Headlines

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More

பிள்ளையானுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் உத்தரவு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி வரை (27.1.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா  உத்தரவிட்டார். கடந்த 2005.12.25ம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று…

Read More

செயிட் அல் ஹுசைன் நாடு திரும்பினார்

செயிட் அல் ஹுசைன்  டுபாய் நோக்கி பயணமானார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்  இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Read More

சொந்த இடங்களில் மீள்குடியேற்றுங்கள்! முஸ்லிம் அமைப்பு ஆர்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றி பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி வடக்கு முஸ்லிம் அமைப்பு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள்  அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

Read More

நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்!

இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் நடவடிக்கையின் போதே மேற்படி தகவல்கள் பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் உடனடியாக போலி வைத்தியர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். போலி வைத்தியர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை,…

Read More

சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை அதி­கரிப்பு

ஜன­வரி மாதத்தில் இலங்­கைக்கு வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணிகளின் எண்­ணிக்கை 24.3 சத­வீ­தத்தால் அதி­கரித்து 194,280 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இக்­கா­லப்­ப­கு­தியில் இந்­தி­யாவில் இருந்து வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து முதல் இடத்தை வகிப்­ப­துடன் சீனா இரண்டாம் இடத்தை பெற்­றுள்­ளது. அந்த வகையில் ஜன­வரி மாதத்தில் இந்­தி­யாவில் இருந்து வரு­கைதந்த சுற்­று­லாப் ­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை 28,895 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சீனாவில் இருந்து வரு­கை­தந்த சுற்­று­லாப்­ப­ய­ணி­களின் எண்­ணிக்கை கடந்த மாதத்­துடன் ஒப்­பி­டு­கையில் 122 சத­வீ­தத்தால் அதி­க­ரித்து 26,083 ஆக பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது….

Read More

ஐ.தே.க.வுக்கு ஆபத்து காத்திருக்கிறது – மஹிந்த சாபம்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்ததன் மூலம் பல நெருக்கடிகளை ஐக்கிய தேசிய கட்சிய எதிர்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா தொடர்பில் ஐ.தே.கவின் முடிவு பிரச்சினைக்குரிய ஒன்றாகும்.  இந்தப் பதவியை வழங்குவதற்கு இன்னும் எவ்வளவோ தகுதியானவர்கள் உள்ளதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதனால், அதிகம் நெருக்கடிகளை சந்திக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சிதான் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் யாராவது அதற்கு எதிராக…

Read More

சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

தேசிய ஜன­நா­யக கட்­சியின் தலை­வ­ரான பீல்ட் ­மார்ஷல் சரத் பொன்­சேகா நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொண்டார் நேற்று (10) நாடா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மான போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய முன்­னி­லையில் சத்­தி­யப்­பி­ர­மாணஞ் செய்து கொண்டார். மறைந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.கே.ஏ.டீ.எஸ்.குண­வர்­த­ன வின் மறை­வை­ய­டுத்து ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்கே சரத்  பொன்சேகா  நியமிக்கப்பட்டார்.

Read More

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை

மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும்.  எமது அறிக்கையில்  நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை.  அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத்  தெரியும்.   இது தொடர்பில்  இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான  சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற   விவகாரம்  விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை.  இது  இலங்கையின் செயற்பாடாகவே அமையும்    என்று…

Read More

மஹிந்த அணியின் கோரிக்கை சபாநாயகர் கருவினால் நிராகரிப்பு

பாரா­ளு­மன்­றத்தில் பொது எதி­ர­ணி­யாக சுயா­தீ­ன மாக செயற்ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்­டு­மென கோரிக்கை விடுத்த மஹிந்த அணி­யி­னரின் வேண்­டு­கோள் சபா­நா­ய­க­ரினால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மஹிந்த ஆத­ரவு அணி எம்.பிக்கள் சபை மத்­தியில் வந்து கூச்சல் குழப்­பத்தில் ஈடு­பட்­டனர். இக்­கூச்சல் குழப்­பத்­திற்கு மத்­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் முன்­வைத்த உள்­ளூ­ராட்சி சபை­கள் தேர்தல் திருத்த சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. 52 எம்.பிக்கள் கையெ­ழுத்­திட்டு இணைந்த பொது எதி­ர­ணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான கடிதம் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­பட்ட போதும் அதற்கு…

Read More