Headlines

தல்கஸ்பிடிய மக்கள் சந்திப்பும் அபிவிருத்தி மற்றும் வட்டார கிளை அமைக்கும் கூட்டமும்..




தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான கெளரவ அல்ஹஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தூர நோக்குச் சிந்தனையில் ரிதீகம பிரதேச சபை தல்கஸ்பிடிய பிரதேச மக்கள் சந்திப்பும் பிரதேச அபிவிருத்திக்கான நிதியொதுக்கீடு மற்றும்  வட்டார கிளை அமைக்கும் கூட்டம் நேற்று (06) ரிதீகம பிரதேசசபை வேட்பாளர் அஸாட் நஸீரின் ஏற்ப்பாட்டில் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குளியாப்பிடிய மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் இர்பான், குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளர் அன்பாஸ் அமால்தீன், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் குருநாகல் மாநகர சபை உறுப்பினருமான அஸாருடீன் மெய்னுதீன்,குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாவத்தகம வேட்பாளரும் தற்போதைய மக்கள் காங்கிரஸ் உறுப்பினருமான முஆத் பாரூக், குருநாகல் மாநகரசபை வேட்பாளர் இக்பால் ஷரீப்,மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட பொருளாலர் இர்பான் ஹாஜியார் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

றிம்சி_ஜலீல்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *