Headlines

தல்கஸ்பிடிய மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் வட்டார கிளை அமைக்கும் கூட்டமும்..

தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கெளரவ அல்ஹஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தூர நோக்குச் சிந்தனையில் ரிதீகம பிரதேச சபை தல்கஸ்பிடிய பிரதேச மக்கள் சந்திப்பும் பிரதேச அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடு மற்றும்  வட்டார கிளை அமைக்கும் கூட்டம் நேற்று (06) ரிதீகம பிரதேசசபை வேட்பாளர் அஸாட் நஸீரின் ஏற்ப்பாட்டில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குளியாப்பிடிய மக்கள்…

Read More

4 மில்லியன் ரூபாய் நிதயொதுக்கீட்டில் பொல்கஹவெல தொகுதிக்கு சுயதொழில் மற்றும் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்..

குருநாகல் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் மடலகம தேர்தல் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வும் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துறையாடலும் நேற்று (08) முன்னால் பிரதேசசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளருமான அன்பாஸ் அமால்தீனின் ஏற்ப்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதித் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி . இர்பான் ,…

Read More

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

ஊடகப்பிரிவு. அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அந்த மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்குச் சென்று சுயதொழில் புரிவோருக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். பொத்துவில், நிந்தவூர், ஆகிய பிரதேசங்களில் பிரமாண்டமான முறையில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் இந்த நிகழ்வு நடைபெற்றது. மாவடிப்பள்ளிக்கு சென்ற அமைச்சர் அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அகில…

Read More

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட அமைச்சர் ரிஷாடினால் நியமனம்

-ஊடாப்பிரிவு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை கையளித்தார். புதிய தலைவராக பதவியேற்றுள்ள அனுர மத்தேகொட சட்டத்துறையில் 37 வருடகால அனுபவம் கொண்டவர். சுமார் 20 வருட காலம் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அரச தரப்பு சட்டத்தரணியாக பணியாற்றிய அவர் நெதர்லாந்து ஹேக்கில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International…

Read More

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!

நமது சமூகத்தின் குரல்வளையை நசுக்குவதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் எழுந்துள்ள சதி முயற்சிகளை முறியடிப்பதற்காக, நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் வந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் தலைமையில், இன்று காலை (08) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட…

Read More

“கூட்டுறவுத் துறையை வினைத்திறன் உள்ளதாக்க புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம்” சர்வதேச கூட்டுறவு தின விழாவில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!

13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் தத்தமது மாகாணங்களுக்கேற்ப, தமக்கு வசதிபோல நடைமுறைப்படுத்தி வந்த கூட்டுறவு கொள்கையை, பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியிலே ஒருமுகப்படுத்தி தேசிய கூட்டுறவு கொள்கை ஒன்றை உருவாக்குவதில் தமது அமைச்சு வெற்றி கண்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இன்று (07) இடம்பெற்ற 96 வது சர்வதேச கூட்டுறவுதின விழாவில் சிறப்பு அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர்…

Read More

புதிய தேர்தல் முறையை நிராகரிக்கின்றோம்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றில் அறிவிப்பு

எல்லை மீள்நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் அமைந்த புதிய தேர்தல் முறையை  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முற்றாக நிராகரிப்பதாகவும் பழைய தேர்தல் முறையின் படி மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடாத்துமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் அறிவித்தார். தேர்தல்களைப் பிற்போட்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்காது மக்களின் வாக்குரிமைக்கு மதிப்பளித்து அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய நல்லாட்சித்தலைவர்கள் வழி வகுக்க வேண்டுமென்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மாகாணசபை எல்லை மீள்நிர்ணய அறிக்கை தொடர்பான இன்றைய (07) விவாதத்தில் கலந்து கொண்டு…

Read More

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு……

ஜனநாயக கட்டமைப்பை உறுதிப்படுத்தி நேர்மையான பணிகளை முன்னெடுக்க தேசிய கணக்காய்வு சட்டமூலம் உதவும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் தேசிய கணக்காய்வு சட்டமூல விவாதத்தின் போது நேற்று (05.07.2018) உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் அவர் உரையாற்றுகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டமூலத்திலே உரையாற்ற கிடைத்த சந்தர்ப்பத்திற்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். தேசியக் கணக்காய்வு சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமா? இல்லையா?…

Read More

அவநம்பிக்கையினூடாக வெளிப்பட்ட கோபமாகவே, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய உரையைப் புரிந்துகொள்ள முடிகிறது. # வெறுப்பு !!!

நல்லாட்சி அலுத்துப் போய், வெகு காலமாகிவிட்டது. இப்போது அதன் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கி விட்டது. “நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையை, ஜனாதிபதியும் பிரதமரும் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால், அடுத்த தேர்தலில், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். மேலும், எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும், மேற்படி ஆட்சித் தலைவர்கள் இருவரிடத்திலும், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்திருக்கின்றார். வரக்காபொல பிரதேசத்தில், சிங்கள மக்கள் மத்தியில் அமைச்சர்…

Read More

இலங்கைக்கும்- ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குமிடையிலான இருதரப்பு வர்த்தக நிலைகள் வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில்!    – ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர்..

‘இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு உடன்படிக்கையினை (Investment Protection Agreement) நிறைவு செய்ய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.  எமது நாடு பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொண்ட ஒரு திறந்த நாடு. நாம் சகலரையும்; ஏற்றுக்கொள்கின்றோம். எமது இருதரப்பு வர்த்தக நிலைகள் தற்போது வரலாற்று ரீதியில் உயர்ந்த மட்டத்தில் இருப்பதையிட்டு நான்மகிழ்ச்சியடைகின்றேன்’ என இலங்கைக்கான ஐக்கிய அரபு  எமிரேட்ஸின் தூதுவர்; அஹமட் அலி அல் முல்லா தெரிவித்தார். நேற்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  விசேட …

Read More

பெரியமடு மக்களின் நீண்டகால நீர் பிரச்சினைக்கு தீர்வு!!!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் வேண்டுகோளுக்கு அமைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் பணிப்பின் பேரில் OHRD தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு பாடசாலைக்கு நீர்த்தாங்கி சகிதம் அனைத்துவகையான நீர் வழங்கல் ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களின் தலைமையில் இக்குடி நீர் திட்டம் மிகவும் விமர்சையாக இன்று (05/07/2018) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில்…

Read More

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு ..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இம்ரான் கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைந்து கொண்டார்.. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருணாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் சதொச பிரதித்தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) , கட்சியின் அரசியல் விவகாரப்பொறுப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், குளியாப்பிடிய பிரதேசசபை உபதவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர்…

Read More