Headlines

அனைவரும் கை­கோர்க்க வேண்டும் – ரிஸ்வி முப்தி

இந்­நாட்டு முஸ்­லிம்கள் தமது முன்­னோர்­களால் பெற்றுத் தரப்­பட்ட உரி­மை­களைப் பாது­காத்துக்  கொள்­வதில் அர­சியல் மற்றும் பிரி­வு­களை மறந்து கை­கோர்க்க வேண்டும். கிடைத்­துள்ள உரி­மை­களைப் பறி­கொ­டுத்து விடாது  உள்­ளதைப் பாது­காத்துக் கொள்­வதில் நாம் நிதா­ன­மாக செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு தலை­வ­ராக மீண்டும் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்­லிம்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வரு­டாந்த மாநாடும் புதிய நிர்­வா­கிகள்…

Read More

ஆட்சியை கவிழ்க்கலாமென கனவு காண்கிறது மஹிந்த அணி

ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என  மகிந்த தலைமையிலான குழுவினர் கனவு காண்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது பாதயாத்திரை செல்வதாலோ அல்லது பொது எதிரணியினரை அமைத்து கூச்சல் போடுவதாலோ ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என மஹிந்தவும் அவரது புதல்வர்களும் அவர்களை சுற்றியுள்ள கூட்டணியினரும் கனவு காண்கின்றனர். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு எம்மை அசைக்க முடியாது. பொது எதிரணியுடன் ஒட்டிக்கொண்டு அரசியல்…

Read More

முரளி கூறும் அதிர்ச்சி தகவல்!

அவுஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக இருப்பதால் என்னை துரோகி என கிரிக்கெட் சபை கூறுமானால், இலங்கையில் உள்ள சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்றுவிப்பாளராக வாய்ப்பு கொடுக்காத கிரிக்கெட் சபை அதைவிட பெரிய துரோகி என இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியா அணிக்கு நான் போட்டிக்கு முன்னதான 10 நாட்களுக்கு மாத்திரமே பந்துவீச்சு ஆலோசகராக பணிபுரிகிறேன். அவுஸ்திரேலிய அணி என்னை முழுத்தொடருக்கும் ஆலோசகராக பணிபுரிய வேண்டும் என்று…

Read More

எனக்கு பயம் இல்லை – ஜாகீர் நாயக்

இந்திய மதவாத ஊடகங்களினால்  தீவிரவாத்தை ஊக்குவிப்பதாக அபாண்டத்திற்கு ஆளாகி இருக்கும் மத போதகர் ஜாகீர் நாயக், சவூதியில் தங்கி இருக்கிறார். இவரை இந்தியா டுடே தொலைக்காட்சி நிருபர் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய மீடியாக்கள்தான் என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்தியாவுக்கு வர பயமா என்றால், எனக்கு பயம் இல்லை. இதுவரை ஒரு இந்திய அரசு அதிகாரிகூட என்னைத் தொடர்புகொள்ளவில்லை. எனவே, மதவாத ஊடகங்கள் நடத்தும் விசாரணைக்கு நான் வரத்தேவையில்லை. நான்…

Read More

யாகூவின் முடிவு இப்படியாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை!

இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் வெரைஸான் தொலைத்தொடர்பு…

Read More

ஒபாமா நிர்வாகத்தை குறை கூறும் அண்ணன் – எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடபோவதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (வயது 57). இவர் அதிபர் ஒபாமா தந்தையின் மற்றொரு மனைவிக்கு பிறந்தவர். கென்யா நாட்டை சேர்ந்த இவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேன்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் ஓட்டுரிமை உள்ளது. ஆனால், வருகிற அதிபர் தேர்தலில் ஒபாமா கட்சி வேட்பாளர் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு ஓட்டு போடப் போகிறேன் என மாலிக்…

Read More

பரிசுப் பொருட்களில் மயங்காத சுலைமான் (அலை)

அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது. உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள். அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து…

Read More

நேபாள பிரதமர் ராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. ஒளி இன்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.ஒளி. இந்நிலையில் கூட்டாட்சி நடைப்பெற்று வந்த அந்த நாட்டில் கே.பி. ஒளிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக நேபாளி காங்கிரஸ் (NC) மற்றும் சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. கே.பி. ஒளி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அவை குற்றம்சாட்டின. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், தனக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்காது…

Read More

கலைக்கப்படவுள்ள துருக்கியின் பாதுகாப்புபடை!

துருக்கியில் அதிபரின் பாதுகாப்பு படை கலைக்கப்படும் என பிரதமர் பினாலி யில்டிரிம் அறிவித்துள்ளார். துருக்கியில் கடந்த 15-ந் தேதி ராணுவத்தில் ஒரு பிரிவினர், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முயற்சியை துருக்கி அரசு பொதுமக்கள் துணையுடன் முறியடித்தது. இந்த ராணுவ புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ராணுவத்தினர், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு…

Read More

வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்!

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம். மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர்….

Read More

பர்தாவை நீக்காவிட்டால் வேலை இல்லை!

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் தலை முக்காடை நீக்கும் வரை வேலை கிடையாது என நகைக் கடையில் இஸ்லாமிய பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். 2008ம் ஆண்டு குவைத்தில் இருந்து குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு அகதியாக வந்தவர் மோனா அல்பால்தி(25). அவர் நியூசிலாந்தில் அவான்டேல் பகுதியில் வசித்து வருகிறார். டிப்ளமோ படித்துள்ள அவர் நகைக்கடையில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முக்காடு இஸ்லாமிய பெண்ணான மோனா தலையில் முக்காடு அணிந்தபடி வேலைக்கான நேர்காணலுக்காக ஆக்லாந்தில் உள்ள ஸ்டூவர்டு டாசன்ஸ் கடைக்கு சென்றுள்ளார்….

Read More

1000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கான நியமன கடிதம்

இதுவரை காலமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத ஆயிரத்து 34 வைத்தியர்களுக்கும், சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் நியமன கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சின் கீழ் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வொன்றில் வைத்தே இந்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிகழ்வின் போது, பிரதி சுகாதார அமைச்சர் பைசல் ஹாசிம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனுர ஜயவிக்ரம ஆகியோர் கலந்துக் கொள்ள…

Read More