நல்லாட்சியிலும் விஷப் பற்களோடு திரியும் பொதுபலசேனா
மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத குழுக்ககள்தான் என்றால் அது மிகையாகாது. பொதுபலசேனா அமைப்பினர் மிக கூரிய விஷப் பற்களோடு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆயிரம் அட்டுழியங்களை செய்தார்கள் ஹலால், ஹிஜாப் என்று தொடங்கி அவர்களது அட்டுழியங்களை கடைசியில் அளுத்கமையில் கொண்டு போய் முடித்தார்கள். அளுத்கமையில் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல இன்னும் பழைய நிலைக்கு…
