Headlines

பொன்சோகாவின் பாராளுமன்ற உறுப்புரிமை முரணானது

– லியோ நிரோஷ தர்ஷன் – பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்புரிமையானது இலங்கையின் சர்வதேச பொறுப்புகூறல் உறுதிமொழிக்கு முரணானது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. (vk)

Read More

பாகிஸ்தானில் காதலர் தினம் கொண்டாட தடை

பிப்ரவரி 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இது சம்பந்தமாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:– காதலர் தினம் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே, இதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான கோப்பு உள்துறை செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. காதலர் தினம் தடை தொடர்பாக அலுவல் ரீதியாக உத்தரவு பிறப்பிக்கப்படாது. அதே நேரத்தில் நகர நிர்வாகங்களுக்கு நேரடி…

Read More

யோஷிதவுக்கு மீண்டும் விளக்கமறியல்

யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை இன்று மீண்டும் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோஷித்த உள்ளிட்ட நால்வர்  இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடுவலை நீதிமன்றில் யோசித!

சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ   உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (11) முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி ஷிராந்தி ராஜபக்ஸ, புதல்வர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட பலர் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளனர். பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பொலிஸார், விசேட அதிரடிப்படையினரோடு நீதிமன்ற வளாகத்தில்…

Read More

12 இந்திய மீனவர்கள் கைது

அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (10) கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் பயணித்த இரண்டு இழுவை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதானவர்கள் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

Read More

இனி பிரதமரிடம் நேரடியாக கேள்வி கேட்கலாம்!

ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பாராளுமன்ற அமர்வுகளின் போது, அரை மணிநேரம் பிரதமரிடம் நேரடியாக உறுப்பினர்கள் தமது கேள்விகளை கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More

மருத்துவ உதவி கோரும் ஆதிவாசிகள்

ஆதிவாசி மக்கள் சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட தாக்கங்களுக்கு பாரியளவில் உள்ளாகியிருப்பதாக ஆசிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு அவர்களுக்கு விசேட நிபுணத்துவ மருத்துவ சிகிச்சைகள் அவசியம் என சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிவாசித் தலைவர் கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ள நிலையில். இதன்படி எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை, நோய் தாக்கங்களில் இருந்து விடுபடும் வகையில் ஆதிவாசிகளுக்கு பாரம்பரிய முறையில் வாழ்வதற்கான உரிமையையும், சூழ்நிலையையும் ஏற்படுத்திக்…

Read More

31 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஒதுக்கும் அமெரிக்கா

இலங்கை அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்காக 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒது க்கும் யோச­னையை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் நிர்­வாகம் முன்­வைத்­துள்­ளது. அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்­கி­ரஸுக்கு அனுப்­பி­வைத்­துள்ள வர­வு­ – செ­லவுத்­திட்ட யோச­னை­யி­லேயே இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தித் ­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­த­லின் பின்னர் இடம்­பெற்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்­றங்­க­ளுக்கு பின்னர் இலங்­கைக்­கான அமெ­ரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்­துள்­ள­தாக அந்த…

Read More

பங்களாதேஷிற்கு பயணமாகிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்ளாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் அழைப்பிற்கு அமைய, எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை ஜனாதிபதி பங்களாதேஷ் விஜயம் செய்ய உள்ளார். குறித்த விஜயம் தொடர்பில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களும் ஏற்கனவே முன் ஆயத்தங்களை செய்து வருகின்றன. இந்த  விஜயத்தின்போது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜீ.எஸ்.பி வரிச்சலுகைத் திட்டத்திற்கு ஜேர்மன் ஆதரவு

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் ஆதரவு எமக்கு பெரும் துணையாக அமையும் என ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடாகவியலாளர்  சந்திப்பிலே அவர்  இதனைத்  தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை மீளவும் பெற்றுக்கொள்ள ஜேர்மனிய அரசாங்கம் ஆதரவளித்துள்ளது. மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில்…

Read More