Headlines

இலங்கை குறித்­த வாய்மூல அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம்

இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில்  ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். ஐரோப்­பிய…

Read More

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்: டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என டிரம்ப் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் கலிபோர்னியாவில் சான் பெர்னாடினோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமானவர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என அவர் பேசினார். இது அமெரிக்கர்கள் மத்தியிலும், உலக…

Read More

உலகின் மிக சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக இத்தாலிய நாட்டின் பிரபல உணவகம் தேர்வு

உலகில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றிய செய்திகளுடன் அவற்றை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் பிரபல பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த 50 உணவகங்களை தேர்வு செய்து வருகிறது. உலகில் உள்ள சுமார் ஆயிரம் சமையல் கலைஞர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சமையல் கலை எழுத்தாளர்கள் ஆகியோர் கொண்ட தேர்வு குழுவினர் சிறந்த உணவகங்களை தேர்வு செய்கின்றனர். அவ்வகையில், கடந்த (2015) ஆண்டுக்கான தலைசிறந்த உணவகமாக இத்தாலி நாட்டின் மாடென்னா நகரில் உள்ள  ஆஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) உணவகம்…

Read More

துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் முறைப்பாடு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் சார்பாக நாளை தினம் இந்த முறைப்பாடானது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வேக்கந்தவெல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளுக்கு இத்துறைமுக திட்டமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

செல்போனில் பேச ஒபாமாவுக்கு தடை

உலகம் பயணிக்கும் வேகத்துக்கு ஏற்ப, வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுடன் தற்போது பலவிதமான செல்போன்கள் உலா வருகின்றன. ஆனால் 2010 ம் ஆண்டிற்கு முன்பு ‘பிளாக்பெர்ரி’ செல் போன்கள் ஆதிக்கம் செலுத்தின. அவை முக்கிய பிரமுகர்கள், வசதிபடைத்த செல்வந்தர்களிடம் மட்டுமே இருந்தன. ஏனெனில் அக்காலத்தில் தொழில் நுட்பத்துடன் அதிக விலைக்கு இவை விற்கப்பட்டன. இந்த ‘பிளாக் பெர்ரி’ செல்போனை தான் 2008–ம் ஆண்டில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தி வருகிறார். இவர் அதிபர் பதவி ஏற்பதற்கு…

Read More

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் தீவிரவாதி என்று அழைப்பது தவறு: டொனால்ட் டிரம்புக்கு தலாய்லாமா அறிவுரை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ள திபெத்திய மதகுரு தலாய் லாமா, சில முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் தீவிரவாதி என பொத்தாம்பொதுவாக அனைவரையும் அழைப்பது தவறு என கூறியுள்ளார். தனது மனதில் தோன்றும் கருத்தை கூறும் உரிமை டொனால்ட் டிரம்புக்கு உண்டு. ஆனால், அவரை நான் சந்திக்க நேர்ந்தால் உங்களது நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பதை விபரமாக கூறுங்கள்…

Read More

ප්‍රාදේශීය පොලිස්  ඡායාරූප ශිල්පීන්ට නව කැමරා

– නිලුපුලී – පොලිස් කොට්ඨාස 37ක  ප්‍රාදේශීය පොලිස්  ඡායාරූප ශිල්පීන් වෙත නවීන කැමරා උපකරණ බෙදා දීම ඊයේ එනම් (ජූනි 13) දින පොලිස්පති පූජිත ජයසුන්දර මහතාගේ ප්‍රධානත්වයෙන් පොලිස් මූලස්ථාන සම්මන්ත්‍රණ ශාලාවේදී පවත්වන ලදී. එම උපකරණ භාවිතා කිරීම  සම්බන්ධයෙන් දෙදින වැඩමුළුවක් අපරාධ වාර්තා කොට්ඨාසයේදී අද සහ හෙට දෙදින පැවැත්වෙන බව පොලිස් මූලස්ථානය වැඩිදුරටත් සඳහන් කරයි.

Read More

தேசிய புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு

– ஊடகப் பிரிவு – தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம் கே பி தென்னக்கோன் மற்றும் தேசிய மட்ட புத்தாக்க சபையின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டனர்.

Read More

அனைத்து மக்களதும் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே அரசின் கொள்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் வெவ்வேறு வகையான மக்கள் குழுவினர்கள் மீது வெவ்வேறு விதமாக கவனஞ் செலுத்தப்படுவதான ஒரு கருத்தினை ஒருசிலர் நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு சென்ற போதும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் செவிசாய்த்து அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது அரசின் கொள்கை ஆகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். நேற்று (12) பிற்பகல் வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே…

Read More

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டில் ஏற்படும் சிறிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் சாலாவை முகாம் வெடிப்பை மையப்படுத்தி அரசியல் லாபம் தேட பலர் முனைவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு இடர் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் 8000 டொன் ஆயுதங்கள் அழிவடைந்துள்ளதோடு, 75 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அதில் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்…

Read More

IPHONE ஐ கண்டுபிடித்தது யார்? – புதிய சர்ச்சை

ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை கண்டிபிடிக்கவில்லை என்று அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி சர்ச்சைக் கூறிய கருத்தை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் நான்சி பெலோசி “ எல்லோரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கு இல்லையா (ஐபோனை காட்டியப்படி), இதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்தும் அமெரிக்க அரசின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சியில் இருந்து வந்தது. ஜி.பி.எஸ். எல்.இ.டி. பிளாட் திரை, டிஜிட்டல் கேமரா, வயர்லெஸ் தரவு சுருக்கம் உட்பட முக்கியமான அனைத்தும் அரசின்…

Read More