Headlines

மட்டக்குளி பர்கசன் காபட் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான பாயிஸின் முயற்சியில் கொழும்பு, மட்டக்குளி, பர்கசன் வீதி காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.              

Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையங்கள் திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, சுயதொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில்  தையல் பயிற்சி நிலையமும், பகுதி நேர சிறிய ஆடை தொழிற்சாலையும்  (மினி காமன்ட் ) அண்மையில் (21) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில், முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஒட்டுசுட்டான், மாந்தை மேற்கு, மவுலிக்குளம், நட்டாங்கண்டல், துணுக்காய், மல்லாவி ஆகிய கிராமங்களிலேயே தையல் பயிற்சி நிலையங்கள் மற்றும் பகுதிநேர ஆடைத் தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. அமைச்சரின் இணைப்பாளர் மொஹிடீனின் நெறிப்படுத்தலில்…

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் 20,000 பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அமைச்சினால் இருபதாயிரம் பேருக்கு இதுவரையில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள…

Read More

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் பேசவும் உள்ளார். அமைச்சர் ரிஷாட்…

Read More

முந்தல் பிரதேச சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, வாழ்வாதார உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (23) புத்தளம், முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நவவி, கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோரின் தலைமையில், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான ஆசிக், பைசர் ஆகியோரினால் துவிச்சக்கர வண்டி, தையல் இயந்திரம், நீர்பாசனத்திற்கான மோட்டார் இயந்திரங்கள் உள்ளிட்ட வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி…

Read More

தையல் தொழிற்பயிற்சி நிறைவு செய்த மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம்  மாவட்ட அமைப்பாளர்  அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் புத்தளம்  மாவட்டத்தில் பத்து மினிதையல் தொழிற்பட்டறைகள் ஆரம்பிக்கப்பட்டதும், அவற்றில் சுமார் 200 மகளிர் பயிலுனராக இணைந்து கொண்டதும் யாவரும் அறிந்ததே. அவர்களது குறிப்பிட்ட ஆறு மாத கால பயிற்சி நெறி நிறைவுக்கு வருவதை முன்னிட்டு, ஒவ்வொரு நிலையங்களிலும் பிரியாவிடை வைபவங்களும், கண்காட்சிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புத்தளம், சேனைக்குடியிருப்பில் உள்ள பயிற்சி நிலையத்தில்…

Read More

மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- மகாவலியை மையப்படுத்திய மணல் அகழ்வை உடனடியாக நிறுத்துமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், பொலிஸாரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். உரிய அதிகாரிகளால் திருட்டுத்தனமாக வழங்கப்படுகின்ற மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை உடன் நிறுத்துமாறும் பொலிஸார், பிரதேச செயலாளர்கள் கூடிய கவனம் எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தலைமையில நேற்று…

Read More

வாழைச்சேனை பிரதேச தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி!

-முர்ஷிட் கல்குடா- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலியின் வழிகாட்டலில், கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எம்.ஜனாப் கலீல், பிரதேச செயலக உதவித் திட்டமிடல்…

Read More

‘நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்’ இஷாக் எம்.பி!

-ஊடகப்பிரிவு- நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதாயின் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பாராளுமன்றில் தெரிவித்தார். 1970களில் இலங்கையைப் பார்த்து சிங்கப்பூர் முன்னேற ஆசைப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி சிங்கப்பூரை போன்று முன்னேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பங்களாதேஷ் போன்ற நாடுகள் முன்னேறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. சுற்றுலாத்துறையின் ஊடாக வருமானத்தை ஈட்டும் நாடாக இலங்கை இருக்கின்ற போதும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில குழுவினரால்…

Read More

‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக  மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!  

-சுஐப் எம்.காசிம்- கடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி, பயணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   உள்ளூராட்சித்…

Read More

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- புவிசார் குறியீடுகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பினை வலுப்படுத்தி சட்டவிரோத பொருளாதார ஏற்றுமதி மற்றும் அசல் இலங்கை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு புலமைச் சொத்து சட்டத்துக்கான புதிய திருத்தம் வழிவகுக்கும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையின் புவிசார் குறியீடுகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கான 2003ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க புலமைச்சொத்து சட்டத்துக்கான திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற, இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே…

Read More

சிலிம் நீல்சன் விருதினை வென்றது லங்கா சதொச!-

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை சதொச நிறுவனமானது இலங்கைத்தீவில் மிகவும் அதிகம் பேரால் நம்பி விரும்பப்படும் ஒரே ஒரு நிறுவனமாகும். தொடர்ச்சியாக 69 வருடங்களாக வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதானது சதொச நிறுவனத்தின் குறிப்பிட்டுச் சொல்லதக்க மிகப் பெரிய சாதனையாகும். இச்சாதனையின் வலிமை காரணமாக, குஆஊபு பிரிவின் 2018 ஆம் ஆண்டிற்கான ளுடுஐஆ NஐநுடுளுநுN (சிலம் நீல்சன்) விருது இலங்கை சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பல சுப்பர் மார்கெட் நிறுவன சங்கிலித்தொடர்கள்…

Read More