Headlines

ஷாகிர் நாயக்கிற்கு எதிராக குதித்துள்ள தஸ்லிமா நஸ்ரின்

வங்காளதேசம் ’பீஸ் டிவி’க்கு தடை விதித்து உள்ளநிலையில், அந்நாட்டில் அமைதி நிலவும் என்று பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறி உள்ளார். 22 பேர் கொல்லப்பட்ட டாக்கா பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகள் ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் பயங்கரவாத தாக்குதலுக்கு தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டு கொண்டது. இந்தியா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. வங்காளதேச உள்துறை அமைச்சகமும் இதுதொடர்பான ஆய்வை…

Read More

மீண்டும் நாளை கூடும் கோப்குழு

பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் (கோப்குழு) பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவானது தனது விசாரணை நடவடிக்கைகளுக்காக மீண்டும்  நாளை கூடவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்திநெத்தி தேசிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் பதவிகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய பிணைமுறி விற்பனை மோசடி குறித்து கோப் குழுவில் அங்கம் பெறும் எமது குழுவினர் மும்முரமான விசாரணைகளை முன்னெடுத்து…

Read More

கச்சதீவை இந்தியா ஒருபோதும் கோரமுடியாது

கச்­ச­தீவை இந்­தியா மீண்டும் பெற வேண்­டு­மானால் இலங்­கைக்கு எதி­ராக போர் தொடுக்க வேண்டும். அதை­வி­டுத்து வேறு வழி­யில்லை எனத் தெரி­வித்­துள்ள தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார, தமிழ்­நாட்டு மக்­களின் உண்­மை­யான பிரச்­சி­னை­களை மூடி­ம­றைக்­கவே கச்­ச­தீவை மீட்போம் என்ற விட­யத்தை ஜெய­ல­லிதா முன்­வைக்­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக டாக்டர் வசந்த பண்­டார மேலும் கூறு­கையில், 1976 ஆம் ஆண்டு இந்­திய பிர­த­ம­ரான இந்­தி­ரா­காந்­தியால் சட்­ட­ரீ­தி­யாக உடன்­ப­டிக்கை மூலம் அன்­றைய இலங்­கையின்…

Read More

கொரியா செல்கிறார் மஹிந்த!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சில தினங்­களில் தென்­கொ­ரியா­விற்கு விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வருவதாகவும் தென்கொரியாவில் வசிக்கின்ற இலங்கையர்களை சந்திப்பதற்கு இதன்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பொது எதி­ரணி புதிய கட்­சி­யொன்றை ஆரம்­பிக்­கப்­போ­வ­தாக தெரிவிக்கப்பட்டு வரு­கின்ற நிலை­யிலும் நிழல் அமைச்­ச­ரவை அமைக்­கப்­பட்­டுள்ள சூழ­லிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­கொ­ரி­யா­விற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவி இழந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த…

Read More

நாமல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ 70 மில்லியன் மோசடி தொடர்பில் இன்று (11) நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்க்ஷ,இலங்கையின் முதன்மையான விளையாட்டு கழகத்தின் ரக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து நன்கொடை கேட்டுள்ளார். இருப்பினும் இந்த பணம் தனிப்பட்ட வங்கி கணக்குகளின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காகவே நாமல் இன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,இந்த…

Read More

கோதபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்கு மூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். கோதபாய ராஜபக்ச கடந்த ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகள் அரசியல் ரீதியான பழிவாங்கல்கள் என கோதபாய குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகின்றார்.

Read More

ஸ்வாமி ராமானந்த், இன்று சல்மான் பாரிஸாக…!

இந்து மத பற்றாளராக இருந்தவர் ஸ்வாமி ராமானந்த். இந்துத்வா எந்த அளவு இந்து மதத்தை சிதைத்து வருகிறது என்று கண் கூடாக கண்டார். இந்து மதத்தில் வெறுப்புற்று இறை தேடலில் மூழ்கினார். முடிவில் இஸ்லாம் அவருக்கு வழி காட்டியது. இஸ்லாமிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார். தனது பெயரையும் சல்மான் ஃபாரிஸ் என்று மாற்றிக் கொண்டார். இறைவன் இவரை பொருந்திக் கொள்வானாக! மோடி, அமீத்ஷா போன்ற வன்முறையாளர்கள் தங்களின் மெகா ஊழலை மறைப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்ப…

Read More

கர்ப்ப காலத்தில் பேரீச்சம் பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. கர்ப்ப காலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது தாய்க்கு மட்டுமின்றி, கருவில் வளரும் குழந்தைக்கும் நல்லது. இதற்கு பேரிச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஏராளமான சத்துக்கள் தான் காரணம். மேலும் இதில் கொழுப்புக்கள் மிகவும் குறைவு. இப்போது பேச்சரிம் பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிடுவதால் அதிகளவு நன்மைகள் கிடைக்கும். பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்….

Read More

ஜனாதிபதி இன்று மட்டக்களப்பில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது விளையாட்டுத் துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நகர…

Read More

இத்தாலி, சீனப்பிரஜைகள் மீது குளவித்தாக்குதல்

சீகிரியாவை பார்வையிடுவதற்காக சென்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மீது குளவி கொட்டியதில், பாதிக்கப்பட்டவர்கள் கிஓஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், சீனப்பிரஜைகள் 7பேர், இத்தாலிப்பிரஜைகள் இருவர் மற்றும் பிபிலையைச்சேர்ந்த 16பேர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுச் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

‘குடும்பத்தில் அனைவரும் தற்போது பாதுகாப்புடன்’ என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆட்பதிவுத்திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதியின் ஊடக பிரிவின் பொதுநிர்வாகம் மற்றும் நிர்வாக அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொழும்பு நகரசபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் என்பன ஒன்றினைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை முப்படையினர், கொழும்பு நகரசபை, அரச நிறுவனங்கள் என்பன சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன….

Read More

மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்தும் கோரிக்கையை இங்கிலாந்து நிராகரித்தது

ஐரோப்பிய யூனியனில் நீடிப்பது தொடர்பான விவகாரத்தில் மீண்டும் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துவிட்டது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கலாமா? அதிலிருந்து வெளியேறலாமா? என்பது குறித்து கடந்த மாதம் 23-ந்தேதி அந்நாட்டு மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெளியேறலாம் என்று 52 சதவீதம் பேரும், நீடிக்கலாம் என 48 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதற்கு இங்கிலாந்து அரசு முடிவு…

Read More