Headlines

‘ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-ஊடகப்பிரிவு- உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது. தற்போது இத்துறைக்கு டிஜிட்டல்மயமாக்கல் உதவி தேவைப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டு சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தொழில்மயமாக்கல்” தொடர்பான செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அனுராதபுர மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தனது சொந்த நிதியிலிருந்து  விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். அனுராதபுரம் ரம்பேவ பிரதேச சபைக்கு உட்பட்ட 10 விளையாட்டு கழகங்களுக்கு, கரப்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் இஷாக் ரஹ்மான் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது. இளைஞர்களது விளையாட்டுத் திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இன, மத, கட்சி பேதமின்றி ரம்பேவ பிரதேசத்தில் வசிக்கின்ற பௌத்த, முஸ்லிம் இளைஞர்களுக்கே இவ்விளையாட்டு உபகரணங்கள் வழங்கி…

Read More

செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு தொழில் ரீதியாக மாற்றத்தை கொண்டு வருவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பகுதியில், செங்கல் உற்பத்தியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், செங்கல் உற்பத்தியில் ஈடுபடும்…

Read More

நலன்புரி சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு!

-ஊடகபிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில்,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நலன்புரிசங்களுக்கு  குடி  நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள  அலுவலகத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், தனது சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால்…

Read More

ஞானசார தேரர் வாய்ப்பேச்சுகளை அடக்கிக்கொள்ள வேண்டும்! பாராளுமன்றில் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

-ஊடகப்பிரிவு- பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவரது வாய்ப்பேச்சுக்களை அடக்கி வைக்கவேண்டும். தற்போது முஸ்லிம்களை வீட்டுக்குள் அடைத்து விட்டு பேரினவாதிகள் சுதந்திரமான முறையில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீது தாக்குதல் நடத்துவதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை மதுவரித் திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்…

Read More

கண்டி கலவரம்: முஸ்லிம்களின் சொத்துக்களையும், பள்ளிவாசல்களையும் குறிவைத்து நடத்தப்படுகின்றதா?

 -சுஐப் எம்.காசிம்- தம்புள்ள, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை பிரிந்து, அவருக்கெதிராக தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டது. அதன் அவசியத்தை முஸ்லிம்களிடம் உறுதிப்படுத்தி, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக நாம், எமது பட்டம் பதவிகளைத் துறந்து மகிந்தவின் ஆட்சியில் இருந்து வெளியேறினோம். நமது தூரதிருஷ்டியான முடிவினதும், உழைப்பினதும் காரணமாக…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட்!

இனவாதிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே தொடர்வதால் அச்சத்தில் உறைந்துபோயுள்ள முஸ்லிம் மக்கள்.. பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் நின்ற அமைச்சர் ரிஷாட்! -சுஐப் எம்.காசிம்- கண்டி மாவட்டத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையிலும், இனவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமையினால், கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எம்.பிக்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் விஜயம் செய்து களநிலவரங்களை அறிந்துகொண்டதோடு, தேவையான…

Read More

ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைப் பொலிசாரால் கலைக்க முடியுமாயின் ஏன் இந்த கலகக்காரர்களை கலைத்திருக்க முடியாது? இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்று ஒரு வாரத்திலேயே கண்டியில் மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இதற்கான நியாயங்கள் கேள்விக்குறியாகியுள்ளன என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, இஷாக் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில், நாம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபருடனும் பேசியபோது பொலிஸ்மா அதிபர்…

Read More

அம்பதென்ன, வெலேகடையில் முஸ்லிம் வர்த்தகரின் மர ஆலைக்கு தீ வைப்பு! அமைச்சர் ரிஷாட் களத்துக்கு விஜயம்!

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில் சற்றுமுன்னர் (07) முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான மரஆலைகளை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பவத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், களத்திற்கு விரைந்து தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டார்.              

Read More

கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கண்டியில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை… கண்டி ஜனாதிபதி மாளிகையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்குமான சந்திப்பொன்று, இன்று (07) மாலை 4.00 மணியளவில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. கண்டியில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னரும், பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் அறிவித்த பின்னரும், தொடர்ந்தும் கண்டியில் முஸ்லிம் கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், வியாபாரஸ்தலங்கள், வீடுகள் மீது பெற்றோல் குண்டுகளை வீசி எரிக்கப்பட்டு வருவதற்கு…

Read More

இறைமையைப் பாதுகாக்கும் முஸ்லிம்களுக்கு இனவாதிகள் தரும் பரிசா இது? பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

-ஊடகப்பிரிவு- அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்பில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராக போராடியது போன்று, முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதத்தைத் தூக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசாங்கம் உருவாக்கி விடக்கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாராண சூழ்நிலை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (06) இடம்பெற்ற விஷேட ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மதஸ்தலங்களையும், சொத்துக்களையும் நாசமாக்கும்…

Read More

‘கண்டி திகன சம்பவம் தொடர்பில் பிரதமர், ஜனாதிபதி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-ஊடகப்பிரிவு- கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேட்டுக் கொள்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கண்டி திகண பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பிரதியமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்….

Read More