விஷேட தேவையுடையோருக்கான ஆடை உற்பத்தி நிலையத் திறப்பு விழா!
செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை (29) வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர்…
