Headlines

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் முயற்சியில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை!

கிண்ணியாவில் பெய்து வரும் கணமழையினைத் தொடர்ந்து ஜாயா வீதி, ஆலிம் வீதி, ஹிஜ்ரா வீதி, அண்ணல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று இரவு (24) ஊர்மக்களுடன் இணைந்து களத்தில் நின்று இரவோடிரவாக நடவடிக்கை மேற்கொண்டார்.      

Read More

 பிரதேச சபை உறுப்பினர் ஜலீலினால் மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் சொந்த நிதியொதுக்கீட்டில், மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி தளபாடங்கள்  இன்று (25) அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தலைவியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட்- மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

Read More

திருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

இன விகிதாசாரப்படி, திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர், குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை ஆகிய மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். மூதூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை, கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, “திருகோணமலை மாவட்டம், அதிக சனநெரிசலைக் கொண்ட மாவட்டமாகும். அதிக குடும்பங்கள்…

Read More

லங்கா சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று (24) கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம் மையப்படுத்துகின்றது. USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூ லீட் (You Lead) நிறுவனம் இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யூ…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த வரை உதவுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள அனர்த்தம் மற்றும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களிலும் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தும் பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு முடிந்தவரை தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் உதவிக்கரம் நீட்டுமாறு அவர் வேண்டியுள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் புனித ரமழான்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்” எம்.பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு!

-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு- பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தாம் இராஜினாமாச் செய்துள்ள போதும், கட்சிக்கும் தலைமைக்கும் தொடர்ந்தும் விசுவாசமாகவே இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து அந்தப் பதவியிலிருந்து நேற்று (23) இராஜினாமாச் செய்த நவவி மேலும் கூறியுள்ளதாவது, கடந்த பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசியக் கட்சியின்…

Read More

தர்கா நகர் வாசிகசாலை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான முடிவு!

பேருவளை பிரதேச சபைக்கு உற்பட்ட தர்கா நகர் வாசிகசாலையில் தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதால், தர்கா நகர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பதால், தர்கா நகர் வாசிகசாலைக்கு தமிழ் மொழி தெரிந்த அதிகாரியை நியமிக்கும்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் இன்றைய சபைக்கு முன்வைத்த கோரிக்கை சபையால் அங்கீகரிக்கப்பட்டது. ஹஸீப் மரிக்காரின் இக்கோரிகை சபையில் விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போது, இக்கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டியது…

Read More

“Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வு!

 -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் “Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு நிகழ்வு, கண்டி கைத்தொழில் பேட்டையில் அமைந்துள்ள புதிய அலுலகக் கட்டிடத் தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன், கட்சியின் செயலாளர் சுபைர்தீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார், கண்டி…

Read More

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

-ஊடகப்பிரிவு- சிலாவத்துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உதவியுடன் அமைக்கப்படவிருந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. முசலிப் பிரதேச செயாலாளர் வசந்த குமாருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் இன்று காலை (23) நடாத்திய பேச்சுவார்த்தையின் போதே, வீட்டுத்திட்ட பிரச்சினையை சுமுகமான முறையில் தான் தீர்த்துத் தருவதாக பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.   இந்த சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், முசலிப் பிரதேச சபையின் தவிசாளர் சுபியான், பிரதித் தவிசாளர் முஹுசீன் றைசுதீன்…

Read More

மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ள“மாந்தை பிரதேசத்தின் மகிமை”

–சுஐப் எம்.காசிம்- மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபையும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகைக்குள் வந்துள்ளன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இவ்விரண்டு பிரதேச சபைகளின் தவிசாளர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்ப் பெருமகன்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்குப் பிரதேசம் 100 சதவீதமான தமிழர்கள் வாழும் பகுதி. மாந்தை மேற்கிலே இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆகிய மூவினங்களும் வாழ்கின்ற போதும், முஸ்லிம்களை விட மற்றைய…

Read More