Headlines

பிரதி அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் கையளிப்பு




கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இவ் வேலைத்திட்டங்கள் அனைத்தும் பிரதி அமைச்சரின் 11.9 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாவட்டவான், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை ஆகிய பிரதேச பிரிவுக்குட்பட்ட வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

16105692_1339280686133620_8935451301405300357_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *