டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!
துரிதமாக பரவிவரும் டெங்கு நோயை தடுப்பதற்கான கிரமமான வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாடு முழுவதும் டெங்கு நோய்த் தொற்று துரிதமாக பரவி வருகின்றமையை தொடர்ந்து இதற்குத் தீர்வு காணும் வகையிலே வீடுகள் தோறும் சென்று டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை இனங்கண்டு அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய இன்று முதல் குறித்த சிரமதானப் பணிகளில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சிவில் பாதுகாப்பு…
