Headlines

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியிலும் கடையடைப்பு

VAT உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட கண்டி மாவட்ட வியாபாரிகள் தீர்மானித்துள்ளனர். அதற்கமை, 27ஆம் திகதி முதல் கண்டி நகரத்திலுள்ள சகல கடைகளிலும் கறுப்பு நிற கொடியை பறக்கவிட தீர்மானித்துள்ளனர். அத்துடன், 29ஆம் திகதி சகல கடைகளையும் மூடிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு…

Read More

நாட்டிலுள்ள அனைவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் மின்சாரம்

நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுசெய்யப்படும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளார்.

Read More

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டையப் போகும் ஸ்கொட்­லாந்து

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரித்­தா­னியா பிரி­வ­தற்கு அந்­நாட்டு மக்­கள் ஆத­ர­வ­ளித்­துள்ள நிலையில், பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெறு­வது தொடர்­பான இரண்­டா­வது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டு­வ­தற்கு பெரு­ம­ளவில் வாய்ப்­புள்­ள­தாக ஸ்கொட்­லாந்து முத­ல­மைச்சர் நிகோலா ஸ்ரேர்­ஜியொன் தெரி­வித்தார். ஸ்கொட்­லாந்தின் விருப்­பத்­திற்கு மாறாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளதால் பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து பிரி­வ­தற்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை அந்தப் பிராந்­தியம் நடத்­து­வது ஜன­நா­யக ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்­றென அவர் வலி­யு­றுத்­தினார். இதன் பிர­காரம் ஸ்கொட்­லாந்து அர­சாங்கம் பிறி­தொரு சுதந்­திர வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்­கான…

Read More

மூடிக்கிடக்கும் நுரைச்சோலை வீடுகள் மக்கள் பாவனைக்கு

-சுஐப் எம்.காசிம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென அம்பாறை, நுரைச்சோலையில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் வீடுகளை விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும், பிரதமரும் இன்று (24/06/2016) தன்னிடம் உறுதியளித்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் அமைச்சர் இன்று (24/06/2016) பங்கேற்றார். இப்தார் நிகழ்வுக்கு முன்னதாக சாய்ந்தமருது மீனவக் குடியிருப்புக்கு விஜயம் செய்து, அங்கு வாழ்ந்துவரும் மீனவர்களையும், அவர்களின் பிரதிநிதிகளையும்…

Read More

சூடான் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி!

சூடானில் உயர்கல்வி கற்க விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். மருத்துவம், மருந்தகவியல், பல்மருத்துவம், பொறியியல், விவசாயம், கால்நடை மருத்துவம், நிர்வாகம், கணக்கியல், பொருளியல், உயிரியல், விஞ்ஞானம், மொழிபெயர்ப்பு, இஸ்லாமிய கற்கைநெறிகள், இஸ்லாமிய சட்டம் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை பின்பற்ற முடியும். 2015 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தங்களது சுயவிபரக்கோவையை 0112333563 என்ற தொலை நகலுக்கோ அல்லது overseashigherstudies@gmail.com என்ற ஈமெயிலுக்கோ உடன் அனுப்பிவைக்கவும். இந்த கற்கைநெறிகளுக்கான செலவு,…

Read More

முஸ்லிம் பெண்ணுக்கு அறிவுரை கூற முயன்ற நபர் பாடம் கற்றார்

பிரிட்­டனின் வேல்ஸ் பிராந்­தி­யத்தில் பஸ்ஸில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த முஸ்லிம் பெண் ஒரு­வ­ருக்கு பிரித்­தா­னிய கலா­சாரம் குறித்து அறி­வுரை கூற முயன்ற நபர் ஒருவர், தானே பாடம் கற்­றுக்­கொண்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. நியூபேர்ட் நக­ரி­லி­ருந்து சிவம்­பிரன் நகரை நோக்கி சென்­று­ கொண்­டி­ருந்த மேற்­படி பஸ்ஸில் பெண்­ணொ­ருவர் தனது மக­னுடன் உரை­யாடிக் கொண்­டி­ருந்தார். அப்பெண் முஸ்லிம் கலா­சா­ரப்­படி நிகாப்பும் அணிந்­தி­ருந்தார். இவர்கள் ஆங்­கிலம் அல்­லாத வேறொரு மொழியில் உரை­யா­டு­வதை அவ­தா­னித்த ஆங்­கி­லேய நபர் ஒருவர், மேற்­படி பெண்­ணுக்கு அறி­வுரை…

Read More

அபாயா (Poem)

– நிஷவ்ஸ் – எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா என்னென்று சொல்வதடி கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள் கண்ணுக்குள் குத்துதடி அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு அள்ளுறார் நியாயமாடி பிஞ்சுக்கு கவுண் வாங்கக் காசில்லா பெற்றோரும் உள்ளாரடி நெஞ்சையும் உடம்பையும் நெருக்கி இறுக்கி உடுக்கின்ற அபாயாக்கள் இது ஹிஜாபா இல்லை நடிப்பா அடி மார்க்கத்தை மலிவாக்கிறார். (அடி..) போட்டிக்கு விலை கொடுத்து வாங்குகிறார் காட்டிக் கலர்ஸ் போட மாட்டிட்டு முழிக்கின்றார் சில கணவர் மாட்டுக்கு புரியலைன்னு கார்ட்டுக்கும் கடனுக்கும் கனக்க…

Read More

27 நாடுகள் கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம்: ஐரோப்பிய யூனியன் தலைவர்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் அங்கம்…

Read More

சோமவன்சவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விரிவான வேலைத்திட்டங்கள் மூலம் கட்சியை அபிவிருத்தி செய்யவுள்ளதாக புதிய தலைவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப் போவதில்லை என்றும்,கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சில நாட்களுக்குள் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் மக்கள் தொழிலாளர்கட்சியின் புதிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More

ஒலிம்பிக் தின ஓட்டத்தை பிரேஸில் தூதுவர் ஆரம்பித்து வைத்தார்

சர்வதேச ஒலிம்பிக் குழு ஸ்தாபிக்கப்பட்ட தினத்தை குறிக்கும் முகமாக உலகளாவிய ரீதியில் ஜூலை 23ஆம் திகதி ஒலிம்பிக் தின ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் காலி நகரில் நேற்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டதுடன் வரைதல் போட்டி, ஒலிம்பிக் தின ஓட்டம் என்பன நடைபெற்றன. சர்வதேச ஒலிம்பிக் குழு 1894இல் ஜூன் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஒலிம்பிக் தினம் பிரகடனப் படுத்தப்பட்டது. மேலும் நவீன ஒலிம்பிக் அமைப்பின் பிறப்பைக் கொண்டாடுவதும்…

Read More

அதிகமான செல்வங்கள் இருப்பது ஆசிய மக்களிடமே

உலகிலேயே அதிகமாக செல்வத்தை வைத்திருப்பவர்கள் ஆசியர்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. Capgemini என்ற நிதி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2015ஆம் ஆண்டின் ஆய்வின்படி ஆசிய செல்வந்தர்களின் பணமானது 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக் காலப்பகுதிகளில் வட அமெரிக்காவில் உள்ள செல்வந்தர்களின்பணமானது 16.6 ட்ரில்லியன் அமெரிக்க டொலராகவும், ஆசிய செல்வந்தர்களின் பணம் 17.4 ட்ரில்லியனாகவும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை கடந்த 2014 ஆம்…

Read More