமங்கள் நிர்மூலமாக்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டு, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்து இலட்சம் ரோஹிங்கியா…

Read More

தத்தளிக்கும் ரோஹிஞ்சா மக்கள் கரையேறுவார்களா?

மத ரீதியான மோதல்களால் மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புகலிடம் கோரி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் மியன்மார், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது. மியன்மார், அரக்கான் மாநிலத்தின் ரோஹிஞ்சாவில் வங்காள மொழி பேசுகின்ற பல இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள், தமது சொந்த இடங்களை விட்டு புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.அங்கு இடம்பெறுகின்ற இன மோதல்களினாலேயே இவர்கள் செல்லுமிடம் அறியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றது….

Read More

வன்னி முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பேதங்களை மறந்து செயற்படவேண்டும்

ரஸீன் ரஸ்மின் மன்னர் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. யுhழ் புங்குடுதீவு மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வாரம் முழுதும் ஊடகங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் பேசப்பட்டது. இதனால் வில்பத்து விவகாரத்திற்கு ஒருவார காலம் ஓய்வு கொடுக்கப்பட்டது. எனினும் வித்தியா தொடர்பில் நாட்டில் தற்போது அமைதி நிலை ஏற்பட்டதும் வில்பத்து விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சர்வதேச நிகழ்ச்சி நிரலுக்கு நினைத்தபடி ஆடிக்கொண்டிருக்கின்ற இனவாதிகள் இலங்கை முஸ்லிம்களை அடக்கி ஒடிக்கி வைத்துக்கொண்டு தாம் நினைத்தபடி…

Read More

ஜனஹண்ட நிகழ்ச்சி – அமைச்சர் றிஷாத் சிங்கள மக்களுக்கு தெற்கு முசலி மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவுபடுத்தினார்

– அபூஹஸ்மி – கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற TNL ஜனஹண்ட நிழ்ச்சியில் அமைச்சர் ரிஷாட் பதிவுதீன் அவர்கள் கலந்துகொண்டு பூர்வீக கிராமங்களாக காணபட்ட  பாலக்குழி, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, கொண்டச்சி, காயக்குளி தொடர்பாக வினவப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்கள் நன்கு தெளிவுபெறும் வகையில் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை விளக்கிக்கூறினார். அவர் மேலும், ஜனஹண்ட நிழ்ச்சியில் பேசுகையில், நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்த வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் கொள்கைக்கு உடன்படாத ஒரே காரணத்தினால்…

Read More