Headlines

அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..

நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர்  அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். அதாவது வடக்கு தெற்கு கிழக்கு  போன்ற  மாகாணங்களில் தம்புள்ளை…

Read More

முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு

-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…

Read More

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்

திய அர­சி­ய­ல­மைப்­புக்கு முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சில விட­யங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்கள் குறைக்­கப்­ப­டு­கின்­றமை முஸ்லிம் சமூ­கத்தை வெகு­வாகப் பாதிக்­கு­மெ­னவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்­லாட்­சிக்கு பங்­க­ளிப்பு செய்த முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டாத வண்ணம் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென ஜனா­தி­ப­தி­யையும் பிர­த­ம­ரையும் வேண்­டி­யுள்­ள­தாக அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடை­பெ­ற­வுள்­ளமை தொடர்பில்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன

-அமைச்சின் ஊடகப்பிரிவு – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் பாதுகாப்பை நிர்ணயிப்பதுடன் நியாயமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக உள்நாட்டு சந்தையை திறன்மிக்கதாக மாற்றுவதே…

Read More

உயர்தர பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

8 முஸ்லிம் மாணவிகள் ஆணைக்குழுவில் அடிப்படை உரிமை மீறல் முறைப்பாடு பதிவு நுவ­ரெ­லியா புனித சேவியர் கல்­லூ­ரி­யி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை விஞ்­ஞானப் பிரிவில் பரீட்சை எழு­திய 8 முஸ்லிம் மாண­விகள் தமது பரீட்சைப் பெறு­பேறு வெளி­யி­டப்­ப­டாது பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மைக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் முறைப்­பாட்­டினை கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவில் பதிவு செய்­தனர். மாண­வி­க­ளது சார்பில் அவர்­க­ளது பெற்றோர் முறைப்­பாட்­டினைச் சமர்ப்­பித்­தனர். க.பொ.த….

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது….

Read More

கல்வியே எமது சமுகத்திற்கு முக்கியமானதாகும் – அமைச்சர் றிஷாத்

-A.S.M. Javid – தற்போது சில ஊடகங்கள் முஸ்லிம்களை மலினப்படுத்தியும் கேவலப்படுத்தியும் செய்திகள் வெளியிடுவது ஆபத்தான நிலைமையாகும் என வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு-12 வாழைத் தோட்டம் அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் கே.எம்.எம்.நாளிர் தலைமையில் மருதானை டவர் மண்டபத்தில் இடம் பெற்றபேதே பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப்பாட சலையின்…

Read More

யூசுப் கச்சி மரைக்கார் கலாநிதிப் பட்டம் பெற்றார்

தாராபுரம், மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்ட யூசுப் கச்சி மரைக்கார் அவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் பட்டப்பின் படிப்புப் பிரிவினால் 19.12.2016 இலிருந்து மனித உரிமையில் கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவரது ‘உண்மையறிதல் மீளிணக்கத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்:இடம்பெயர்ந்த வடபுல முஸ்லீம்களைப்பற்றிய  ஒரு தனிநிலை ஆய்வு’ என்ற ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொண்டு  இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இவர் தனது ஆரம்பக் கல்வியை தாராபுரம் அல்மினா முஸ்லீம் மகாவித்தியாலயம், எருக்கலம்பிட்டி மத்திய வித்தியாலயம் ஆகியவற்றில் மேற்கொண்டார். பின்பு  ஸ்ரீ ஜயவர்தனபுர  பல்கலைக்…

Read More

வில்பத்து வன பிரதேசங்களை முஸ்லிம்கள் அழிக்கவில்லை – திலக் காரி­ய­வசம்

வில்­பத்­துவில் வன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் அழிக்­க­வில்லை. முஸ்­லிம்கள் தாங்கள் குடி­யி­ருந்த காணி­க­ளையே துப்­பு­ரவு செய்து குடி­யே­றி­யுள்­ளனர். பொது­ப­ல­சேனா அமைப்பும், சில சூழ­லி­ய­லா­ளர்­க­ளுமே வில்­பத்து தேசி­ய­வனம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாகப் பிர­சாரம் செய்­கி­றார்காள். இதன் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பே செயற்­ப­டு­கி­றது என தேசிய சூழ­லி­ய­லாளர் அமைப்பைச் சேர்ந்த சூழ­லி­ய­லாளர் திலக் காரி­ய­வசம் தெரி­வித்தார். சிவில் அமைப்­பு­களும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் கலந்து கொண்ட வில்­பத்து விவ­காரம் தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு ரமடா ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில்…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கையளிப்பு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இவ் வேலைத்திட்டங்கள் அனைத்தும் பிரதி அமைச்சரின் 11.9 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தியாவட்டவான், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம்…

Read More

களுமுந்தன்வெளி பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

அண்மையில்களுமுந்தன்வெளி யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் தேவசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 4 லட்சம் பெறுமதியான தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கண்ணன், முஸ்தபா கலீல், சித்திரவேல் மற்றும் பயனாளிகளும் கலந்து…

Read More