Headlines

ad34@hFacMC

‘முடியாது என்று கூறப்பட்டவைகளை எல்லாம் அபிவிருத்திகளாக செயற்படுத்திக் காட்டியுள்ளோம்’ முசலி வேப்பங்குளத்தில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- வடக்கில், முசலியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக எமது அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணி, இன்னும் ஓரிரு வருடங்களில் அகதி மக்களின் மீள்குடியேற்ற பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி பிரதேச சபைத் தேர்தலில், மருதமடு, வேப்பங்குளம் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் பைரூஸின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வும், வேட்பாளர் அறிமுகக் கூட்டமும்…

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21 ஆம் திகதி பின்வரும் இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். சம்மாந்துறை காலை 9.30 – 11.30 மாவடிப்பள்ளி நண்பகல் 12.00 – 1.30 கல்முனை பி.ப 2.00 – 3.3௦ மருதமுனை பி.ப 4.00 –  6.00

Read More

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட்!

–ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்த முசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி கிடைக்குமென்ற கனவிலும், மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள உறுப்பினர் பதவியை தட்டிக்கொள்ளலாம் என்ற நப்பாசையிலும் முசலிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் கொந்தராத்துக்காக செயற்படுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி பிரதேச சபைத் தேர்தலில், சிலாவத்துறை வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள்…

Read More

பேரம் பேசும் சக்தியை மு.கா எவ்வாறு பயன்படுத்தி வருகின்றது? ஹனீபா மதனி விளக்கம்!

-ஊடகப்பிரிவு-  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பையும் அகில இலங்கை மக்கள் காங்கிரசையும் நோக்கி திரளும் மக்கள் கூட்டம் கடந்த காலங்களில் சமூகத்தை வழிநடத்துவதாகக் கூறிக் கொண்டு தேர்தல் காலங்களில் பணப்பெட்டிகளை பெருந்தேசியக் கட்சிகளிடமிருந்து கைமாற்றும் மோசடிக்காரர்கள் இனியும் எங்களுக்கு வேண்டாம் என்று கோஷமிடத் தொடங்கிவிட்டனர் என்று முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும்,  அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஹனீபா மதனி தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில்…

Read More

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக் கூறி வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

–சுஐப் எம்.காசிம்- முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும் நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடிமறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப் பொத்திக்கொண்டு, எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளும் இந்தப் பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்று இந்தப் பிரதேசத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவர் தூற்றிவருவதானது வெட்கக்கேடான விடயம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலிப் பிரதேச சபை தேர்தலில் மறிச்சுக்கட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் சுபியானை ஆதரித்து மறிச்சுக்கட்டியில்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க கொட்டராமுல்ல உபதபால் நிலையத்தினை நவீனமயப்படுத்த முடிவு!

-ஊடகப்பிரிவு- புத்தளம் கொட்டராமுல்லயில் அமைந்துள்ள  உபதபால் நிலையத்தினை சகல வசதிகளும் கொண்ட நவீன தபாலகமாக மாற்றித்தர நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீனினால்,  முஸ்லிம் சமயம் கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமிடம் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். நீண்டகாலமாக உபதபாலகமாக இயங்கிவரும் இந்த தபாலகத்தினை, பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்துவதாலும்,குளியாப்பிட்டிய கொழும்பு பிரதான வீதியில் இந்த உபதபாலகம் அமைந்திருப்பதால், இதனை தபாலகமாக  தரமுயர்த்துவதன் அவசியம்…

Read More

கரடிக்குளி வட்டார தேர்தல் காரியாலய திறப்புவிழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் முசலி பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் கரடிக்குளி, கொண்டச்சி வட்டார வேட்பாளர் சுபியான் ஆசிரியரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா நாளை (17/ 01/ 2018) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட அதிதியாக  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் மற்றும் முசலி பிரதேச சபைத்…

Read More

நாவிதன்வெளி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம் கடந்த சனிக்கிழமை (13) அன்று இடம்பெற்றது. இந்தப் பிரசாரத்தில்  மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டதுடன், அந்தப் பிரதேச பெண்களைச் சந்தித்து அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, வாக்களிக்கும் முறை பற்றிய தெளிவூட்டலையும் அவர்களுக்கு வழங்கினார்….

Read More

“சிறுபான்மை சமூகம் தன்னுடைய மனக்கிடக்கையை வெளிப்படுத்துவதற்கு உகந்த தேர்தல்” ஹிஷாம் சுஹைல் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அண்மைக் காலங்களில் எமது சமூகத்தை கறிவேப்பிலையாகவே பயன்படுத்துகின்றனர். தேவை ஏற்படின், தேர்தல் காலங்களில் எமது பிரதேசத்துக்கு வந்து எமது வாக்குகளை அள்ளிக்கொண்டு செல்வார்கள். எமக்கு ஒரு பிரச்சினையென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களுத்துறை நகரசபைக்கு போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற…

Read More

பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு.. அமைச்சர்  ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு!

-முர்ஷிட் முஹம்மத்- பொத்துவில் கிரான் கோமாரி காணி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் கொண்ட குடும்பங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் இணைப்பாளர் டாக்டர். பரீட் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டதோடு, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்தனர். அம்பாறை கோமாரியில் தமக்கு சொந்தமான…

Read More

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டம்.. டாக்டர்.ஹஸ்மியா பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, இறக்காமம், மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் கடந்த சனிக்கிழமை (13) அன்று  இடம்பெற்றன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டார். சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட் ஆகியோர் உட்பட…

Read More

“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல்…

Read More