Headlines

மன்னார் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்..

மன்னார் நகர சபைக்கு உற்பட்ட கிராமங்களுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்களினால் பிரதேச செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 36.5 மில்லியன் நிதியில் இருந்து செய்யப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப் ரஹ்மான் நகரசபை உறுப்பினர் நௌசீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…

Read More

மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீறாவோடை ஆற்றுக் கட்டுக்கான ஆரம்ப அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஐக்கிய தேசிய கட்சி கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எஸ்.புர்கான், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.றுவைத் உட்பட…

Read More

இலங்கை-மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படும்  அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்லுவதற்கு மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் ஆர்வத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தகைய உடன்பாடு இலங்கை-மலேசியாயாவுக்கிடையிலான வர்த்தகத்ததை ; பெருமளவில் அதிகரிக்கும்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையே 2013 ஆம்  ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டிருந்த  இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முன்னெடுத்துச்செல்ல மலேசியா தனது வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதையடுத்து கோலாலம்பூரில்  மலேசியாவின் சர்வதேச வர்த்தக…

Read More

மன்னார் நகரை அழகுபடுத்துவதில் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றையும் தாண்டி நிர்மாணப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். மன்னாரில் அமைச்சர் ரிஷாட்

மன்னார் நகரத்தை அழகுபடுத்த நவீனமயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீனமயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருப்பதாகவும், விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் (30) இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புதிய ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர்…

Read More

மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வதாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்துக்கு வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுவதில் பெருமிதம் கொள்வதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சர்வதேச ரீதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினா விடைப் போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இது தொடர்பாக பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவின் கீழ் முசலி பிரதேசத்தில் விளையாட்டு மைதானங்களுக்கான அடிக்கள் நாட்டும் நிகழ்வு…

முசலி பிரதேசத்தின் மீள்குடியேரிய கிராமங்களின் இளைஞர்களுக்கான விளையாட்டு துறையின் வளர்ச்சிக்காக ரூபா 50 இலட்சம் நிதியினை மீள்குடியேற்ற செயலனியூடாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஒதுக்கியுள்ளார்கள். பாலைக்குழி,கொண்டச்சி,அகத்திமுரிப்பு அலக்கட்டு,கரடிக்குழி மரிச்சிக்கட்டி முள்ளிக்குளம் போன்ற கிரமங்களுக்கு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வு முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலருமான றிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் ஷரீப் முசலி பிரதேச சபை தவிசாளர்…

Read More

முசலி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு விடிவை ஏற்படுத்த அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை

முசலி பிரதேச சபைக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்களால் தங்கள் பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தீர்வு காணும் நோக்குடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் , மக்கள் தற்காலிகமாக வசிக்கும் இடங்களை நேரடியாக பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நிவர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீன் தலைமையில் மக்களை சந்திக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவர்களுக்கான குடிநீர் பிரச்சனைகளை தீர்த்து…

Read More

முசலிப்பிரதேசபை பிரதி தவிசாளரின் அவசர வேண்டுகோள்..

முசலியில் மின்சாரம் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ளவும் முசலிப் பிரதேசத்திலுள்ள சிலாவத்துறை, முசலி, கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா, சவேரியார்புரம் ஆகிய கிராமங்களில் இதுவரை மின்சாரம் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு உடனடியாக இலவச மின்னிணைப்பு பெற்றுக் கொடுக்க அமைச்சர் ரிசாட் பதியுதீன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எனது வட்டாரத்திற்குள் அடங்கும் மேற்படி 5 கிராம மக்களில் மின்சாரம் இல்லாத குடும்பங்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் 2018 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முசலிப் பிரதேச மக்களின் மின்சாரத்…

Read More

வவுனியா மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தகளுடனான முக்கிய சந்திப்பு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..

வவுனியா மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான முக்கிய சந்திப்பு இன்று (29) வவுனியா இந்திரன் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீன் கலந்து சிறப்பித்தார். வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி பெரும் மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது எதிர்காலத்தில் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு உரியதிர்வு பெற்று தருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்… இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ஜயதிலக்க அமைச்சரின் வவுனியான மாவட்ட இணைப்பாளர்களான முத்துமுகம்மட்,அப்துல் பாரி உட்பட…

Read More

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அக்குறனை பிரதேச சபைக்கு உற்பட்ட தெலும்புகஹவத்த வட்டாரத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உத்தியோகபூர்வ நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்கள் வாக்குகளினால் அக்குறனை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அல்ஜாஜ் நஸார் அவர்கள் வட்டாரத்தின் அமைப்பாளராக ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டார். மேலும் ஏனைய உறுப்பினர்களும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்பு செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்களும், மாவட்ட அமைப்பாளர், ஹம்ஜாட் ஹாஜியார் அவர்களும் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.அத்தோடு அக்குரனை…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உடபலத்த தேர்தல் தொகுதியின் கெலிஓய,கழுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்தி குழுக் கூட்டம் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார் தலைமையில்.

உடபலாத தேர்தல் தொகுதியின் கெலிஓய, கலுகமுவ பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உடபலாத பிரதேச சபை உறுப்பினர் பஸால் அவர்களின் ஏற்பாட்டில்  நடைபெற்றது. இந் நிகழ்வில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ஹம்ஜாட் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் இணைப்புச் செயலாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் தலைமை ஏற்று நடாத்தி வைத்தனர். கலுகமுவ பிரதேசத்தின் விரைவில் அமைக்கப்பட இருக்கும் சிறுவர் பூங்கா…

Read More

நாதியற்ற அரசியல் பிழைப்பு நடத்தும் பிரதி அமைச்சர் பைசல் காசிம்: முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா கண்டனம்.

மிகவும் பிழையாகவும்  அசிங்கமாகவும்  பிரதி அமைச்சர் பைசல் காசிம்  காழ்ப்புணர்வு அரசியல் செய்வது  சிறுபான்மை கட்சிகளுக்கே வெட்க கேடு என்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹியா தெரிவித்தார். முஸ்லீம்களின் விடிவுக்காக முஸ்லீம் சிறுபான்மை கட்சிகள் அரசியல் செய்வது வரவேற்கத்தக்கது இந்த நாட்டிலில் தனித்துவத்தோடு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தனிக்காட்டு  ராஜாவாக நடைபோட்டு வந்தாலும் மறைந்த எங்களின் மாபெரும் தலைவர்  அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் கட்சியை ஆரோக்கியமான முறையில் வழிநடத்த முடியாமல் ஆளுமை உள்ளவர்களையும் கட்சியை…

Read More