Headlines

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழில் திறப்பு

இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே….

Read More

விவசாய நடவடிக்கைகளில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி மலர்ச்சியை ஏற்படுத்துவோம் – மன்னார் களஞ்சியசாலைத் திறப்புவிழாவில் அமைச்சர் ரிஷாட்!!!

(அமைச்சின் ஊடகப்பிரிவு) விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி அந்தத் தொழிலை பாரிய இலாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே நல்லாட்சி அரசின் நொக்கமாகுமென்றும் அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று மாலை (26. 01. 2017) திறந்து வைத்த நிகழ்வில் இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்…

Read More

வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனால் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது!!!

வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி போன்றன…

Read More

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம் யாழில்!!!

பாறுக் ஷிஹான்–  இலங்கை வெளிவிவகார  அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்  இன்று முற்பகல் 10.30 மணியளவில்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால்  திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,  வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ,…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்திப்பு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன வசதிகளுடன் கூடிய பற்சிகிச்சை கூடம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன பற்சிகிச்சை கதிரை மற்றும் உபகரணங்களை கல்வி அமைச்சு அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. இதனை பொருந்தும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நூற்றாண்டு…

Read More

வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கடந்த 21.01.2017 ஆம் திகதி கோட்டைக்கல்லாற்றில் வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அண்ணாவியார் வீதி, எழுத்துக்காரன்துறை வீதி மற்றும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய ஆகியன பிரதி அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமான் கலந்து கொண்ட பேட்டி நிகழ்ச்சி (வீடியோ)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் ITN தொலைக்காட்சியில் (24/01/2017) கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது.

Read More

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கேனிநகர், வட்டவான், மாங்கேனி , பனிச்சங்கேனி , ஊரியண்கட்டு, அம்மத்தன்வெளி , பால்சேனை, புச்சாங்கேனி , கதிரவெளி, ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் 2016 ஆம்…

Read More

பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு  ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.

Read More

ரதிதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ரதிதென்ன பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா நிகழ்வு கடந்த 20.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் புகாரிதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 2.00 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி அமைக்கப்பட்டது.

Read More

வில்பத்து விவகாரம்: பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்துச் செல்ல யோசனை

மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் அறிவிப்பு அதனை மேலும் வழுவூட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கள பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்து சென்று…

Read More

வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை

-ஆதில் அலி சப்ரி – வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென்றும் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நேற்றுமுன்தினம் வில்பத்து, சிலாவத்துர, மரிச்சுகட்டிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த நேரடி விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம்…

Read More