ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?
-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும். இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் “இலங்கை நாட்டில் பௌத்த மதம் இஸ்லாமியர்களால் களங்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்ற பொதுபல சேனா அமைப்பின்…
