பஸ் டிப்போ ஊழியர்கள் சம்பள நிலுவை வழங்கக்கோரி போராட்டம்!
இரத்தினபுரி பஸ் டிப்போ ஊழியர்கள் இரு மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி 440 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி பஸ் டிப்போ ஊழியர்கள் இரு மாத நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி 440 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகம் , தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொம் மலினோவஸ்கி இம்மாதம் 12 தொடக்கம் 20 ஆம் திகதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என அமெரிக்க இராஜங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இலங்கையின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு சிவில் சுமூகத்தினரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளின் போது நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் அதேவேளை இந்த செயற்பாடுகளின் முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் 70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில் தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலை கூண்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (10) பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோ…
எரிபொருள் வகைகளில் சிலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கனியவள மற்றும் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். அதனடிப்படையில் இந்திய எரிபொருள் நிறுவனங்களினால், Xtra Premium Euro3 மற்றும் Extra Mile ஆகிய எரிபொருட்களின் உற்பத்தி விலைகள் 2 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவினை உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் பிறப்பித்துள்ளார். எந்தவொரு சரியான ஆதாரங்களும் இன்றி தான் கைதுசெய்யப்பட்டமை தனது அடிப்படை உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்தும், அதற்கான நஷ்டஈட்டினை வழங்கக்கோரியும் அடிப்படை உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றத்தில் கம்மன்பில தாக்கல்…
பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் பயன்படுத்துவதற்காக விசேட தீர்வையற்ற வாகனங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை பிரதியமைச்சர் நிமல் லன்சா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தான் 85 இலட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வி8 வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக நிமல் தெரிவித்தார். இதேவேளை, தன்னுடைய சொந்த பணத்தில் டொயோட்டா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக தலதா அத்துகோரள தெரிவித்தார். இவை,…
பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கொழும்பு நாலன்தா கல்லூரியின் அதிபர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாலன்தா கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்ட அதிபரான ரஞ்சித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. vk
நான்கு சிறைச்சாலை காவல் அதிகாரிகளை தஹாய்யகம பிரதேசத்தில் வைத்து தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்களை அனுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளை இளைஞர்கள் முடி வெட்டும் நிலையமொன்றில் வைத்து தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 21 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாக்கப்பட்ட சிறைச்சாலை காவல் அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், 16 நிபந்தனைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதால், இலங்கைக்குச் சாதகமான பல நன்மைகளை எதிர்பார்க்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்குமா, இல்லையா என்பது தொடர்பில், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை…
ஒன்றிணைந்த எதிரணியின் நிழல் அமைச்சரவையானது, தவறான வார்த்தைப் பிரயோகத்தாலேயே பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, அந்த அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து தான் விலகியதும் அமைச்சரவையும் இல்லாமல் போய்விட்டது என்றும் கூறினார். வென்னப்புவ, சிறிகம்பளை போதிருக்காராம விகாரையில் , சனிக்கிழமை இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய மஹிந்த, மேற்படி நிழல் அமைச்சரவை தொடர்பில், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,…