அனைவரும் கைகோர்க்க வேண்டும் – ரிஸ்வி முப்தி
இந்நாட்டு முஸ்லிம்கள் தமது முன்னோர்களால் பெற்றுத் தரப்பட்ட உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அரசியல் மற்றும் பிரிவுகளை மறந்து கைகோர்க்க வேண்டும். கிடைத்துள்ள உரிமைகளைப் பறிகொடுத்து விடாது உள்ளதைப் பாதுகாத்துக் கொள்வதில் நாம் நிதானமாக செயற்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாகிகள்…
