Headlines

விஷேட தேவையுடையோருக்கான ஆடை உற்பத்தி நிலையத் திறப்பு விழா!

செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை (29) வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர்…

Read More

முசலி வேப்பங்குள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேசபை உறுப்பினருமான எஸ்.எம்.பைரூஸின் முயற்சியினால், முசலி, வேப்பங்குளம் கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது. (ஐ)      

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More

களுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கி வைப்பு!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொழில்சார் ஊக்குவிப்பு பொருட்கள் செயலகத்தில் (28) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊக்குவிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், பிரத்தியேக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்…

Read More

இரணை இலுப்பைக்குளம் வட்டார மக்களை சந்தித்த மாந்தை மேற்கு தவிசாளர்!

மன்னார், இரணை இலுப்பைக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் (குலம்) ஐயாவின் அழைப்பின் பேரில், அங்கு சென்ற மாந்தை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு  மற்றும்  உறுப்பினர் நந்தன் ஆகியோர் அவ் வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்கள். அத்துடன், அவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழுக்களின் நிர்வாகத்தினரை சந்தித்துப் பேசினர். பின்னர் பரசன்குளம், சின்னவலையன்கட்டு பகுதிக்கு சென்று அங்கு மழை மற்றும் காற்றால் சேதமாகிய வீடுகளை பார்வையிட்டனர். அத்துடன், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும்…

Read More

‘நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது’ அமைச்சா் ரிஷாட், ஐ.ம.கூ. தலைவா் ஹசன்அலி வலியுறுத்தல்!

-ஊடகப்பிரிவு- நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலியும் நிந்தவூரிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகம்…

Read More

“இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் (30) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் கல்வித்துறை முறைமையின் காரணமாக வருடம் தோறும் சுமார் 5 தொடக்கம் 6 சதவீதமான…

Read More

கல்முனை மாநகர சபை நிதிக்குழு மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வசம்!

கல்முனை மாநகர சபை நிதிக்குழுவின்  உறுப்பினர்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் கல்முனை மாநகர சபை இரண்டாவது அமர்வு  மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் தலைமையில் இன்று காலை (30) 10.30 மணிக்கு  நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பில் இருந்துவந்த  இழுபறி நிலைக்கு இன்று முடிவுகட்டப்படுள்ளது . நிதிக்குழுவில் முதல்வர் உட்பட ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். அதன் அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி…

Read More

மன்னார் சொர்ணபுரி கிராமத்துக்கான பஸ் சேவை ஆரம்பம்!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் வட்டாரம், சொர்ணபுரி கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களது முயற்சியினால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று முதல் (30) சொர்ணபுரி ஜும்ஆ பள்ளிவாசல் வரையிலான பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (ன)  

Read More

ஓட்டமாவடி கோட்டத்தில் கல்வி மட்டத்தை அதிகரிக்க செயற்றிட்டம்

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில், 9 ஏ(A) செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு நேற்று மாலை (29) பிரதியமைச்சர் அமீர் அலியின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதித் தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அல்தாப் அலி மற்றும்…

Read More

விடத்தல் தீவு மற்றும் பெரிய மடு பிரதேசங்களுக்கு தவிசாளர் செல்லத்தம்பு விஜயம்!

மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களுக்கு மன்னார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேசபையின் தவிசாளர் செல்லத்தம்பு ஐயா நேற்று (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விடத்தல்தீவு கிராமத்திற்கு விஜயம் செய்த தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஆதிர், பேடினற் ஆகியோரைச் சந்தித்து, கிராமத்தின் உள்ளக  வீதிகளின் புனரமைப்பு பணிகள்  தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின்…

Read More

சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!

காலம்சென்ற சோபித்த தேரரை நினைவுகூறும் முகமாக, அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக   அடிக்கல் நாட்டும் வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் (27) இடம்பெற்றது. இவ் வீட்டுத்திட்டத்துக்காக   இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.    இந்நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பி.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே  பாராளுமன்ற உறுப்பினர்   சந்திம கமகே, அகில இலங்கை மக்கள்…

Read More