வாழைச்சேனை கடதாசி ஆலையில் 4200 பேருக்கு வேலை வாய்ப்பு… பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு!
-முர்ஷித் கல்குடா- எதிர்வரும் வருடங்களில் வாழைச்சேனை கடதாசி ஆலையில் நான்காயிரத்து இருநூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.ரி.எம்.புர்கானின் காரியாலயத்தை மிராவோடை மேற்கிலுள்ள அவரது இல்லத்தில் அண்மையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-…
