Headlines

நகரப்புற சிறைச்சாலைகளை கிராமங்களுக்கு மாற்ற நடவடிக்கை

நகர பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளை, கிராமப்புறங்களுக்கு மாற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. கிராமங்களுக்கு மாற்றப்படும் சிறைச்சாலைகள், திறந்தவெளி சிறைச்சாலைகளாக செயற்படும் என அமைச்சின் செயலாளர் வி. சிவஞானஜோதி குறிப்பிட்டார். திறந்தவெளி சிறைச்சாலையில், குற்றவாளிகளை மீண்டும் குற்றமிழைக்காதவர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவ்வாறான சிறைச்சாலைகளில் சுகாதார வசதிகள் மற்றும் பராமரிப்புகளை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் காரணமாக சிறைச்சாலை அறைகளுக்குள்ளேயே கைதிகள் இருக்கவேண்டிய தேவை ஏற்படாது எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின்…

Read More

ஸிகா வைரஸ் தொடர்பில் விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்

ஸிகா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசித்தால் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஊடாக சுகாதார தரப்புகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளரான விசேட நிபுணர் டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். பிரேஸில் உள்ளிட்ட அதன் அயல் நாடுகளில் ஸிகா வைரஸ் வேகமாக பரவியிருந்ததாக  சுட்டிக்காட்டிய அவர், ஆயினும் இலங்கையில் ஸிகா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தொற்றுநோய்…

Read More

சுதந்திரக்கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவின் விசேட கூட்டம் இன்று (12) நடை­பெ­ற­வுள்­ளது. ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் இன்று பிற்­பகல் 2 மணிக்கு இந்த கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் ஒருவர் கூறி­யுள்ளார். நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள், கட்­சியின் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக இந்த கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டப்­பட உள்­ளது. மேலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்­பது தொடர்­பிலும் மத்­திய செயற்­குழு இந்த கூட்­டத்தில் இறுதி முடிவை…

Read More

மரண அச்சுறுத்தல் குறித்து நான் அஞ்சப் போவதில்லை : சபாநாயகர்

– ப.பன்னீர்செல்வம்  – ஆர்.ராம் –  எனது  அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ  அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன்.  எனவே  எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில்  நான் அஞ்சப் போவதில்லையென  சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக்  கிளப்பினார். இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய…

Read More

வடகொரியாவிற்கு இலங்கை கண்டனம்

நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் வடகொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த கண்டனம் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரியதீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனையை அடுத்து, பல உலக நாடுகள் அதனை கண்டித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை,…

Read More

அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுக்கின்றதாம்! மஹிந்த ஆதங்கம்!

அரசாங்கம், நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக்கொடுக்க முயற்சித்து வருவதாகவும் அதற்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி தனது ஊடகப் பிரிவின் ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனின் இலங்கை வருகை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியும் பிரதமரும் அவரிடம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை செய்துள்ளதாக கூறியுள்ளார். ஐக்கிய…

Read More

தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது!

தோல் மற்றும் காலணி உற்பத்தியானது இலங்கையின் ஏற்றுமதியில் பாரிய பங்கினை ஏற்படுத்தவுள்ளது! இலங்கையின் எட்டாவது சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சியானது உள்ளூர் மற்றும் சர்வதேச வாங்குபவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காட்டப்பட்டதோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முதல் முறையாக பரந்தளவில் கொள்வனவு செய்வோர் இலங்கை சந்தையில் நுழையும் வாய்ப்பும் கிட்டிருக்கின்றது. மூன்று நாட்கள் கொண்ட இச் சர்வதேச காலணி மற்றும் தோல் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் கடந்த 5 ஆம் திகதி…

Read More

பாகிஸ்தானிலிருந்து நேரடியாக தீர்வையற்ற முறையில் பாஸ்மதி அரிசி

–  ஊடகப்பிரிவு – பாகிஸ்தானிலிருந்து சுங்கத்தீர்வையற்ற முறையில் ஆறாயிரம் மெற்றிக் தொன் பாஸ்மதி அரிசியை கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு (சதொச) நேரடியாக வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் ஸர்பாஸ் அஹமட் கான் ஸிப்ரா இன்று தெரிவித்தார். அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கும் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகருக்கும் இடையில் கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தகவலை…

Read More

சுதந்திரக் கட்சியை நான் விரும்பி மைத்திரியிடம் ஒப்படைக்கவில்லை: மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பது கைச்சின்னமும் வெறும் கட்டிடம் அல்ல எனவும் மக்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனவும் தான் அந்த இடத்திலேயே இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவின் வீட்டில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களுடனான சந்திப்பில் போது அவர் இதனை கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏன் ஒப்படைத்தீர்கள் என சிலர் கேட்கின்றனர். உண்மையில் நான் கொடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் நான் தோல்வியடைந்த பின்னர்…

Read More

தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (11) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர். எதிர்வரும் 05.05.2016 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது. அத்துடன் இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிங்கள பாடலாசிரியர்…

Read More

மீனவர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களின் உயிர் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கமைய 011-2346134 மற்றும் 0722244063 என்ற இரண்டு இலக்கங்களே கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களாகும். இதேவேளை, கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பில் இந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதோடு இதன்பொருட்டு நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட 6 ஊழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த பாறூக் வபாத்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60வயது வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காத்தான்குடி டெலிகொம் வீதியைச் சேர்ந்த ஐ.எல்.எம்.பாறூக் எனும் 60 வயதுடைய நபரே குறித்த விபத்தில் மரணித்துள்ளார். இவ் விபத்து நேற்று புதன் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபர் தலையில் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்த நிலையிலேயே…

Read More